India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
க்ரீன் டீயுடன் ஒப்பிடும் போது ஆரஞ்சு டீ ஆறு மடங்கு ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த ஆரஞ்சு டீயை எப்படி தயார் செய்வதென பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு தோல், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நீரூற்றி 1 – 2 நிமிடங்கள் லேசான சூட்டில் கொதிக்க வைத்து ஆறிய பின், வடிகட்டி தேன் கலந்து குடியுங்கள். இந்த டீயை குடிப்பதால், உமிழ்நீர் சுரப்பதை அதிகரிப்பதோடு ஜீரண சக்தியும் மேம்படுமாம்.
மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் தீவிர பரப்புரை மேற்கொண்டார். ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இன்று அவர் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க செல்கிறார். தொடர்ந்து, மே 4-ஆம் தேதி வரை அவர் அங்கு தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது. இதையொட்டி, அங்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2021இல் பதியப்பட்ட வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
பொதுத் தோ்வுகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீட் பயிற்சி வகுப்புகள், தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன. திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை 9.15am முதல் 4.30pm வரை செயல்படும் இந்தப் பயிற்சி வகுப்புகளில், காலை சிற்றுண்டி, தேநீா், மதிய உணவு வழங்கப்படும். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு, மே 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தோ்வுக்கு 13,200 தமிழக மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
SRH-க்கு எதிரான போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் CSK கலக்கியது. ருதுராஜ் தனது மிரட்டல் அடி மூலம், வருங்கால இந்திய அணியின் எதிர்காலம் என்பதை நிரூபித்தார். ஹெட், அபிஷேக், மார்க்ராம், நிதிஷ் ரெட்டி என பேட்டிங்கில் வலுவாக இருக்கும் SRH-ஐ CSK பந்துவீச்சாளர்கள் பதம் பார்த்தனர். குறிப்பாக, தேஷ்பாண்டே 2வது ஓவரில் 2 முக்கிய விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
பணியின்போது போலீசார் சினிமா பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார். ஏற்கெனவே, பணி நேரத்தில் போலீசார் (SIக்கு கீழ் ரேங்கில் உள்ளவர்கள்) செல்போன் பயன்படுத்த தடை விதித்திருந்த இவர், தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன், முக்கிய பிரமுகர்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவின் சாமராஜநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஹனூர் வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், வாக்கு இயந்திரங்கள் சூறையாடப்பட்டன. இதனால், இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் ஏவப்பட்ட அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் மோதுவதற்கான அபாயம் உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் லைவில் உரையாடிய அவர், சூரியக் குடும்பத்திற்கு வெளியே இதுவரை 5 ஆயிரம் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவற்றின் வளிமண்டலத்தைப் பார்க்கும்போது, சில கோள்களில் தண்ணீர் இருப்பதாகக் கூறிய அவர், அங்கேயும் உயிரிகள் (ஏலியன்) இருக்கலாம் என்றார்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கான இட ஒதுக்கீடு நீக்கப்படாது, அதனை நீக்குபவர்களையும் அனுமதிக்க மாட்டோம் என மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்றைய தினம் உறுதியளித்தார். இதற்கு பதிலடி கொடுத்த காங்., எம்.பி மாணிக்கம் தாகூர், பாஜக ஆட்சியில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு மக்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், அமித் ஷாவின் பொய்கள் தோற்கடிக்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் அவர் சாடினார்.
மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில், 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாணவிகள், பெற்றோர் என 120 பேரிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து, ஏப்.26ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக இருந்தது. ஆனால், அன்றைய தினம் நிர்மலா தேவி ஆஜராகததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.