India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤ சென்னையில் பரவலாக மழை
➤ பாஜக நிச்சயம் படுதோல்வியை சந்திக்கும் – கெஜ்ரிவால்
➤ இடஒதுக்கீட்டை நிறுத்த மாட்டோம்- ராஜ்நாத் சிங்
➤ INDIA கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்போம் – மம்தா
➤ ஒடிசாவில் பாஜக ஆட்சி அமையும் – ஓம் பிர்லா
➤ ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வெற்றி
தெலுங்குப் படவுலகின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கவுள்ள ‘எஸ்விசி59’ என்ற புதிய படத்தில் சாய் பல்லவி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரிக்கும் இப் படத்தை ரவி கிரண் கோலா இயக்குகிறார். இந்த படத்தின் நடிகர்கள் & இசையமைப்பாளர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, போரூர், வளசரவாக்கம், கிண்டி, அசோக் நகர், சைதாப்பேட்டை, அண்ணாநகர், நந்தனம் உள்ளிட்ட பல இடங்களிலும் மழை பெய்துவருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இரவு 1 மணி வரை சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
ராஜஸ்தானுக்கு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் 144/9 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரியான் பராக் 48 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி, ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் அந்த அணி 5 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் சாம் கரண் 63 ரன்கள் எடுத்தார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பொழிய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அத்துடன் மே.19ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2023-24 Q4 காலாண்டில், நாட்டின் முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் ₹37,599 கோடியை ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாயாக ஈட்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் இதே காலகட்டத்தில், ₹36,009 கோடியாக இருந்த வருவாய் தற்போது 4.4% உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 31% சரிந்து ₹2,072 கோடியாக உள்ளது.
காங்கிரஸ் நாட்டில் வகுப்புவாத பிரச்னைகளை உருவாக்க நினைப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். காங்., கட்சியால் நாட்டின் வளர்ச்சி பற்றி பேச முடியாது என்ற காரணத்தால், அவர்கள் இந்து – முஸ்லீம் குறித்துப் பேசி இந்தியாவின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என விமர்சித்துள்ளார். மேலும், அவர்களைப் பொறுத்தவரை வளர்ச்சி என்பது அவர்களுக்கு வாக்களித்தவர்களின் வளர்ச்சி மட்டும்தான் என்றார்.
வைகாசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக ஐயப்பன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று சபரிமலைக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவரை சூழ்ந்துகொண்டு ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
*மேஷம் – சுபம் உண்டாகும்
*ரிஷபம் – நட்பு வட்டம் பெருகும்
*மிதுனம் – இன்பம் கிடைக்கும்
*கடகம் – ஆதாயம் ஏற்படும்
*சிம்மம் – செயலில் தாமதம்
*கன்னி – விருப்பம் நிறைவேறும்
*துலாம் – தடை உண்டாகும்
*விருச்சிகம் – வெற்றி கிடைக்கும்
*தனுசு – அலைச்சல் ஏற்படும்
*மகரம் – வெற்றிகரமான நாள் *கும்பம் – நன்மை நிகழும் *மீனம் – பக்தி அதிகரிக்கும்
‘ஈ சாலா கோப்பை நம்தே’ என்ற முழக்கம் உண்மையாக வேண்டுமானால், RCB நிர்வாகம் அந்த அணியில் உள்ள இந்திய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “ஒவ்வொரு சீசனிலும் வெளிநாட்டு வீரர்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் RCB அணி எதிர்காலத்திலாவது இந்திய வீரர்களுக்கு செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் பட்டம் வெல்ல முடியும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.