India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
127 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கோத்ரெஜ் குழுமம், 2ஆக பிரியவுள்ளது. கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை ஆதி கோத்ரெஜ் மற்றும் அவரது சகோதரர் நாதிர் ஆகியோரும், கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் குழுமத்தை ஜம்ஷித் கோத்ரெஜ், ஸ்மிதா ஆகியோரும் நிர்வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல வருட பங்கு உரிமைப் பிரச்னை சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது. செபி ஒப்புதல் கிடைத்ததும் இதற்கான மற்ற பணிகள் தொடங்கும்.
குஜராத் மாநிலம் அல்தான் பகுதியில் 50 மாணவர்களுடன் பயணித்த தனியார் பள்ளிப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பேருந்தில் இருந்த 1 – 12ஆம் வகுப்பு மாணவர்கள் பயத்தில் அலறிய நிலையில், சிலர் காயம் அடைந்தனர். இந்நிலையில், ஓட்டுநர் மதுபோதையில் இருப்பது அறிந்ததை அடுத்து, 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஓட்டுநரை வலுக்கட்டாயமாகப் பேருந்தை நிறுத்தச் செய்து மாணவர்களைக் காப்பாற்றினார்.
கர்நாடக பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பது வெட்கக்கேடானது என ராகுல் காந்தி கண்டித்துள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள JDS கட்சியின் வேட்பாளர் பிரஜ்வால் நாட்டை விட்டு எப்படி வெளியேறினார் என கேள்வி எழுப்பிய ராகுல், எல்லாம் தெரிந்திருந்தும் வாக்குக்காக கைசர்கஞ்ச் முதல் கர்நாடகா வரையில் உள்ள, வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மோடி பாதுகாப்பு அளிக்கிறார் எனச் சாடினார்
கடந்த ஆண்டு கர்நாடக அரசுப் பேருந்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி பெங்களூருவுக்கு பயணித்தார். அப்போது, அவர் கொண்டு சென்ற சமையல் எண்ணெய்க்கு ₹200 லக்கேஜ் கட்டணம் செலுத்தும்படி நடத்துநர் கேட்டுள்ளார். அவர் ₹50 தர முன்வந்ததால், பாதி வழியிலேயே இறக்கிவிடப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் அவருக்கு ₹1 லட்சம் இழப்பீடு வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது என சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மோடி அல்லாத வேறு ஒருவர் அந்த பதவிக்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற அவர், மோடி ஆட்சியில் இந்தியாவில் எந்தவொரு துறையும் வளர்ச்சி அடையவில்லை என்றார். மேலும் பேசிய அவர், பிரதமரின் பொறுப்பற்ற ஆட்சியால், இந்தியாவுடன் நட்பாக இருந்த நாடுகள் கூட, தற்போது எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிபொருட்களை இறக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில், மேலும் சிலர் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, குவாரியின் உரிமையாளர் தலைமறைவான நிலையில், தீவிர தேடுதலுக்கு பின் போலீசார் அவரை கைது செய்தனர்.
70,772 கிலோ ஹெராயின் காணாமல் போனது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 – 2020 வரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள் காணாமல் போன விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரி பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் வழக்குத் தொடுத்திருந்தார். காணாமல் போன 70,772 கிலோ ஹெராயினின் மதிப்பு ₹5 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மதம், சாதிக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டுமே தவிர, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளக் கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இஸ்லாமியர்கள் குறித்து மோடி பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “வாக்கு வங்கிக்காக மத அரசியல் செய்யும் பிரதமரைக் கண்டிக்கிறோம். அதிமுகவைப் பொறுத்தவரை அது வெறுப்புப் பேச்சு. அவசியப்படும் இடங்களில் பாஜகவை வன்மையாகக் கண்டிப்போம்” என்றார்.
ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி வளர்ந்த சென்னை நகரின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று ‘பிராட்வே’ சாலை. வட சென்னையை மத்திய சென்னையுடன் இணைக்கும் இந்த சாலையின் தெற்கு முனையில்தான் பிரம்மாண்ட ‘பிராட்வே பேருந்து நிலையம்’ அமைந்துள்ளது. கோயம்பேடு, கிளாம்பாக்கம் ஆகிய நவீன சென்னை புறநகர் பேருந்து நிலையங்களுக்கு முன்னோடி பிராட்வேதான். தற்போது இதனை நவீனமாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும், அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பம் செய்து காத்திருக்கும் 2.24 லட்சம் குடும்பங்களுக்கும், ஸ்மார்ட் கார்டு தொலைந்தவர்கள், திருத்தம் செய்தவர்களுக்கும் புதிய கார்டு தடையின்றி கிடைக்கும் எனத் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.