India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதாக அந்த அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் அனைத்து வீரர்களும் அழுத்தத்தை உணர்வதாக தெரிவித்த அவர், அன்றைக்கு சிறப்பாக விளையாடும் அணியே வெற்றிபெறும் என்றார். ஒரு போட்டியை எப்படி சிறப்பாக முடிக்க வேண்டும் என்பதில் கோலி மிகவும் திறமையானவர் என்றும் அவர் பாராட்டினார்.
◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: கடவுள் வாழ்த்து
◾ குறள் : 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
◾விளக்கம்:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
நடிகை ராதிகா குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக உரிய நடவடிக்கையை எடுக்கும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, 2 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த நிலையில், தற்போது ராதிகாவை விமர்சித்துள்ளார். இந்த முறை அவரை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அமேதியில் ஸ்மிருதி இரானி எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார் என ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 2019 வெற்றிக்கு பிறகு ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியை எட்டிக்கூட பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டிய கெலாட், இந்த முறை மக்கள் அவருக்கு தோல்வியை தர தயாராகி விட்டார்கள் என்றார். அமேதியில் கடந்த முறை ராகுலை, 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார்.
ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். ஒடிசாவில் நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கத்தில் முன்னிலை பெற கடுமையாக போராடிய நீரஜ் சோப்ரா, இறுதியில் 82.27 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்று அசத்தினார்.
இப்போட்டியில் டி.பி. மானு வெள்ளி பதக்கமும், உத்தம் பட்டீல் வெண்கல பதக்கமும் வென்றனர்.
இன்று (மே 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி பொம்மை தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். பாஜக 400 இடங்களில் வெற்றி பெறுவது ஒருபோதும் நடக்காது என்ற அவர், பாஜகவின் தோல்வி முடிவு செய்யப்பட்ட ஒன்று எனக் கூறினார். நாட்டில் பொதுமக்களின் போராட்டங்களை தேர்தல் அதிகாரிகள் ஒருபோதும் உணர்ந்து கொள்ள போவதில்லை என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்தார்.
உதாரணமாக, சிலிண்டரில் A2024 என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த சிலிண்டர் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அர்த்தம். A-என்பது ஜனவரி-மார்ச்,B-ஏப்ரல்-ஜூன், C-ஜூலை-செப்டம்பர், D-அக்டோபர்- டிசம்பர் குறிக்கக்கூடிய காலக்கட்டங்கள் ஆகும். இதன்மூலம் சிலிண்டர் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். பரிசோதிக்கப்பட்ட பின் அடுத்த சோதனைக்கான தேதி சிலிண்டரில் ஒட்டப்படும்.
பணமோசடி வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சரின் தனிச் செயலாளர் வீட்டு வேலைக்காரரிடம் இருந்து ரூ.35 கோடியை ED அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் அமைச்சரிடம் 10 மணி நேரம் ED அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பிறகு அவரை நள்ளிரவில் கைது செய்தனர்.
இன்று (மே 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Sorry, no posts matched your criteria.