India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெலுங்கு நடிகர் பிரபாஸின் இன்ஸ்டா பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘பாகுபலி’ படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான அவர், ஒருவழியாக நமக்கு மிகவும் பிடித்த முக்கியமான ஒருவர், நம் வாழ்வில் இணையப் போகிறார் என்றும், அவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு திருமணம் நடக்கப் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில், புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாகக் கூறி அவற்றை விற்பனை செய்யக் கூடாதென்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத் தொடர்ந்து இந்திய நிறுவனங்களுக்கு நேபாள அரசு தடை விதித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
மின்சார வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின் தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய சேவைகளை பெற நேரில் செல்ல வேண்டிய சூழல் இருந்த நிலையில், தற்போது ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. சிபிஎம் (தமிழ்நாடு) எக்ஸ் பக்கம் நேற்றிரவு முடக்கப்பட்டது. இதனைக் கண்டு அக்கட்சியின் சமூக வலைதளப்பக்க நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்து, முடக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான II 2024 அறிவிப்பை, யூனியன் பப்ளிக் சர்விசஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதில், 459 பணியிடங்கள் (Combined Defence Service) நிரப்படவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி மாலை 6 மணிக்குள் upsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு இந்த <
ஆம் ஆத்மி பெண் எம்.பி ஸ்வாதி மாலிவாலை டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ்குமார் தாக்கியதாக சர்ச்சை எழுந்தது. இவ்விவகாரத்தில், ஸ்வாதி மாலிவால் 4 நாட்களாக அமைதி காத்து வந்த நிலையில், போலீசாரிடம் தனது தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதன் அடிப்படையில் பிபவ்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கெஜ்ரிவால் இல்லத்தில் பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து, டெல்லி அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. KKR, RR, SRH அணிகள் ஏற்கெனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், நாளை நடைபெற உள்ள CSK-RCB இடையேயான போட்டியில், வெற்றி பெறும் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை மழையால் போட்டி ரத்தானால் கூட, 15 புள்ளிகளுடன் CSK அணி முன்னேறும். இதனால், 14 புள்ளிகளுடன் இருக்கும் டெல்லி அணி, ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது.
சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளே அரைமணி நேரமாக முடங்கியுள்ளனர். வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, கிண்டி, நந்தனம், தேனாம்பேட்டை, ஆவடி, கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தி எடுத்த நிலையில், தற்போது மழை பெய்வதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன்-நடிகை நயன்தாரா தம்பதி எடுத்துக் கொண்ட சுற்றுலாப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பில் இருந்து பிரேக் எடுத்துள்ள இருவரும், சமீபத்தில் கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர் கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்களை நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் நயன்தாரா நடித்துள்ள ‘டெஸ்ட்’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
வோடாபோன் ஐடியா நிறுவனம் பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்நிறுவனம் ₹7,674 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இது முந்தைய காலாண்டை விட 9.85% அதிகமாகும். கடந்த நிதியாண்டில் நஷ்டம் ₹6,419 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்தமாக கடந்த நிதியாண்டில் ₹31,238 நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.