news

News April 30, 2024

இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள்

image

இரவில் சரியாக தூங்காமல் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அது உங்களுக்கு மாரடைப்பு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். மொபைல்போனில் இருந்து வரும் வெளிச்சம், மெலாட்டோனின் என்ற ஹார்மோனை மூளையில் சரியாக சுரக்க விடாமல் தடுக்கும். இதனால் உங்களுக்கு தூக்கமின்மை ஏற்படும். இதை தொடர்ந்து செய்தால், ஒரு கட்டத்திற்கு மேல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

News April 30, 2024

குடிநீரில் மாட்டுச்சாணம் கலந்த அறிகுறி இல்லை

image

புதுக்கோட்டை சங்கம்விடுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததற்கான அறிகுறி இல்லையெனத் திருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில், ‘தண்ணீரில் ஈகோலி என்ற பாக்டீரியா இல்லாததால், அதில் எந்தக் கழிவும் கலக்கப்படவில்லை. தண்ணீர்த் தொட்டி நீண்ட நாள் கழுவப்படாததால் சேர்ந்த பாசியைச் சிலர் தவறாகக் கூறியுள்ளனர்’ எனக் கூறப்பட்டுள்ளது.

News April 29, 2024

குங்குமப்பூவும் குழந்தை நிறமும்!

image

கர்ப்பக்காலத்தில் பாலில் குங்குமப்பூ கலந்து குடித்தால் குழந்தை நிறமாகப் பிறக்கும் என்ற நம்பிக்கை தொடர்கிறது. ஆனால் அறிவியல்பூர்வமாக இது உண்மையில்லை. கர்ப்பக்காலத்தில் குங்குமப்பூ பயன்படுத்திய கர்ப்பிணிகள் எல்லோருக்கும் குழந்தையின் நிற விஷயத்தில் பலன் கிடைத்ததாகவும் தகவல் கிடையாது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் பாலில் கலந்து குடிக்கலாம். இதை அதிகமாகப் பயன்படுத்தினால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

News April 29, 2024

கொல்கத்தா அணி அபார வெற்றி

image

டெல்லி அணிக்கு எதிரான IPL போட்டியில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. ஈடன் கார்டனில் முதலில் விளையாடிய DC 153/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குல்தீப் 35 ரன்கள் எடுத்தார். KKR தரப்பில் வருண் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் விளையாடிய KKR அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சால்ட் 68 ரன்கள் எடுத்தார். DC தரப்பில் அக்‌ஷர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

News April 29, 2024

கனடா துணைத் தூதருக்கு இந்தியா சம்மன்

image

கனடாவில் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு இடமளிக்கும் அரசியலை கனடா மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. மேலும், டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான கனடா துணைத் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

News April 29, 2024

இந்த ராசியினர் காட்டில் பண மழை

image

ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்துக் கிரகங்களும் அவ்வப்போது தங்களது இயக்கத்தை மாற்றுகின்றன. அந்த வகையில், விருச்சிக ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்க உள்ளதால், மேஷம், சிம்மம், துலாம், விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. பதவி உயர்வு, தடையில்லாப் பண வரவு, வீடு, நிலம் வாங்கும் யோகம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு, திருமண வாழ்வில் மகிழ்ச்சி என மேற்கண்ட ராசியினருக்குப் பல நன்மைகள் நடக்கும்.

News April 29, 2024

கூடுதல் அவகாசம் கேட்கும் மோடி, ராகுல்!

image

தேர்தல் விதிமீறல் தொடர்பாக விளக்கமளிக்கப் பிரதமர் மோடி ஒரு வாரமும், ராகுல்காந்தி 14 நாள்களும் கூடுதல் அவகாசம் கோரியுள்ளனர். மக்களின் சொத்துக்களை காங்கிரஸ், ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் எனப் பேசிய மோடி மற்றும் வடக்கு தெற்கு பிரிவினையை ராகுல் உருவாக்குவதாக புகார் அளிக்கப்பட்டன. இது தொடர்பாக இருவரும், ஏப்.29ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

News April 29, 2024

அரைசதம் கடந்தார் பில் சால்ட்

image

டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் கொல்கத்தா அணி வீரர் பில் சால்ட் அரைசதம் விளாசியுள்ளார். ஈடன் கார்டன் மைதானத்தில் முதலில் விளையாடிய DC அணி 153/9 ரன்கள் எடுத்தது. 154 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய KKR அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 7 பவுண்டரி, 5 சிக்ஸர் விளாசி 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?

News April 29, 2024

இரவு 1 மணி வரை மழை பெய்யும்

image

தென் தமிழகத்தில் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுவதால், இரவு 1 மணி வரை 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும், தென்காசி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 29, 2024

பலாத்காரக் குற்றவாளிக்கு 106 ஆண்டுச் சிறைதண்டனை

image

கேரளத்தில் மனநலம் பாதித்த 15 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 44 வயது நபருக்கு 106 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது தேவிக்குளம் விரைவு நீதிமன்றம். 2022ஆம் ஆண்டு திருச்சூரைச் சேர்ந்த குற்றவாளி அடிமாலிக்கு வேலைக்கு சென்றுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருடன் வேலை செய்த அந்த நபர், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

error: Content is protected !!