News May 16, 2024

ரயில்களில் கடைபிடிக்கப்படும் இந்த விதி தெரியுமா?

image

தொலைதூர ரயிலில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில், லோயர் பெர்த், மிடில் பெர்த், அப்பர் பெர்த் என 3 இருக்கைகள் உண்டு. இதில் மிடில் பெர்த் இருக்கைக்கு தனி விதி உள்ளது. அதில், மிடில் பெர்த்தை பகலில் கீழே எடுத்துவிட்டு தூங்கக் கூடாது, இரவில் 10 மணி முதல் காலை 6 மணி வரையே பயன்படுத்த வேண்டும், அதன்பிறகு யாரேனும் தூங்கினால் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்க சக பயணிகளுக்கு உரிமை உண்டு எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News November 8, 2025

சஞ்சு சாம்சனை இழுக்க CSK மீண்டும் முயற்சி

image

ராஜஸ்தானிடம் இருந்து சஞ்சு சாம்சனை டிரேட் செய்ய CSK மீண்டும் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சனுக்கு மாற்றாக முக்கியமான (ஜடேஜா அல்லது துபே) வீரரை CSK-விடம் ராஜஸ்தான் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த வீரரிடம் CSK பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில், இரு அணிகளுக்கும் இடையில் டிரேடிங் நடக்கும் என்று ஐபிஎல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

News November 8, 2025

சனிக்கிழமை மட்டும் இந்த தவறை செஞ்சுடாதீங்க

image

சனிக்கிழமைகளில் சில விஷயங்களை செய்தால் சனி பகவானின் கோபத்துக்கு ஆளாவீர்கள் என ஐதீகங்கள் சொல்கின்றன. சனிக்கிழமையன்று துடைப்பம், எண்ணெய், கத்திரிக்கோல் வாங்கக்கூடாது. அத்துடன், பால் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமாம். இதனால் உங்கள் செல்வ வளம் குறையும் எனவும், உடல்நலனில் பாதிப்புகள் வரலாம் எனவும் நம்பப்படுகிறது. சனிக்கிழமைகளில் நீங்கள் எப்படி வழிபடுவீங்க?

News November 8, 2025

தமிழ்நாட்டில் இருந்து இந்த சட்டமன்ற தொகுதி நீக்கமா?

image

ECI-ன் அதிகாரப்பூர்வ ‘ECINET’ செயலியில் உடுமலை தொகுதி(125) இடம் பெறாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் தங்களது விவரங்களை ஆன்லைன் மூலம் சரிபார்த்து வருகின்றனர். ஆனால், திருப்பூர் மாவட்ட பட்டியலில் ‘Search your name in voter list’-ல் அவிநாசி, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர்(வ), திருப்பூர்(தெ) மட்டுமே உள்ளன.

error: Content is protected !!