India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை
▶குறள் எண்: 132
▶குறள்: பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
▶பொருள்: எந்தெந்த வழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும், வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை. அதனை, எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் காக்க வேண்டும்.
நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த பாரத் குமார் ராஜ்புத், 2 முறை நீட் தேர்வு எழுதியும் தேர்வாகவில்லை. இதனால், தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு, “மன்னித்து விடுங்கள் அப்பா. இம்முறையும் என்னால் நீட் தேர்வை சரியாக எழுத முடியாது” என உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல், 36ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்தவாறு காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்ற காவலை ஜூன் 4ஆம் தேதி வரை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று முதல் மே 5ஆம் தேதி வரை ‘மங்காத்தா’ திரைப்படத்தை சன் எக்ஸ் டி OTT தளத்தில் இலவசமாக காணாமல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அஜித் நடித்த தீனா, பில்லா ஆகியத் திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளன. 53ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் அஜித்துக்கு, சக நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இன்று (மே 1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது மகளிர் டி20 போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. 6ஆவது ஓவரின் போது (இந்தியா- 47/1 ரன்கள்) மழை குறுக்கிட்டதால், போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து DLS முறைப்படி 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
▶நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்கள், பழ வகைகளை சாப்பிட வேண்டும். ▶மோர், தயிர், தர்ப்பூசணி, இளநீர், பழச்சாறுகள் குடிக்கலாம். ▶சிறுவர்களுக்கு மோர், பழச்சாறு, பழங்களை கொடுக்கலாம். ▶பழைய சாதத்தை மோரில் கரைத்து கொடுக்கலாம். ▶கம்பங்கூழ், வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடலாம். ▶வயதானவர்கள், நீரிழிவு நோயாளிகள் மோர், எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து குடிக்கலாம். ▶குறிப்பாக, தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், உறவுகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும், படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும், விபத்தில் சிக்கிய அனைவருக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று (மே 1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
▶கோவை மக்களவைத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி
▶போலி வீடியோக்களை உருவாக்குவதில் பாஜக கில்லாடி: மல்லிகார்ஜுன கார்கே
▶பாலியல் விவகாரத்தில் சிக்கிய எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
▶தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
▶100 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
▶டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது
Sorry, no posts matched your criteria.