news

News April 28, 2024

தேர்தல் ஆணையத்தை விமர்சித்தவர் கைது!

image

தேர்தல் ஆணையத்தை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கேரளாவின் கொச்சி மாவட்டம் கக்கனட் பகுதியை சேர்ந்த முகமது சஜி (51) தனது பேஸ்புக் பக்கத்தில், “தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, முகமது சஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சஜி, நேற்றே சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

News April 28, 2024

முத்தக்காட்சிகளில் நடிக்க விருப்பமில்லை

image

முத்தக்காட்சிகளில் நடிக்க விரும்பாத காரணத்தால், என்னைத் தேடி வந்த பல திரைப்பட வாய்ப்புகளை மறுத்தேன் என்று நடிகை மிருணாள் தாக்கூர் கூறியுள்ளார். சினிமாவில் பல படங்களை தவறவிட்டது குறித்து பேசிய அவர், “நெருக்கமான காட்சிகளில் நடிக்க எனக்கு பயமாக இருக்கும். அப்படியான காட்சிகளில், நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. அதை எனது பெற்றோரும் ஏற்கமாட்டர்கள். இதனால் பல படங்களை மறுத்தேன்” எனத் தெரிவித்தார்.

News April 28, 2024

மாவட்ட நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள்

image

மாவட்ட நீதிமன்றங்களில் நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், நகர் பிரிவு உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த பணியிடம் 2,329. விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 27, 2024. தகுதியானவர்கள் www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ₹15,000 முதல் ₹58,100.

News April 28, 2024

ஒரே நாளில் 4 தொகுதிகளில் பிரதமர் மோடி பிரசாரம்

image

கர்நாடகாவில் நேற்று முன்தினம் முதல்கட்டமாக பெங்களூரு உள்பட 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்தது. தொடர்ந்து, மே 7ஆம் தேதி மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து, 2வது கட்ட தேர்தலிலும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதையொட்டி, இன்று ஒரே நாளில் 4 தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார்.

News April 28, 2024

முறைகேடு வழக்கில் நடிகர் சாஹில் கான் கைது

image

மகாதேவ் சூதாட்ட செயலி முறைகேடு வழக்கில் நடிகர் சாஹில் கானை மும்பை கிரைம் போலீசார் கைது செய்தனர். மகாதேவ் சூதாட்ட செயலியின் விளம்பரதாரர்களுக்கு இடையே ₹15,000 கோடி வரை சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இது தொடர்பாக சாஹில் கான் விசாரணை வலையத்திற்குள் வந்ததால், முன் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்தார். அவரின் மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், போலீசார் கைது செய்துள்ளனர்.

News April 28, 2024

பட்டாசு வெடித்தால் கூட சிபிஐ விசாரணை

image

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் 2 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ கூறியிருந்தது. இதற்கு பதிலடி கொடுத்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் பட்டாசு வெடித்தால் கூட சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகள் விசாரணைக்கு வருவதாக சாடினார். மேலும், சிபிஐ சோதனையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் கூறினர்.

News April 28, 2024

IPL: 4,000 ரன்களைக் கடந்த வீரர்கள்

image

RR அணிக்கு எதிரான 44ஆவது லீக் போட்டியில்
சிறப்பாக ஆடிய LSG வீரர் KL ராகுல் 78 (48) ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் வரலாற்றில் தொடக்க வீரராக களமிறங்கி 4,000 ரன்களைக் கடந்த 5ஆவது வீரர் என்ற பெருமையை அடைந்தார். 4,000 ரன்களைக் கடந்த தொடக்க வீரர்களின் விவரம் இதோ:- ஷிகர் தவான் – 6, 362, டேவிட் வார்னர் – 5,909, கிறிஸ் கெய்ல் – 4,480, கோலி – 4,041, KL ராகுல் – 4,010

News April 28, 2024

மாணவர்களின் மன நலன் குறித்து பள்ளிகளுக்கு உத்தரவு

image

நீதிமன்ற உத்தரவுப்படி, மாணவர்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் வருடாந்திர சோஷியல் ஆடிட் நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுகிறதா, மன ரீதியில் பாதிப்பிற்கு ஆளாகிறார்களா, பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் நிகழ்வுகள் நடந்ததா உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தியுள்ளது.

News April 28, 2024

சிசிடிவி செயலிழப்பு எதைக் காட்டுகிறது?

image

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் சிசிடிவி கேமரா செயலிழந்திருப்பது தேர்தல் ஆணைய அதிகாரிகளின் அலட்சியத்தைக் காட்டுகிறது. விஞ்ஞானம் அதிநவீனம் அடைந்திருக்கும் இந்தக் காலத்திலும் அதிவெப்பம் காரணமாக கேமரா செயலிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுவது ஏற்கும்படி இல்லை. இப்படியான சம்பவங்கள்தான் ஜனநாயகத்தையே கேள்விக்குறி ஆக்குகிறது. உங்களது கருத்து என்ன?

News April 28, 2024

இரு பிரிவுகளில் கோப்பையை வென்ற இந்தியா

image

ஹம்டார்ட் ஸ்குவாஸ்டர்ஸ் நார்த்தர்ன் ஸ்லாம் தொடரில் இந்திய வீரர்கள் அனாஹத், சுராஜ் குமார் கோப்பையை வென்றுள்ளனர். டெல்லியில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்தியாவின் அனாஹத் சிங் 2-0 என்ற நேர்செட் கணக்கில், தென் கொரியாவின் ஹவேயியாங்கை வீழ்த்தினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுராஜ் 3-2 என்ற செட் கணக்கில் இலங்கையின் ரவிந்து லக் ஸ்ரீயை வீழ்த்தி, கோப்பையை கைப்பற்றினார்.

error: Content is protected !!