India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெலங்கானாவில் வாக்களிக்க வந்த இஸ்லாமியப் பெண்களின் ஆதார் கார்டை சரிபார்த்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் செயல் குறித்து அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார். தான் அந்த வீடியோவை பார்க்கவில்லை என்றும், பாஜக திட்டமிட்டு இஸ்லாமியர்களின் வாக்குகளை சிதைக்க முயற்சிக்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இச்செயல்கள் அனைத்தும் அசாதுதீன் ஓவைசிக்கு உதவப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
தலித், பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் இடஒதுக்கீட்டை பறிக்க விட மாட்டேன் என்று மோடி தெரிவித்துள்ளார். பிகாரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், வாக்குகளுக்காக திருப்திபடுத்தும் அரசியலை காங்கிரஸும், ஆர்ஜேடி கட்சியும் செய்வதாகவும், அதற்கு அடிமையாகி விட்டதாகவும் விமர்சித்தார். முஸ்லிம்களுக்கே நாட்டின் சொத்துக்கள் மீது முதல் உரிமை உள்ளதென காங்கிரஸ் கூறுவதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி , கோடை வெப்பம் தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை, குமரி, தேனி, திண்டுக்கல், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மழை பெய்து வருகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமருடனான விவாதத்திற்கு ராகுல் காந்தி தயார் என கூறினார். ஆனால், பிரதமர் மோடியிடம் இருந்து பதில் வராத நிலையில், பிரதமர் தயங்குவது ஏன் என தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பிரதமருக்கு துணிவில்லாததால், விவாதத்திற்கு வரவில்லை என்ற அவர், மடியில் கனமிருப்பதாலேயே அவர் தயங்குகிறார் என சாடியுள்ளார்.
நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு சாதகமான அலை வீசுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். லடாக்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடி அலை வீசுவதால் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை காட்டிலும் இந்தத் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றார். வழக்கில் இருந்து கெஜ்ரிவால் இன்னும் விடுபடவில்லை என்பதால், அவரை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக நடிகர் தனுஷ் ₹1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். நிதி நெருக்கடி காரணமாக பல ஆண்டுகளாக கட்டப்படாமல் இருக்கும் இக்கட்டடத்தை கட்டி முடிக்க, ₹40 கோடி தேவைப்படுவதாக அண்மையில் நாசர் உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, நடிகர்கள் விஜய், கமல்ஹாசன், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் ₹1 கோடி நிதியுதவி வழங்கினார். அந்த வரிசையில் தற்போது தனுஷும் நிதியுதவி வழங்கியுள்ளார்.
தெலங்கானாவில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் ஆதார் அட்டையை வாங்கி பாஜக வேட்பாளர் மாதவி லதா சோதனை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மாதவி லதா மீது 171C, 186, 505(1)(c) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஹைதராபாத் மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்ற பிறகு, குழந்தைகளுடனான உரையாடல் பெற்றோர் மத்தியில் குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தையாக இருக்கும்போது தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டுத் தூங்கிய அனுபவம் நம்மில் பலருக்கும் இருந்திருக்கும். ஆனால், அடுத்த தலைமுறையிடம் செல்போனை கொடுத்து, அதற்கான வாய்ப்பை நாம் பறித்து விடுகிறோம். ஆனால், கதை கேட்கும்போது குழந்தைகளின் கற்பனைத் திறன் அபரிமிதமாக வளரும்.
பாஜக ஆட்சியில் நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலம் முசாபர்பூரில் பிரசாரம் செய்த அவர், பலவீனமான காங்., ஆட்சியை நாடு விரும்பவில்லை என்றார். காங்கிரஸ் ஆட்சியில் மாதம் ₹30,000 சம்பாதித்தாலும் வருமான வரி கட்ட வேண்டும் எனவும், தற்போது மாதம் ₹50,000 சம்பாதித்தாலும் ஒரு பைசா கூட வரி கட்ட வேண்டியதில்லை என்ற வரி சீர்திருத்தத்தை பாஜக ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் வெளியேறும் சூழலில் குஜராத் அணி விளையாடவுள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை சென்றவர்கள், இந்த ஆண்டு வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இன்று நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் குஜராத் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும்.
Sorry, no posts matched your criteria.