India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக அரசு தமிழகத்தின் மீது தீராத வஞ்சனையோடு இருப்பதாக திமுக எம்.பி. வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்காக தமிழக அரசு ரூ.38,000 கேட்டதாகவும், ஆனால், மத்திய அரசு ரூ.276 கோடி மட்டுமே கொடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல, வன்மம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியா் ஓய்வூதிய பலன்களை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டுமென மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தனிப்பட்ட அரசு நிதி சாா்ந்த தணிக்கைத் தடை நிலுவை இல்லையென்றால், உடனடியாக 30 நாள்களுக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். பணிக் காலத்துக்கு உட்படாத முந்தைய அல்லது பிந்தைய பள்ளி சாா்ந்த தணிக்கை தடைகளுக்காக, ஓய்வூதிய பலன்களை நிறுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1611 – உலகின் மிகப்பெரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் பிலிப்பைன்ஸில் அமைக்கப்பட்டது.
1792 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரான்சு பெல்ஜியத்தை முற்றுகையிட்டது.
1788 – மேரிலாந்து அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 7ஆவது மாநிலமானது.
1920 – அஜர்பைஜான் நாடு சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
1932 – மஞ்சள் காய்ச்சல் நோய்க்கு முதல்முறையாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.
மும்பைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், டெல்லி வீரர் மெக்கர்க் ஆட்டநாயகன் வென்றுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், 11 Four, 6 Six என விளாசி வாண வேடிக்கை காட்டினார். 27 பந்துகளில் 84 ரன்கள் குவித்த அவர், தனது 3ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். இதுவரை 5 போட்டிகளில் களமிறங்கிய அவர், 55, 20, 65, 23, 84 ரன்கள் குவித்து டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.
போதைப்பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சியின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்த அறிக்கை வெளியிட்ட அவர், இபிஎஸ் ஆட்சியில் குட்கா நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறிய ஸ்டாலின், சட்டசபைக்கே குட்காவை எடுத்துச் சென்று குற்றம் சாட்டியவர். ஆனால், அவர் முதல்வரான பின், அதைத் தடுக்கவோ ஒலிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 128
▶குறள்: ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
▶பொருள்: பாலில் விழுந்த ஒரு துளி நஞ்சு, மொத்தப் பாலையும் நஞ்சாக்கிவிடும். அதுபோல, பேசும் சொற்களில் உள்ள ஒரு தீயச் சொல், அந்தப் பேச்சில் உள்ள அனைத்து நல்ல சொற்களையும் தீயவை ஆக்கிவிடும்.
கோடை விடுமுறையையொட்டி, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக, சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வியாழக்கிழமை தோறும் மே 2 முதல் ஜூன் 27ஆம் தேதி வரையும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள், மே 3 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவருக்கான பர்பிள் கேப்பை, மும்பை வீரர் பும்ரா மீண்டும் பெற்றுள்ளார். டெல்லிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், அபாரமாக பந்துவீசி ரிஷப் பண்டின் விக்கெட்டை கைப்பற்றினார். இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கான தரவரிசையில், பஞ்சாப் வீரர் ஹர்ஷல் பட்டேலை (14) பின்னுக்குத் தள்ளி (எகனாமி சதவிகிதப்படி) முதலிடத்திற்கு முன்னேறினார்.
ரஜினி, விஜய்க்கு அடுத்ததாக குழந்தைகள், குடும்பங்களைக் கவர்ந்த நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் அவர், தற்போது ஒரு படத்திற்கு ரூ.30 கோடி சம்பளமாக வாங்குகிறார். இதனால் அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.120 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ‘அமரன்’ படத்தில் நடித்துள்ள அவர், அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கை கோர்த்துள்ளார்.
இன்று (ஏப்ரல் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
Sorry, no posts matched your criteria.