India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கர்நாடகா பாஜக எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், பிரஜ்வல் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தனது மதிப்பைக் கெடுக்கவும், வாக்காளர்களின் மனதில் விஷத்தை விதைக்கவும், மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் பரப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்பிற்கு உட்பட்ட அனைத்து இடஒதுக்கீட்டையும் ஆதரிப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஹைதராபாத் பரப்புரையில் பேசிய அவர், ஆர்எஸ்எஸ் இடஒதுக்கீட்டிற்கு எதிரானது என்பதைப் போன்ற வீடியோக்கள் இணையத்தில் பரவி வருவதாகக் கூறினார். அவை முற்றிலும் போலியானது என விளக்கம் அளித்த மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாகக் கூறினார்.
DC அணியிடம் MI அணி தோற்றதற்கு திலக் வர்மாவின் சிறிய அஜாக்கிரதை தான் முக்கிய காரணம் என ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். போட்டி முடிந்தப் பின் பேசிய அவர், “8ஆவது ஓவரில் அக்சர் படேல் பந்து வீசியபோது, இடது கை பேட்ஸ்மேனான திலக் அதிரடியாக விளையாடினார். ரன் ரேட்டிங்கை உயர்த்திய அவர், கவனக்குறைவால் திடீரென ஆட்டமிழந்தார். அதன் பிறகு, ஆட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தோம்” என்றார்.
அனைவரும் வாக்களிப்பது தொடர்பாக சட்டம் இயற்றுவது குறித்து அரசு பரிசீலிக்குமாறு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது குறித்து பேசிய அவர், வாக்களிப்பது குறித்து அனைவரும் கருத்து மட்டும் கூறுவதாகவும், யாரும் வாக்களிப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்தார். மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் குளறுபடி நடக்காமல் தேர்தல் ஆணையம் கண்காணிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசு சார்பில் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க மாவட்ட வாரியாக ₹500, ₹200 என பயிற்சிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இம்முகாமில் பங்கேற்கும் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் என்று கூறிய அவர், ஆர்வமுள்ள மாணவர்களை முடக்கிப்போடும் இச்செயலை உடனே கைவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து இடஒதுக்கீட்டைப் பறிக்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “மோடிக்கு நெருக்கமான பாஜக தலைவர்களின் பேச்சுகளில் இருந்து அவர்களின் நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது. பாஜகவிடமிருந்து அரசியல் சாசனத்தையும், இடஒதுக்கீட்டையும் பாதுகாக்க இறுதிவரை காங்., போராடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு நிதியாண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ₹6,304 கோடி மதிப்பிலான இந்திய பங்குகளை விற்றுள்ளனர். அதே போல, ₹10,640 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களையும் விற்றுத் தீர்த்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் 4.7%ஆக உயர்ந்துள்ளதால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி, அமெரிக்காவில் முதலீடு செய்வதாகச் சந்தைச் சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மே 9ஆம் தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். பத்ம பூஷன் விருது பெற மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்ததையடுத்து, விருதை பெற நானும், விஜய பிரபாகரும் டெல்லிக்கு செல்ல உள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த வாரம் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், விஜயகாந்த் பெயர் இடம்பெறாதது சர்ச்சையான நிலையில், 9ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.
எவரெஸ்ட், எம்.டி.எச்., போன்ற இந்திய நிறுவனங்களின் மசாலா பொருள்களின் தரத்தை அமெரிக்க உணவு பாதுகாப்பு மையம் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனங்களின் மசாலா பொருள்களில், புற்றுநோயை உண்டாக்கும் உயிர்க்கொல்லி ரசாயனம் இருப்பதாகக் கூறி, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகள் தடை விதித்தன. தற்போதைய நிலையில், அப்பொருள்களின் தரம் குறித்து அமெரிக்க அரசு ஆய்வுசெய்து வருவதாகக் கூறப்படுகிறது.
மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்துக் காங்கிரஸ் பொய்யான தகவலைப் பரப்புவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் பெலகாவியில் பிரசாரம் செய்த அவர், மின்னணு வாக்கு இயந்திர வழக்கில் காங்கிரஸை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்ததாகக் குறிப்பிட்டார். காங்கிரஸ் ஜனநாயகத்தை அழிக்க நினைப்பதாகக் கூறிய அவர், மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.