India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்தது ஏன் என திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். தற்போது உள்ள சூழ்நிலையில், காங்கிரஸின் வெற்றியை பாதிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காக விசிக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டாமல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். பெங்களூரு ஊரகம், மத்திய பெங்களூரு மற்றும் கோலார் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது.
வெளிநாட்டினர் இந்திய திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்விப் படிப்புகளில் சேருவதற்குப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தடை விதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்களுக்கான விசாக்களில் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், தொலைதூர திட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர முடியாது.
இளைஞர்கள் படிப்புடன் ஏதாவது ஒரு விளையாட்டையும் அன்றாட வாழ்க்கையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மிக இளம் வயதில் FIDE Candidates தொடரில் வெற்றி பெற்ற தமிழக செஸ் வீரர் குகேஷை வாழ்த்தி தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இளைஞர்களின் உடலையும், மனதையும் விழிப்புடனும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள விளையாட்டு உதவும் என அறிவுரை வழங்கினார்.
ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழை நிராகரித்த ராகுல், ஓட்டுக்களைப் பெற அயோத்திக்கு வரவுள்ளார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார். உ.பி.,யில் பிரசாரம் செய்த அவர், “கோவில் திறப்பு விழாவுக்கு வராமல் கடவுளுக்குத் துரோகம் செய்தவர் ராகுல். அவர் மீண்டும் அமேதியில் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரசுக்கு வாக்களித்தால் உங்களின் சொத்துக்கள் பறிக்கப்படும்” எனக் கூறினார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக விஜய் டிவியின் ஒரு அங்கமாக இருந்த மீடியா மேசன்ஸ் நிறுவனமும், வெங்கடேஷ் பட்டும் இணைந்து சன் தொலைக்காட்சியில் புதிய சமையல் நிகழ்ச்சி தொடங்கவுள்ளனர். இந்தத் தகவல் அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
உடலில் நீர்ச்சத்து குறையும்போது அதனை உயர்த்துவதற்காக வாய் வழியாகக் கொடுக்கப்படும் கலவையே ORS (Orally Rehydrating solution) எனப்படுகிறது. வெயிலில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ORS பருகலாம். அதன்மூலம் நீர்ச்சத்து, சர்க்கரை சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் உடலில் சேர்கின்றன. கடும் வெயிலை சமாளிக்க ORS கலவையைத் தமிழக அரசு இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.
இந்தியாவில் 6 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு ஒரே வாரத்தில் ₹1.30 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, எஸ்பிஐ வங்கியின் மூலதன மதிப்பு ₹45,158.54 கோடி உயர்ந்து, ₹7,15,218.40 கோடியாக உள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் மூலதன மதிப்பு ₹28,726.33 கோடி உயர்ந்து, ₹7,77,750.22 கோடியாக உள்ளது. அதேபோல், ஏர்டெல், ஐடிசி, எல்ஐசி, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் மதிப்பும் வெகுவாக உயர்ந்துள்ளது.
இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மாட்டோம் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பிரசாரம் செய்த அவர், பிற்படுத்தப்பட்டோர் என்ற பெயரில் ராகுல் காந்தி பாஜகவுக்கு எதிராக பொய்யைப் பரப்புவதாகக் குற்றம்சாட்டினார். பாஜக 400 தொகுதிகளில் வென்றால், இடஒதுக்கீடு இருக்காது என ராகுல் கூறியதாகக் குறிப்பிட்ட அவர், 2 முறை ஆட்சியில் இருந்தும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவில்லை என்றார்.
தமிழகத்தில் அதிக வெப்பம் ஏற்பட்டுள்ளதால், அனைத்து வயதினரும் ORS பருகலாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. உடலில் உப்புச்சத்து குறைவதை மீட்க ORS பயன்படுத்தப்படுவதாகவும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், தமிழகம் முழுவதும் 75 லட்சம் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை வில்வித்தை தொடரில் இந்திய ஆடவர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. சீனாவில் நடந்த ஆடவர் அணிகளுக்கான ரிகர்வ் பிரிவு போட்டியின் இறுதிச்சுற்றில் தீரஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய் & பிரவீன் ஆகிய மூவர் அடங்கிய இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவை 5-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியுள்ளது. 14 ஆண்டுகள் கழித்து, இப்பிரிவில் இந்திய ஆடவர் அணி, தங்கப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.