News May 16, 2024
BREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி

சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Similar News
News November 10, 2025
டெல்லி செங்கோட்டையில் தீவிரவாத சதிச்செயலா?

டெல்லி செங்கோட்டை அருகே காரில் ஏற்பட்ட வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாள்களில் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் இன்று 2 இடங்களில் 2900 கிலோ வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் செங்கோட்டையில் நடத்த கார் வெடி விபத்து தீவிரவாத சதிச்செயலா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News November 10, 2025
விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி… முடிவை அறிவித்தார்

அதிமுக, பாஜக கூட்டணியில் விஜய்யை சேர்க்க EPS திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், திமுக – தவெக இடையே தான் போட்டி என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். அதில், கட்சியினரை உற்சாகப்படுத்த எல்லா தலைவர்களும் இப்படித்தான் பேசுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால், அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சு நடப்பதை அவர் மறைமுகமாக உறுதி செய்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
News November 10, 2025
வட பசுபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு பசுபிக் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக NCS தெரிவித்துள்ளது. இது பூமியின் மேற்பரப்பில் இருந்து வெறும் 10 கி.மீ., ஆழத்தில் தான் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் ஏற்படும் ஆழமான நிலநடுக்கத்தை விட, மேற்பரப்பில் ஏற்படும் ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆபத்தானது. ஏனெனில், அவை பூமியின் மேற்பரப்பில் வலுவான அதிர்வை ஏற்படுத்தி, அதிக சேதத்தை உண்டாக்கும் என NCS தெரிவித்துள்ளது.


