India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த காலாண்டில் சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை சராசரியாக 10% உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக பெங்களூருவில் 19%, டெல்லியில் 16% விலை உயர்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தமட்டில் 4% விலை உயர்ந்து சதுர அடி ₹7,710க்கு விற்கப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஆடம்பர சொகுசு வீடுகளின் தேவை அதிகரித்து வருவதாகப் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை எதிர்த்தும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
CSK-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RCB வீரர் மேக்ஸ்வெல் மீண்டும் களமிறங்கவுள்ளார். உடல் மற்றும் மனதளவில் நலம் பெறுவதற்காக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர், வில் ஜாக்ஸிற்கு பதிலாக நாளை விளையாடவுள்ளார். தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் அவர், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா என RCB ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும், அவருடைய வருகை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
தெலுங்கு நடிகர் பிரபாஸின் இன்ஸ்டா பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘பாகுபலி’ படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான அவர், ஒருவழியாக நமக்கு மிகவும் பிடித்த முக்கியமான ஒருவர், நம் வாழ்வில் இணையப் போகிறார் என்றும், அவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு திருமணம் நடக்கப் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில், புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாகக் கூறி அவற்றை விற்பனை செய்யக் கூடாதென்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத் தொடர்ந்து இந்திய நிறுவனங்களுக்கு நேபாள அரசு தடை விதித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
மின்சார வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின் தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய சேவைகளை பெற நேரில் செல்ல வேண்டிய சூழல் இருந்த நிலையில், தற்போது ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. சிபிஎம் (தமிழ்நாடு) எக்ஸ் பக்கம் நேற்றிரவு முடக்கப்பட்டது. இதனைக் கண்டு அக்கட்சியின் சமூக வலைதளப்பக்க நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்து, முடக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான II 2024 அறிவிப்பை, யூனியன் பப்ளிக் சர்விசஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதில், 459 பணியிடங்கள் (Combined Defence Service) நிரப்படவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி மாலை 6 மணிக்குள் upsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு இந்த <
ஆம் ஆத்மி பெண் எம்.பி ஸ்வாதி மாலிவாலை டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ்குமார் தாக்கியதாக சர்ச்சை எழுந்தது. இவ்விவகாரத்தில், ஸ்வாதி மாலிவால் 4 நாட்களாக அமைதி காத்து வந்த நிலையில், போலீசாரிடம் தனது தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதன் அடிப்படையில் பிபவ்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கெஜ்ரிவால் இல்லத்தில் பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து, டெல்லி அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. KKR, RR, SRH அணிகள் ஏற்கெனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், நாளை நடைபெற உள்ள CSK-RCB இடையேயான போட்டியில், வெற்றி பெறும் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை மழையால் போட்டி ரத்தானால் கூட, 15 புள்ளிகளுடன் CSK அணி முன்னேறும். இதனால், 14 புள்ளிகளுடன் இருக்கும் டெல்லி அணி, ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது.
Sorry, no posts matched your criteria.