India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு நேற்று நடந்த 2ஆம் கட்டத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததால் 70%க்கும் மேல் வாக்குகள் பதிவானது. இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு பிஷ்ணுபூர் மாவட்டம் நரன்சேனாவில் குக்கி இனக்குழு நடத்திய தாக்குதலில் 2 மத்திய ரிசர்வ் படை போலீசார் உயிரிழந்துள்ளனர்.
ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியில் தேர்தலில் 72.62% வாக்குகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 67.48% வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 2019 தேர்தலை (77.84%) விட குறைவாகும். அதிகபட்சமாக கண்ணூரில் 70.76% வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், சசிதரூர் போட்டியிட்ட திருவனந்தபுரத்தில் 64.14% வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஐபிஎல் 2024 தொடரில் 9 போட்டிகளில் 7இல் தோல்வியை கண்ட RCB அணி குறித்து முன்னாள் வீரர் ஹெர்சல் கிப்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். பயிற்சியாளர்கள் முதல் வீரர்கள் வரை பல மாற்றங்களை செய்தாலும் RCB அணி கோப்பையை வெல்ல முக்கியமான ஒன்றை செய்ய தவறிவிட்டதாகக் கூறிய கிப்ஸ், மற்ற அனைத்தையும் மாற்றுவதை விட சின்னசாமி மைதானத்தின் பிட்ச்சை மாற்றுவது மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.
மேற்கு வங்கம் பிர்பூம் தொகுதி பாஜக வேட்பாளர் தேபாசிஷ் தாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த அவர், பாஜகவில் இணைந்து தேர்தலில் சீட் பெற்றார். இந்நிலையில், உரிய சான்றிதழ் இணைக்காததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளராக மனுத் தாக்கல் செய்த தேப்தனு பட்டாச்சார்யா, அத்தொகுதி பாஜக வேட்பாளராகியுள்ளார்.
தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பாக தண்ணீர் பந்தல் திறக்குமாறு நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாலும், அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதாலும் அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், மோர், இளநீர், குளிர்பானம் போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கி அவர்களின் தாகத்தை தணிக்குமாறு அறிவுறுத்தினார்.
ஐபிஎல் ரன் குவிப்பில் கொல்கத்தா வீரர் சுனில் நரைன், 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பஞ்சாப்புக்கு எதிராக நேற்று 71 ரன்கள் குவித்த அவர், ஏற்கெனவே டெல்லிக்கு எதிராக 85, ராஜஸ்தானுக்கு எதிராக 109 ரன்கள் விளாசியுள்ளார். இதையும் சேர்த்து 8 போட்டிகளில் 357 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்தார். முதலிடத்தில் கோலி (430 ரன்) உள்ளார்.
இயக்குநர் ராஜூ முருகன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் கதாநாயகனாக சசிகுமார் நடிக்கவுள்ளார். அவருக்கே உரித்தான எளிய மக்களின் வாழ்வியல் கதையை சிறிய பட்ஜெட்டில் எடுக்க ராஜூ முருகன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் சசிகுமாரிடம் அந்தக் கதையைச் சொல்லி சம்மதிக்க வைத்திருக்கிறாராம். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை வந்தவாசி எம்.எல்.ஏ அம்பேத்குமார் தயாரிக்க உள்ளார்.
பஞ்சாப், கொல்கத்தா அணிகள் கூட்டாக 523 ரன்கள், 42 சிக்சர்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளன. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, 18 சிக்சர்களுடன் 261 ரன்கள் குவித்தது. சுனில் நரேன் 71 ரன்களும், பில் சால்ட் 75 ரன்னும் விளாசினர். பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி, 24 சிக்சர்களுடன் 262 ரன்கள் குவித்து சேசிங் செய்தது. ருத்ரதாண்டவமாடிய பேர்ஸ்டோ 108, சஷாங் 62, சிம்ரன் 54 ரன்கள் விளாசினர்.
முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவுக்கு செல்வதாக வெளியான தகவல் மிகவும் தவறானது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 39 தொகுதிகளுக்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், சில இடங்களில் திமுகவுக்கு வாக்குச்சதவீதம் மாறுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில் அடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதால், அவர் மாலத்தீவு செல்லவில்லை என தெரிகிறது.
தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்யவும், முறையாக பராமரிக்கவும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். பேருந்து இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் புதிய பேருந்துகள், காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கை, பராமரிப்பில் உள்ள பேருந்துகள் குறித்து ஆய்வு செய்ய அவர் அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.