India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லியன்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி ராணுவம் நிபந்தனையின்றி சரணடைந்தது.
1945 – ஹிட்லர் தனது நீண்ட நாள் காதலியை, பெர்லின் சுரங்கத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
1967 – அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்த காரணத்தினால், குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் பதக்கங்கள் திரும்பப் பெறப்பட்டன.
அரசுப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியா் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அரசுப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளைக் கட்டுவதற்காக ₹7,000 கோடி ஒதுக்கீடு செய்து 2 ஆண்டுகள் ஆகியும் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கௌதம் தினனுரி இயக்கும் புதிய படத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க, அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இதில் விஜய் தேவரகொண்டா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படம் ‘கைதி’ படத்தை போல, பாடல்களே இல்லாத படமாக உருவாகி வருகிறது. விறுவிறுப்பான கதைக்கு பாடல்கள் தேவைப் படாததால், இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரைச் சேர்ந்த புண்ணியகோடி (46), தனது நண்பர்களுடன் தரிசனம் முடித்து விட்டு மலை ஏறத் தொடங்கினார். அப்போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்த அவரை, நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது 9ஆவது உயிரிழப்பு ஆகும்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 129
▶குறள்: தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
▶பொருள்: ஒருவருக்கு நெருப்பால் சுட்ட புண் கூட ஆறி விடும். ஆனால், வெறுப்பால் திட்டிய கடுமையான சொற்கள், ஆறாத வடு போல் மனதிலேயே இருக்கும்.
SRH-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், CSK வீரர் டேரில் மிட்செல் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில், டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, க்ளாஸன், ஷாபாஸ் அகமது, கம்மின்ஸ் ஆகிய 5 பேரின் கேட்சுகளை பிடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால், ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற முகமது நபியின் சாதனையை சமன் செய்தார். இருவரும் தலா 5 கேட்சுகளை பிடித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழையில் கிடைத்த நீரை, தமிழக அரசு சேமிக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மழைநீர் சேமிப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த தவறியதே வறட்சிக்கு காரணம் என்றும், வடகிழக்கு பருவமழை மூலம் கிடைத்த தண்ணீர் எங்கே போனது? அவற்றை சேமித்து வைக்காததால் தான் இன்று 22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, நேற்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். ஒரு படத்திற்கு, ₹3 முதல் ₹4 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கு அவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு, ₹110 கோடி என கூறப்படுகிறது.
இன்று (ஏப்ரல் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதாவுக்கு, திகார் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி, மோடி அரசு மனிதாபிமானமற்ற அனைத்து வரம்புகளையும் தாண்டி வருகிறது என்றும், ஒரு முதல்வர் பயங்கரவாதியாக நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? என்று நாட்டு மக்களுக்கு மோடி அரசு சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.