India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவு இந்தியாவில் இல்லை என மூத்த மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கோவிஷீல்டு பக்க விளைவு 0.002% பேருக்கு மட்டுமே சாத்தியம் உள்ளதாகக் கூறிய அவர், வெளிநாடுகளில் மட்டுமே சிலருக்கு பக்க விளைவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். ‘2021-2023’ வரையிலான காலகட்டத்தில் 18-45 வயதிற்கு உட்பட்டவர்களின் திடீர் இறப்புகள் குறித்து ICMR ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
சாம்பியன் டிராஃபி போட்டிகளில், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்தியாவுக்கு அருகில் லாகூர் இருப்பதால் அந்த மைதானம் பரிசீலக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்பதே இன்னும் உறுதியாகாத நிலையில், அந்நாடு இந்த ஏற்பாட்டை செய்து வருகிறது. இந்த தொடர் அடுத்தாண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டிலும் வெப்பம் அதிகரிப்பால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஏற்காட்டில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுமார் 20% விடுதிகள் மூடப்பட்டுள்ளன. செயல்படும் விடுதிகளிலும் 40% முதல் 60% வரை வாடகை கட்டணம் உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வளைகாப்புக்காகச் சென்ற கர்ப்பிணி கஸ்தூரி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமாக இருந்ததால் ரயிலின் கதவைத் திறந்து வாந்தி எடுத்தபோது கஸ்தூரி தவறி விழுந்து உயிரிழந்தார். அபாயச் சங்கிலியை இழுத்தும் ரயில் நிற்காததால் கஸ்தூரியின் உடலை அவரது பெற்றோர் 8 கிமீ தேடி அலைந்தனர். இது தொடர்பாக RDO விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜித்து மாதவன் இயக்கிய ‘ஆவேஷம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஃபகத் பாசில், சஜின் கோபு, ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, “இலுமினாட்டி…” பாடல் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படம் வரும் 9ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச் சின்னமாகவும் இது போற்றப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, விஜயகாந்தின் நினைவிடத்திற்கு “லிங்கன் புக் ஆஃப்” ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன் ரைஸ் விநியோகித்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பழக்க வழக்கங்களை தட்டிக்கேட்டதால் பேரனே உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் இளைஞரின் தாயாரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 70 ஆண்டுகளில் இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதால், கடல் மட்டம் உயர்ந்து உப்பு நீர் உட்புகுந்து, கழிமுகப் பகுதிகளில் ஆக்சிஜன் நீக்கம் ஏற்படுகிறது. இதனால், மீன் இனங்கள் இடம் பெயர்வதால், இனிவரும் காலங்களில் நாகர்கோவில், தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மிகப்பெரிய சிக்கலைச் சந்திப்பார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,615க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, கிராம் ரூ.87க்கும், கிலோ ரூ.87,000க்கும் விற்பனையாகிறது.
தற்போது பாஜக வசம் உள்ள அமேதி தொகுதி, முன்பு காங். கோட்டையாக இருந்தது. 1967, 1971 தேர்தல்களில் காங். சார்பில் வித்யாதர் பாஜ்பாய் வெற்றி பெற்றார். 1980 தேர்தலில் சஞ்சய் காந்தி, 1981 – 1991 வரை ராஜிவ் காந்தி, 2004 – 2014 வரை ராகுல் காந்தி எம்பியாக இருந்தனர். 1977, 1998 தேர்தல்களில் தோற்று, மீண்டும் கைப்பற்றியதைபோல, இத்தேர்தலில் அத்தொகுதி மீண்டும் காங். வசமாகுமா என்பது கேள்வி குறியாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.