India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மீனவர்கள் குறித்து காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கோவாவில் பிரசாரம் மேற்கொண்ட அவர், கடந்த 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர் தான் எனவும் தமது அடுத்த ஆட்சியில் இன்னும் நிறைய பணிகள் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என்ற கனவை பாஜக நிறைவேற்றும் என அவர் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83% குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக கோடைக்கால பருவமழை 53.3 மி.மீ பதிவாக வேண்டிய நிலையில், தற்போது 9.4 மி.மீ மழையே பதிவாகியுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு சில மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழையும் பெய்து வருகிறது.
லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அவர், 7 Four, 5 Six என விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக அதிக ரன் குவித்த வீரர் பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். மேலும், ஆரஞ்சு கேப்புக்கான தரவரிசையில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இன்று (ஏப்ரல் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
▶6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
▶தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல்
▶தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை: ஐபிஎஸ் குற்றச்சாட்டு
▶பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களுக்கு மோடி அரசு வஞ்சனை செய்கிறது: ஆர்.எஸ்.பாரதி
▶தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
▶IPL: டெல்லி அணி வெற்றி
நாட்டில் 70 கோடி மக்கள் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளதாகக் கூறினார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் கஷ்டம் அதிகரித்துள்ளதாக பாஜக அரசை விமர்சித்துள்ளார்.
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இதை செய்ய முடியாதவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன், வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சாப்பிடலாம். இதன் மூலம் உங்கள் பசி எண்ணம் குறைவதுடன், உடற்பயிற்சிக்கு தேவையான சக்தியையும் அது கொடுக்கிறது. மேலும், உடற்பயிற்சிக்கு முன், பால் பொருட்கள், சிட்ரஸ் பழங்கள், எண்ணெய் உணவுகள், அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
விப்ரோவின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த தியரி டெலபோர்ட் கடந்த 6ஆம் தேதி பணியில் இருந்து விலகினார். இந்நிலையில், அவருக்கு நிபந்தனையுடன் ரூ.92.1 கோடி தர விப்ரோ முன் வந்துள்ளது. நிபந்தனையின்படி, அவர் அடுத்த ஓராண்டுக்கு வேறு எந்த வேலையிலும் சேரக் கூடாது. அதேபோல, ஆலோசனைப் பணிகளிலும் ஈடுபடக் கூடாது. போட்டி நிறுவனத்தில் சேராமல் இருப்பதற்காக இந்தத் தொகை வழங்கப்படுகிறது.
கர்நாடகாவில் சாம்ராஜ் நகர் தொகுதியில் மட்டும் ஏப்ரல் 29ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கர்நாடகாவில் நேற்று (ஏப்.26) நடந்த முதற்கட்ட வாக்குப் பதிவின்போது, சாம்ராஜ் நகர் தொகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையில் வாக்குப்பதிவு இயந்திரம் சேதம் அடைந்தது. இதையடுத்து அங்கு தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் மறு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு சின்ன வெங்காயத்தைப் பச்சையாகத் தின்ற பின் தண்ணீர் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். *குழந்தைகளுக்கு வரும் இருமலை வெற்றிலைச்சாறு மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையை தொண்டை பகுதியில் தடவுவதன் மூலம் குணமாக்கலாம். *வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிந்துவிடும். நீரிழிவு நோயும் கட்டுக்குள் இருக்கும்.
Sorry, no posts matched your criteria.