India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்த நாளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை, அனைவரும் ஏற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அம்பேத்கரை போற்றி அவர் வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம். சாதி – சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாளச் சின்னமாக விளங்குகிறார் என்று தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், திமுக, அதிமுக, பாஜக என மூன்று பெரும் கட்சிகளும் நட்சத்திர பேச்சாளர்களின் பிரசாரத்துடன் நிறுத்திவிடாமல், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு பணத்தை வாரி செலவழித்து வருகின்றன. அத்துடன், முக்கிய யூட்யூபர்களிடம் ஆதரவாக கருத்து தெரிவிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
சிஏஏ, புதிய வேளாண் சட்டம், உதய் மின் திட்டம் போன்ற மத்திய பாஜக அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த இபிஎஸ்ஸை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பாஜக கூறியவுடன் உடனே டெல்லிக்கு ஓடிச் சென்று ஆதரவு தந்தவர். பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ள இபிஎஸ்ஸின் செயலை இனியும் மக்கள் நம்ப ஏமாளிகள் அல்ல என விமர்சித்துள்ளது.
லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ரிஷப் பண்ட் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். லக்னோ அணி பேட்டிங் செய்த போது, 4வது ஓவரை இஷாந்த் ஷர்மா வீச அதனை படிக்கல் எதிர்கொண்டார். அப்போது ஒரு பந்து படிக்கல்லுக்கு லெக் சைடில் சென்றது. கள நடுவர் அதற்கு வைடு (Wide) கொடுத்தார். அதற்கு பண்ட் ரிவியூ கேட்டார். ரிவியூவிழும் வைடு என வந்ததால், கோபமடைந்த பண்ட் கள நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘THE GOAT’. செப்.5ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே, படத்தின் முதல் பாடல் ஏப்.14ல் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில், ‘நாளை சம்பவம் உறுதி’ என பதிவிட்டுள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பிரதமர் மோடி குடும்ப அரசியல் செய்யவில்லை, நாட்டு மக்களை குடும்பமாக பார்ப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நீலகிரியில் எல்.முருகனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட அவர், ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான அனைத்தையும் பிரதமர் மோடி செய்து வருவதாக கூறினார். சுய உதவி குழுக்களில் உள்ள அனைத்து பெண்களும் பயனடையும் வகையில் மோடி கேரண்டி மூலம் கடன் வழங்கப்படுவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
▶புனே வாரியர்ஸ் – 11 (2012-13) ▶டெல்லி டேர்டெவில்ஸ் – 11 (2014-15) ▶புனே வாரியர்ஸ் – 9 (2013) ▶கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 9 (2009) ▶மும்பை இந்தியன்ஸ் – 8 (2022) ▶டெல்லி டேர்டெவில்ஸ் – 8 (2012-13) ▶ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 7 (2019) ▶புனே வாரியர்ஸ் – 7 (2011) ▶டெக்கன் சார்ஜர்ஸ் – 7 (2008)
தமிழ் புத்தாண்டையொட்டி, நாளை லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் டைட்டில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினியின் ‘தலைவர் 171’ படத்திற்கான டைட்டிலாக இருக்குமா? என கேள்வி எழுந்துள்ளது. ஆனால், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் ஏப்.22 வெளியாகும் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டில் கூறப்பட்டது. அதனால், இது லோகேஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் எனவும், அதன்பின் மழை படிப்படியாக குறைந்து வெப்பம் அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் நிலவுவதால், ஈரான் வான்வழியை ஏர்-இந்தியா விமானங்கள் தவிர்த்துள்ளன. சிரியாவில் நடந்த தாக்குதலில் ஈரான் தளபதிகள் பலியானதற்கு பழிவாங்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த போவதாக ஈரான் அறிவித்தது. திருப்பி தாக்குவோம் என இஸ்ரேலும் அறிவித்திருப்பதால், போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஈரான் வான் வழியை ஏர்-இந்தியா விமானங்கள் தவிர்த்து வேறு வழியில் செல்கின்றன.
Sorry, no posts matched your criteria.