India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஓராண்டுக்கு ஒரு பிரதமர் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாக கூறிய அவர், அவ்வாறு நடந்தால் மம்தா பானர்ஜி, சரத் பவார், ராகுல் தலா ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார்கள் என்று சாடினர். ஒரு நாட்டை இவ்வாறெல்லாம் நடத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்தியப் பேரரசர்களை அவமானப்படுத்தும் ராகுல் காந்தி, முகலாய மன்னர்கள் செய்த அட்டூழியங்கள் குறித்து பேச மறுப்பது ஏன் என்று பிரதமர் மோடி கேள்வியெழுப்பியுள்ளார். பெலகாவி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்த முகலாய பேரரசர் அவுரங்கசீப் செய்த மோசமான செயல்களை காங்கிரஸ் மறந்து விட்டது. வாக்கு வங்கியை தக்கவைக்க காங்., இளவரசர் தாஜா செய்கிறார்” எனக் கூறினார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் விளையாடும் வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாகிப் அல் ஹசன் அணியில் இடம்பிடிக்காத நிலையில், நஜ்முல் ஹொசைன் சாண்டோ அணியை வழி நடத்துகிறார். மேலும், இந்த அணியில் லிட்டன் தாஸ், தன்ஸித் ஹசன் தமிம், மஹ்முதுல்லா, தஸ்கின் அஹ்மத் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இவ்விரு அணிகளுக்கான முதல் போட்டி, மே 3ஆம் தேதி தொடங்குகிறது.
திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா சந்திக்கச் சிறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். அதற்கு முன்னதாக, கெஜ்ரிவாலை அவரது மனைவி சந்திக்கச் சிறை நிர்வாகம் அனுமதி மறுப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில், அனுமதி கிடைத்துள்ளதால் டெல்லி அமைச்சர் அதிஷி மற்றும் சுனிதா ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்திக்கவுள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இந்திய அளவில் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ‘அம்பேத்கர் சுடர்’, ‘பெரியார் ஒளி’, ‘காமராஜர் கதிர்’, ‘அயோத்திதாசர் ஆதவன்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருது நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூன் 21ஆம் தேதிக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவை ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கையை, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு கேட்டிருந்தது. இது தொடர்பாக பதிலளிக்க சிபிசிஐடி அவகாசம் கோரியிருந்தது. விசாரணையின்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் வாளையார் மனோஜ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயன்ற பாஜக செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்துடன் ஓய்வெடுக்க மதுரை வழியாக முதல்வர் கொடைக்கானல் சென்றார். அப்போது, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்தவும் கோரி முதல்வரிடம் கஞ்சாவுடன் அவர் மனு கொடுக்க முயன்றுள்ளார். இதனை தடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
உலகம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நோக்கியா 3210 ஃபோனை நவீன வசதிகளுடன் விற்பனைக்கு மீண்டும் கொண்டு வர HMD குளோபல் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 4ஜி நெட்வொர்க், ப்ளூடுத், நீடித்த பேட்டரி உள்ளிட்ட வசதிகள் இதில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. 1999ஆம் ஆண்டு வெளியான இந்த ஃபோன், இந்தியச் சந்தையில் ₹2,999-க்கு விற்பனையானது.
கோவையில் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு, நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கக் கோரியும், தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கக் கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்த உயர் நீதிமன்றம், நாளை விசாரணையை தொடங்குகிறது.
ஆட்சியில் ஒரு நலத்திட்டத்தை கூட ஜெகன் மோகன் ரெட்டி நிறைவேற்றவில்லை என அவரது சகோதரியும், ஆந்திர காங்கிரஸ் தலைவருமான ஷர்மிளா விமர்சித்துள்ளார். கும்பகர்ணன் 6 மாதங்கள் தூங்கி, 6 மாதமாவது விழித்திருப்பார் என்ற அவர், ஜெகன்மோகன் ரெட்டியோ எதுவுமே செய்யாமல் 5 ஆண்டுகளாக தூக்கத்திலேயே இருக்கிறார் என்றார். அண்ணனை (ஜெகன்) எதிர்த்து காங்கிரஸை வெற்றி பெற வைக்க வேண்டிய நிர்பந்தம் ஷர்மிளாவுக்கு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.