news

News April 29, 2024

முதல்வர்கள் இன்பச் சுற்றுலா செல்லலாமா?

image

கோடை வெயிலைத் தணிக்க முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜெயலலிதா கோடநாடு சென்றபோது கருணாநிதி ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டார். “கும்பி எரியுது, குடல் கருகுது: கோடநாடு ஒரு கேடா?” என்ற அந்த அறிக்கையைத் தற்போது அதிமுகவினர் பகிர்ந்து வருகின்றனர். “கும்பி எரியுது, குடல் கருகுது: கொடைக்கானல் ஒரு கேடா?” என்று அதிமுகவினர் ட்ரெண்ட் செய்கின்றனர்.

News April 29, 2024

விளக்கேற்ற உகந்த நேரம் எது?

image

தீபம் ஏற்றுவது வேள்வி செய்வதற்குச் சமமாகும். அதனால், வீடுகளில் அதிகாலை 4.30 முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்திலும், மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான தினப்பிரதோஷத்திலும் விளக்கேற்றுவது மிகுந்து புண்ணியத்தைத் தரும். இந்த நேரத்தில் விளக்கேற்றுவதால், அனைத்து தடைகளும் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குறிப்பாக, 5 முக விளக்கேற்றினால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

News April 29, 2024

பொதுமக்களுக்கு நடிகர் சங்கம் வேண்டுகோள்

image

நடிகர் சங்கக் கட்டடப் பணிகளுக்காகப் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. முகநூலில் இது தொடர்பாக வெளியான தகவலை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் நடிகர் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். நிதி நெருக்கடியால் தடைபட்டிருந்த நடிகர் சங்கக் கட்டடப்
பணி சில வாரங்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. நடிகர்கள் விஜய், கமல், உதயநிதி தலா ரூ.1 கோடி வழங்கினர்.

News April 29, 2024

பிரதமர் மோடிக்கு ஓவைசி பதிலடி

image

குழந்தை பிறப்பை தடுக்க இஸ்லாமியர்கள் காண்டம் போன்ற கருத்தடை சாதனங்களை அதிகம் பயன்படுத்துவதாக AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். அதிக குழந்தை பெறுபவர்கள் என மோடி கூறியதற்கு பதிலளித்த அவர், இந்து சகோதர, சகோதரிகள் மத்தியில் பிரதமர் மோடி அச்சத்தை விதைக்கிறார். தரவுகளின்படி, இஸ்லாமியர்களின் மக்கள்தொகை விகிதம் குறைந்துள்ளது. இதைச் சொல்வதில் எனக்கு வெட்கமில்லை” எனத் தெரிவித்தார்.

News April 29, 2024

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலட்சியம்

image

பாரீஸ் ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே தனது இலட்சியம் எனத் தமிழகப் பாய்மரப் படகு வீராங்கனை நேத்ரா குமணன் கூறியுள்ளார். பிரான்சில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், ஒலிம்பிக்கில் பங்கேற்பதை உறுதி செய்தார். அவர் ஒலிம்பிக்குக்குச் செல்வது இரண்டாவது முறையாகும். 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்றார்.

News April 29, 2024

ரேவண்ணா, பிரிஜ்வலை நீக்க வலியுறுத்தல்

image

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா, பேரன் பிரஜ்வல் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க, மதச்சார்பற்ற ஜனதா தளம் MLA-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான பெண்களுடன் பிரிஜ்வல் நெருக்கமாக இருப்பது போன்று வீடியோ வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல, ரேவண்ணா மீதும் அவரது வீட்டில் சமையல் வேலை பார்த்த பெண், பாலியல் புகார் அளித்துள்ளார்.

News April 29, 2024

மே 5ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு

image

தென் தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் 7 நாட்களுக்கு ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் மே 1 வரை நெல்லை, குமரி மாவட்டங்களிலும், மே 2ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யலாம். இதேபோல, மே 3-5 வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

News April 29, 2024

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன்

image

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் போலி வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தது தொடர்பாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், மே 1ஆம் தேதிக்குள் உரிய விளக்கமளிக்க அவருக்கு போலீசார் கெடு விதித்துள்ளனர். எஸ்.சி., எஸ்.டி இடஒதுக்கீட்டை ஒழிப்பதே பாஜகவின் திட்டம் என அமித் ஷா பேசுவது போன்ற போலி வீடியோவை காங்கிரஸ் தலைவர்கள் பரப்புவதாக பாஜக புகார் கூறியிருந்தது.

News April 29, 2024

“ஆளுநர்… தாத்தா இல்லம்மா”

image

பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அந்த ஆடியோவில், “ஆளுநர்… தாத்தா இல்லம்மா” என நிர்மலா தேவி பேசியதால், அது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர், விளக்கத்தை அளித்ததோடு, விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க உத்தரவிட்டார்.

News April 29, 2024

நிர்மலா தேவிக்கு என்ன தண்டனை? நாளை அறிவிப்பு

image

மாணவிகளைத் தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி எனத் தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், தண்டனை விவரத்தை நாளை அறிவிக்கிறது. இவ்வழக்கில் நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாகக் கைது செய்யப்பட்ட இருவர் உரிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து, நிர்மலா தேவி தரப்பில் நாளையும் வாதாட அவகாசம் கேட்கப்பட்டதால், தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

error: Content is protected !!