India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெயில் காலத்தில் பீர் குடிப்பது உடல் சூட்டைத் தணிக்கும் என்ற வாதத்தைப் பலர் முன் வைக்கின்றனர். ஆனால், இது தவறான புரிதல் என்கிறார்கள் கல்லீரல் மற்றும் குடல் சிகிச்சை மருத்துவர்கள். பீர் உள்ளிட்ட மதுபானங்களில் ஆல்கஹால் இருப்பதால், குளிர்ச்சியாகப் பருகினாலும், அறை வெப்பநிலையில் பருகினாலும் உடலுக்குக் கேடு தரும் எனக் கூறுகின்றனர். பீர் குளிர்ச்சி தரும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையாம்.
நாடு முழுவதும் இரண்டு கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டத் தேர்தல்களில் பாஜகவின் நிலைமை மேலும் மோசமாகும் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். முதல் இரண்டு கட்டத் தேர்தலில் பாஜகவிற்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை எனக் கூறிய அவர், பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என பாஜகவினரே கூறுவதாக விமர்சித்துள்ளார்.
யெஸ் வங்கி, கடந்த நிதியாண்டின் 4ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 123% அதிகரித்து ரூ.451 கோடியாக உயர்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.202 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருவாயைப் பொறுத்தமட்டில் 2% அதிகரித்து ரூ.2,153 கோடியாக உள்ளது. இதனிடையே, வாராக் கடன்கள் (NPA) 2.2%இல் இருந்து 1.7%ஆகக் குறைந்துள்ளன.
இமாச்சலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சட்ட விரோதமாக சொகுசு பங்களா வாங்கியுள்ளதாகப் படத்துடன் கூடிய தகவல் பரவி வருகிறது. இந்த பங்களா ‘செல்வம் மறுபகிர்வு’ திட்டத்தில் வருமா? எனவும் பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அந்தப் படம் குறித்து ஆய்வு செய்ததில் அது பிரியங்காவின் பங்களா என்பது தெரியவந்துள்ளது. ஆனால், சட்ட விரோதமாக வாங்கப்படவில்லை என்பது உறுதியாகிறது.
தமிழில் சைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்த அருந்ததி நாயர் மார்ச் 14ஆம் தேதி விபத்தில் சிக்கினார். இதையடுத்து ஐசியூவில் சிகிச்சையில் உள்ள அவரது உடல்நிலையில் தற்போது வரை முன்னேற்றம் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வேதனையில் உள்ள அவரது குடும்பத்தினர் அருந்ததியின் மருத்துவச் செலவை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சிலரது உதவியுடன் செய்து வருவதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.
நாம் தாயாக வணங்கும் பசுவைச் சிறுபான்மையினர் இறைச்சியாக உண்ண காங், அனுமதி அளிக்க உள்ளது என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரத்தை வழங்குவோம் எனத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காங்., பசுவதையைத் தடையின்றி அனுமதிக்கப் போகிறார்கள் என விமர்சித்துள்ளார். இதன்மூலம் நாட்டைப் பிளவுபடுத்த காங்., சதி செய்வதாகச் சாடியுள்ளார்.
மே 1ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல்29 ஆம் தேதி காலை 10:40 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை CSK அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளின் விலை ₹1,700, ₹2,500, ₹3,500, ₹4,00, ₹6,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மோடியும், அமித் ஷாவும் வியாபாரிகள் என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். அசாமில் பிரசாரம் செய்த அவர், பாஜக அரசு ரயில்வே, சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்களை அம்பானிக்கும், அதானிக்கும் விற்றுள்ளதாகத் தெரிவித்தார். ஏழைகளிடம் இருந்து பணத்தைக் கொள்ளை அடுத்துப் பணக்காரர்களுக்குக் கொடுப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், பிறகு நாடு எப்படி வளர்ச்சி அடையும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2,282 பில்லியன் டாலர் குறைந்து 640.33 பில்லியன் டாலராக உள்ளது. 648.56 பில்லியன் டாலருடன் உச்சத்தில் இருந்த அந்நியச் செலாவணி கையிருப்பு, 2ஆவது வாரமாகச் சரிந்துள்ளது. தங்கம் கையிருப்பு 1.01 பில்லியன் டாலர் அதிகரித்து 56.8 பில்லியன் டாலராக உள்ளது. special drawing rights பொறுத்தமட்டில், 43 மில்லியன் டாலர் குறைந்து 18.03 பில்லியன் டாலராக உள்ளது.
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சரவெடியாக வெடித்துத் தள்ளிய டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய மெக்குர்க் 84, சாய் ஹோப் 41, ஸ்டப்ஸ் 48* ரன்கள் விளாசினர். இதையடுத்து MI அணிக்கு 258 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை தரப்பில் வுட், பும்ரா, சாவ்லா, நபி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
Sorry, no posts matched your criteria.