India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து, பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளை உற்பத்தி செய்ய உத்தராகண்ட் அரசு தடை விதித்துள்ளது. அத்துடன், மருந்துகள் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனம் பொய்யான விளம்பரம் செய்த விவகாரத்தில், மத்திய அரசும், அம்மாநில அரசும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று 56 நிறுவனங்களின் காலாண்டு மற்றும் நிதியாண்டு முடிவுகள் வெளியாகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், அதானி கிரீன் சொலூசன்ஸ், ஹாவெல்ஸ் இந்தியா, அதானி டோடல் கேஸ், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ், காஸ்ட்ரோல் ஆயில், கிராவிட்டி இந்தியா, REC உள்ளிட்ட நிறுவனங்களின் முடிவுகள் வெளியாகவுள்ளன.
சிவபெருமானுடன், பஞ்ச மூர்த்தியரில் ஒருவராக பவனி வருபவர் விசாரசர்மர் சண்டிகேஸ்வரர். ஈசனின் அடியார் கூட்டத் தலைவனான இவர், எப்போதுமே சிவ சிந்தனையில் ஆழ்ந்திருப்பார். இவரின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்க, பக்தர்கள் சந்நிதியில் கைகளைத் தட்டுவது, சொடுக்கு போடுவது, நூல் பிரித்துப் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது பெரிய பாவச் செயலாகும். சைவ நெறிப்படி இவ்விதமான செயல்களில் ஈடுபடக் கூடாது.
மணிரத்னம் இயக்கத்தில் தயாராகிவரும் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. அங்கு, கமல்ஹாசன், சிம்பு தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் கமல்ஹாசன் பாடல் ஒன்றை எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை எழுத அவர் 3 நாள்கள் எடுத்துக் கொண்டதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் ரெக்கார்டிங் செய்து முடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சம்பளம் மாத இறுதி நாளிலோ அல்லது அடுத்த மாத முதல் தேதியிலோ பட்டுவாடா செய்யப்பட்டுவிடும். இவர்களுக்கான சம்பளப் பட்டியலை கருவூலமே வங்கிக்கு அனுப்பும். இந்நிலையில், கருவூலம் மூலம் சம்பளம் வழங்க பயன்படுத்தப்படும் IFHRMS மென்பொருள் முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பது சந்தேகம் எனத் தெரிகிறது.
நடைப்பயிற்சியில் சிறந்தது 8 வடிவ நடைப்பயிற்சி என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகாலை 5 முதல் 6 மணி வரையும், மாலை 5 முதல் 6 மணி வரையும் 8 வடிவ நடைப்பயிற்சி செய்யச் சிறந்த நேரமாகும். இந்த பயிற்சியை 18 வயது நிரம்பிய எவரும் செய்யலாம். பயிற்சியின்போது, வயிறு காலியாக இருக்க வேண்டும். வெளியில் சென்று உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் வீட்டின் பால்கனி, மொட்டை மாடி ஆகிய இடங்களில் இந்த பயிற்சியைச் செய்யலாம்.
விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்குப் போட்டியாக ‘டாப் குக்கு, டூப் குக்கு’ என்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியை சன் டிவி களம் இறக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்த நடிகர் வடிவேலுவை அதிக சம்பளம் கொடுத்து போட்டியாளராக அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக ஆதரவாளராக அறியப்படும் வடிவேலு, சன் டிவி நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று, இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக இருப்பது திருப்பரங்குன்றம். சூரபத்மனை முருகன் போரில் வென்ற பிறகு, இந்திரன் தன் மகள் தெய்வானையை அவருக்கு மணம் முடித்து வைக்கிறார். அதனால், இங்கு முருகனும், தெய்வானையும் மணக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர். மேலும், மலை வடிவில் சிவபெருமான் அருள் புரிகிறார். இங்கு சென்று வழிபட்டால், தடைப்பட்டு வந்த திருமணம் விரைவில் கைகூடும்.
செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும், காஞ்சிபுரம் மாவட்ட திமுக அமைப்பாளருமான தாம்பரம் நாராயணன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். 2021இல் அமமுகவில் இருந்து விலகிய இவர், அக்கட்சியின் முக்கிய தலைவர்களையும் அழைத்து வந்து திமுகவில் இணைந்தார். இந்நிலையில், கட்சியில் இணைந்து 3 ஆண்டுகளாகியும் தனக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி அவர் விலகியுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் உடனான பிரிவு குறித்து, அவருடைய முன்னாள் காதலர் சாந்தனு மெளனம் கலைத்து பேசியிருக்கிறார். சமீபத்தில் பாலிவுட் ஊடகம் ஒன்று, சாந்தனுவிடம் ஸ்ருதியுடனான பிரிவு குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “மன்னித்து விடுங்கள், இதுபற்றி பேச விரும்பவில்லை. அது தனிப்பட்ட விஷயம்” என்று அந்த கேள்வியைத் தவிர்த்திருக்கிறார். இதனால் இருவருக்கும் பிரேக்கப் ஆனது உறுதியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.