news

News April 30, 2024

வெளுத்து வாங்கிய மழை

image

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், தென்மாவட்டங்களில் நேற்று ஒரு சில இடங்களில் 5 செ.மீ வரை மழை பெய்துள்ளது. அதன்படி, தக்கலையில் (குமரி) 5 செ.மீ, சுருளகோடு, கோழிப்போர்விளை மாஞ்சோலையில் (நெல்லை) தலா 3 செ.மீ வரையும் மழை கொட்டியது. குழித்துறை, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் தலா 2 செ.மீ வரையும் மழை பதிவாகியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News April 30, 2024

தொண்டர்களுக்கு காங்., அறிவுறுத்தல்

image

கோடை வெயிலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நீர், மோர் பந்தல் அமைக்க காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் விதிகள் காரணமாக, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று முதல்கட்டமாக சென்னையில் 2 இடங்களில் நீர், மோர் பந்தல் அமைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மக்கள் சேவையில் தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

News April 30, 2024

சர்வதேச தரவரிசையில் 2ஆம் இடம் பிடித்த ஜோதி

image

உலக வில்வித்தை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சர்வதேச தரவரிசை பட்டியலில், இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். சீனாவில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தை ‘ஸ்டேஜ்-1’ தொடரில் ஜோதி, 3 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். இதன் காரணமாக, மகளிர் காம்பவுண்ட் பிரிவு தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி, 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அதே போல இந்திய அளவில் ‘நம்பர்-1’ இடத்தில் அவர் நீடிக்கிறார்.

News April 30, 2024

இனி உரிமைச் சான்று கட்டாயம்

image

வெளிநாட்டு உயிரினங்களை வைத்திருப்போரும், வாங்குவோரும், இணையதளத்தில் பதிவு செய்து உரிமைச் சான்று பெறுவது கட்டாயம் எனத் தமிழக வனத்துறை அறிவித்துள்ளது. இதனை, ‘பரிவேஷ் 2.0’ இணையதளத்தில் பதிவு செய்து, உரிமைச் சான்று பெற வேண்டும். உரிமையாளர் தான் வைத்திருக்கும் உயிரினத்திற்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்து, விவரங்களை இணையத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 30, 2024

Apply Now: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

இந்திய கடற்படையில் நிரப்பப்படவுள்ள 4,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. Sea Man, Deck Rating, & Engine Rating உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி: 10ஆம் வகுப்பு. வயது வரம்பு: 18-27. தேர்வு: நேர்காணல். ஊதிய வரம்பு: ₹55,000/-. கூடுதல் தகவல்களுக்கு https://admission.sealanemaritime.in என்ற இணைய முகவரிக்கு சென்று பார்க்கவும்.

News April 30, 2024

சாம்பியன் பட்டம் வென்ற வேலவன்

image

பிரான்ஸ் பேட்ச் ஓபன் ஸ்குவாஷ் தொடரில், தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பாரிஸில் நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிச்சுற்றில், இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார், பிரான்ஸின் மெல்விலுடன் மோதினார். 35 நிமிடங்கள் நீடித்த போட்டியில், 3-0 என்ற செட் கணக்கில் வென்ற வேலவன், சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது அவரது 8ஆவது சர்வதேச பட்டமாகும்.

News April 30, 2024

அடுத்த சீசனில் அஷ்வின் விற்கப்படாமல் போகலாம்

image

RR அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், இதுவரை 8 போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், அஸ்வினின் பந்துவீச்சு குறித்து முன்னாள் வீரர் சேவாக் கவலை தெரிவித்துள்ளார். விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டுமென முனைப்புடன் அஷ்வின் பந்து வீசுவதில்லை என்று கூறிய சேவாக், அடுத்த சீசனுக்கு அவர் ஏலத்தில் விற்கப்படாமல் கூட போகலாம் என்று தோன்றுகிறது எனக் கூறினார்.

News April 30, 2024

4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

image

ஆந்திரா (ராயலசீமா), பிஹார், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தமிழகத்திற்கு அடுத்த 5 நாள்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. இன்றும், நாளையும் வெயில் அதிகரித்தே காணப்படும் என்றும், மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மாநிலத்தில் நேற்று 15 இடங்களில் 37.7°C தாண்டி வெயில் கொளுத்தியது.

News April 30, 2024

விரைவில் புதிய மின்சார வாகனக் கொள்கை

image

மின்சார வாகனங்களுக்கான வழிகாட்டுதல்கள், அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை மின்சார வாகனங்களின் உற்பத்தி மையமாக மேம்படுத்தும் புதிய EV கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மின் வாகன இறக்குமதியைக் குறைத்து, 3 ஆண்டுகளில் மொத்த உற்பத்தியில் 25 சதவீதமும், 5 ஆண்டுகளில் 50 சதவீதமாகவும் உயர்த்த கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 30, 2024

மக்கள் பொருளாதார இழப்பை சந்திப்பார்கள்

image

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இபாஸ் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டுமென, மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இந்த நடைமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தால், அதனை நம்பி இருக்கும் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்பை சந்திப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!