India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதன் விசாரணையில், தேர்தலின்போது பணம் பறிமுதல் செய்தது பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வராது என அமலாக்கத்துறை கூறியது. இதையடுத்து, ஏப்.24க்குள் அமலாக்கத்துறை உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வணிக ரீதியாக உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 51ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளதாக எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், வலுவான பொருளாதாரம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, பரந்த சந்தை வாய்ப்பு, இளையோர் எண்ணிக்கை, கொள்கை மாற்றம் நோக்கிய செயல்பாடுகள் போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யச் சிறந்த வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சந்திரசேகர் ராவின் மகள் கவிதா ஜாமின்கோரித் தாக்கல் செய்த மனு மீது மே 2ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. மதுபானக் கொள்கை மாற்ற முறைகேடு வழக்கில் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து சிபிஐ அமைப்பும் வழக்குப்பதிந்து கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமின்கோரிக் கவிதா தாக்கல் செய்த மனு மீது மே 2இல் உத்தரவு பிறப்பிக்கப்படுமென டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த பிரபல இயக்குநர் துரை இன்று உடல்நலக்குறைவால் காலமானார். கமலின் நீயா, ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள், சிவாஜியின் துணை உள்பட நாற்பதுக்கு மேற்பட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர். அவளும் பெண்தானே, பசி படங்களுக்காக இரண்டு தேசிய விருதுகள், தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குநர் விருது மற்றும் கலைமாமணி விருதுகளை வென்றவர். அவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் பலமுறை பொய்யாகி உள்ளன. அதுபோல் இந்த முறையும் பொய்யாக வாய்ப்பு உள்ளதென்று திமுக தலைவர்களில் சிலர் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. அதுபோல் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் அளிக்கப்பட்ட அழுத்தங்களைச் சமாளித்தது போல, பாஜக அழுத்தம் தரும்பட்சத்தில் அதையும் சமாளிக்கலாம் என்று தலைவர்கள் சிலர் நினைப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரசாரத்தின்போது திமுக இனி இருக்காது எனப் பிரதமர் மோடி காட்டமாகப் பேசியிருந்தார். அண்ணாமலையும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகக் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதை வைத்து பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால், தங்களுக்குக் குடைச்சல் கொடுக்கும் என்றும், கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் கைதானது போலத் தங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமோ என்றும் திமுக கலக்கத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்து 3 நாள்களான நிலையில், திமுக அலுவலகங்களில் பேரமைதி நிலவுகிறது. பாஜக மீண்டும் 3ஆவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்கும் எனப் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. அதுபோல், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 2ஜி வழக்கு உள்ளிட்ட முறைகேடு வழக்குகளின் விசாரணையை முடுக்கி விடக்கூடும் என திமுக கருதுகிறது.
தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில், பறக்கும் படை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டிற்குள் ரூ.50,000க்கும் மேல் கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், அண்டை மாநில எல்லை மாவட்டங்களில் பறக்கும் படையினர் சோதனை தொடரும் எனக் கூறிய அவர், வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக ஒவ்வொன்றாக விசாரணை நடத்தப்படும் என விளக்கமளித்தார்.
ஹமாஸ் அமைப்பின் ராக்கெட் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்குப் பொறுப்பேற்று, இஸ்ரேல் ராணுவ உளவுப்பிரிவுத் தலைவர் அஹரான் ஹலிவா ராஜினாமா செய்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நூற்றுக்கணக்கில் ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் பலியாகினர். மேலும் 250 பேரைச் சிறைபிடித்துச் சென்றனர். இதை முன்கூட்டித் தடுக்கத் தவறியதற்குப் பொறுப்பேற்று ஹலிவா பதவி விலகியுள்ளார்.
வரும் கல்வியாண்டு முதல் கல்வி உரிமைச் சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒரு கி.மீ. தொலைவுக்குள் அரசுப் பள்ளி இருப்பின் அதேபகுதியில் தனியார் பள்ளிக்கு RTE இடஒதுக்கீடு வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது. RTEக்கு அதிகத் தொகை செலவழிப்பதைக் கட்டுப்படுத்தவும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் இந்நடவடிக்கையை எடுக்க உள்ளதாகத் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.