news

News May 2, 2024

நடப்பு ஆண்டில் 70 ஆயிரம் பேர் பணி நீக்கம்

image

தொழில்நுட்ப நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் 70,000க்கு மேற்பட்ட ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில், டெஸ்லா, ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களும் அடங்கும். அதன்படி, ஆப்பிள் நிறுவனம் 614 ஊழியர்களையும், அமேசான் அதன் கிளவுட் பிரிவில் 100 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. அதேபோல், கூகுள், இன்டெல், பைஜூஸ், ஓலா ஆகிய நிறுவனங்களும் பணியாளர்களை நீக்கியுள்ளது.

News May 2, 2024

வீடு தேடிச் செல்ல பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு

image

தமிழகத்தில் 10, +1, +2 பொதுத்தேர்வில் பங்கேற்காத 40,000 மாணவர்களை வீடு தேடிச் சென்று பேசி, துணைத்தேர்வில் பங்கேற்க வைக்க வேண்டும் என அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10, +1, +2 தேர்வு முடிவு வெளியான உடன், துணைத்தேர்வு தேதி அறிவிக்கப்படும். எனவே, நடந்து முடிந்த தேர்வில் தேர்ச்சி பெறாத, பங்கேற்காத மாணவர்களை, துணைத் தேர்வில் பங்கேற்க வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 2, 2024

யார் அந்த முக்கிய புள்ளி?

image

பேராசிரியர் நிர்மலா தேவிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது ஒருதலைப்பட்சமானது என்று CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். ஈரோட்டில் பேசிய அவர், “சி.பி.சி.ஐ.டி., இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை. நிர்மலா தேவி மட்டும் தண்டிக்கப்பட வேண்டியவர் அல்ல. எந்த முக்கிய புள்ளிக்காக அவர் மாணவிகளை தவறாக வழிநடத்தினார் என்ற உண்மையை உரிய விசாரணை நடத்தி, கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.

News May 2, 2024

பாகிஸ்தானில் சேவையை நிறுத்தியது உபர்

image

கார் டாக்ஸி நிறுவனமான உபர், உலகளவில் பல நாடுகளில் இயங்கி வருகிறது. இந்நிலையில், கடுமையான போட்டி காரணமாக, பாகிஸ்தானில் தனது சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், அதன் துணை நிறுவனமான கரீம் தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவித்துள்ளது. 2019இல் கரீம் நிறுவனத்தை $310 கோடிக்கு உபர் வாங்கியது. அந்நிறுவனத்தை பாகிஸ்தானில் விரிவுபடுத்துவதில் உபர் முனைப்பு காட்டி வருகிறது.

News May 2, 2024

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

image

வெயில் கொளுத்தி எடுப்பதால், சமீபகாலமாக டயர் வெடித்து, பஞ்சராகி, இன்ஜின் சூடாகி வாகனங்கள் நிற்பதைப் பார்க்க முடிகிறது. இதிலிருந்து தப்பிக்க பகல் நேரப் பயணங்களைத் தவிர்த்து, இரவு பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை பகலில் பயணம் செய்தால், வாகனத்தில் எல்லாவற்றையும் ஒருமுறை, முக்கியமாக ரேடியேட்டரை சரி பார்ப்பது அவசியம். அதுமட்டுமல்ல, வெயிலில் வேகமாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

News May 2, 2024

ஏற்றத்தாழ்வு அதிகரிக்க மத்திய அரசே காரணம்

image

உலகத்திலேயே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கக்கூடிய நாடுகளில் நம்பர் ஒன் நாடாக இந்தியா இருக்கிறது என்று சிபிஎம் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய ₹16 லட்சம் கோடி கடனை மத்திய அரசு ரத்து செய்ததால்தான் இந்நிலை ஏற்பட்டது எனக் கூறிய அவர், பெட்ரோல், டீசலுக்கு வரியை உயர்த்தி ₹25 லட்சம் கோடியை அரசு கொள்ளையடித்துள்ளது எனக் குற்றம்சாட்டினார்.

News May 2, 2024

அரசியல் ரீதியாக அணுகப்பட வேண்டிய பிரச்னை

image

வட & தென் மாநிலங்களுக்கு இடையே அதிகரித்து வரும் விரிசலை அறிவார்ந்த தலைமை மூலமே தடுக்க முடியும் என்று RBI முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “நிதிப் பகிர்வில் நிலவும் பாகுபாடு, நிதி ஆணையத்துக்கு அப்பாற்பட்டது. இது அரசியல் ரீதியாக அணுகப்பட வேண்டிய பிரச்னை. தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் அரசுக்கு செலுத்தும் வரியில் குறைந்த அளவே திரும்பப் பெறுகின்றன” எனக் கூறினார்.

News May 2, 2024

முன்னாள் எம்எல்ஏ காலமானார்

image

உதகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ‘மக்கள் நேசன்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான H.M.ராஜூ (92) வயது மூப்பு காரணமாகக் காலமானார், 1989, 1991, 2001 ஆகிய தேர்தல்களில் காங்., கட்சி சார்பில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக தேர்வான இவர், சட்டமன்றத் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் அளியூர் கிராமத்தில் நடைபெறுகின்றது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News May 2, 2024

சடங்குகள் இல்லாத திருமணம் அங்கீகரிக்கப்படாது

image

சடங்குகள் இல்லாத இந்து திருமணங்களை அங்கீகரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. சடங்குகள் இன்றி திருமணம் செய்து கொண்ட இருவர், விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சடங்கு இல்லாமல் நடந்த திருமணத்துக்கு, திருமணச் சான்றிதழ் அந்தஸ்து அளிக்காது என்றும், இந்து திருமண சட்டப்படி அதை திருமணமாக கருத முடியாது எனக்கூறி வழக்கை ரத்து செய்தனர்.

News May 2, 2024

ரசாயனம் கலந்த மாம்பழத்தை கண்டறிவது எப்படி?

image

மாம்பழம் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்டுள்ளதா? என்பதை மக்கள் எளிதாக கண்டறியலாம். ஒரு பக்கெட் நிறைய நீர் எடுத்து அதில் மாம்பழத்தை போட்டால் இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் மூழ்கி கிடக்கும். ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்கள் மிதக்கும். இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்கள் வெளிர் நிறத்தில் இருந்தாலும் அதிக வாசனை கொண்டதாக இருக்கும். ஆனால், ரசாயனம் மூலம் பழுக்க வைத்தவற்றில் வாசனையே இருக்காது.

error: Content is protected !!