news

News May 1, 2024

சல்மான் வீடு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தற்கொலை

image

நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கைதான அனுஜ் தாபன் தற்கொலை செய்துகொண்டார். மும்பையில் உள்ள சல்மான் வீட்டின் சுற்றுச்சுவரில் சில நாட்களுக்கு முன்பு 2 பேர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதுதொடர்பாக கைதான அனுஜ், மும்பை சிறப்புப் படை போலீசாரின் விசாரணையில் இருந்தபோது தற்கொலைக்கு முயற்சித்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News May 1, 2024

டெலிகாம் நிறுவனங்களுக்கு EC அறிவுறுத்தல்

image

வாக்குப்பதிவு குறைந்ததையடுத்து, மக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து எஸ்எம்எஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை EC அறிவுறுத்தியுள்ளது. 2 கட்டத் தேர்தல்களிலும் வாக்குப்பதிவு குறைந்ததையடுத்து, அதை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து EC ஆலோசித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக டெலிகாம் நிறுவன அதிகாரிகளுக்கு புதிய அறிவுறுத்தல்களை EC வழங்கியுள்ளது.

News May 1, 2024

தமிழக அரசின் பின்னால் அனைவரும் நிற்க வேண்டும்

image

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக தலைவர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் வினீத் குப்தா கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் போக்கை தடுத்து நிறுத்த தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும் என்றார்.

News May 1, 2024

வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் இரங்கல்

image

விருதுநகர் அருகே தனியார் வெடிபொருள் கிடங்கில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். வெடிவிபத்து குறித்த செய்தியறிந்ததும் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும் என்று உறுதி தெரிவித்தார்.

News May 1, 2024

ஸ்ட்ராங் ரூம் கேமராக்கள் மட்டும் செயலிழப்பது எப்படி?

image

வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பது தொடர்பாக டி.ஜெயக்குமார் சந்தேகம் எழுப்பியுள்ளார். தனது வீட்டில் உள்ள 26 கேமராக்களும் ஒருநாள் கூட செயலிழந்தது கிடையாது என்ற அவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையத்தில் மட்டும் கேமராக்கள் செயலிழப்பது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார். கோவை, தேனி தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.

News May 1, 2024

மே 7ஆம் தேதி வரை மழை பெய்யக் கூடும்

image

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மே 7 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சிலப் பகுதிகளில் மிதமான மழையும், மே 3- 5 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடனும் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மே 6, 7இல் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

News May 1, 2024

95 ஆண்டுகளில் ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு

image

உலகின் மிகச்சிறிய நாடான வாடிகன், 1929 பிப்ரவரியில் உருவாக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டோடு, வாடிகன் உருவாக்கப்பட்டு 95 ஆண்டுகளாகும் நிலையில், அங்கு இன்று வரை ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை. அங்கு வரும் பெண்கள் கர்ப்பம் தரித்தது தெரிந்த உடனேயே, பிரசவம் முடிந்து குழந்தை பிறக்கும் வரை இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்படுவது கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அங்கு இதுவரை ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை.

News May 1, 2024

பிஎஸ்என்எல் 4ஜி சந்தாதாரர் எண்ணிக்கை 8 லட்சமாக உயர்வு

image

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 8 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 20 ஆயிரம் 4ஜி டவர்களை அமைத்து, 4ஜி சேவைகளை முழு வீச்சில் வழங்க பிஎஸ்என்எல் ஆயத்தமாகி வருகிறது. மேலும் 3,500 டவர்களை அமைத்து பஞ்சாப், ஹரியானா ஹிமாச்சல் உள்ளிட்ட சில வடமாநிலங்களில் ஆரம்பகட்டமாக 4ஜி சேவை அளித்து வருகிறது. அங்கு அந்த சேவையை 8 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

News May 1, 2024

இந்திய அணியை குப்பை என விமர்சித்த ஸ்ரீகாந்த்

image

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை குப்பையான தேர்வு என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், “சிலரை திருப்திப்படுத்த தேர்வுக்குழு இந்த அணியை தேர்ந்தெடுத்துள்ளது. அதற்காக, நியாயமற்ற காரணத்தை சொல்லி ரிங்கு சிங்கை பலிகடா ஆக்கியுள்ளது. தமக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் இந்தியாவுக்காக ரிங்கு அசத்தியவர்” எனக் கூறினார்.

News May 1, 2024

தேர்தல் ஆணைய அனுமதி பெற்று விரைவில் நிவாரணம்

image

ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்காடு மலைப்பாதையில் நேற்று நடைபெற்ற கோர விபத்தில், 6 பேர் பலியானார்கள். காயமடைந்த 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!