India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், தமிழக அரசுக்கு பாஜக எம்.எல்.ஏ.வானதி புதிய யோசனை வழங்கியுள்ளார். வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாக்க ஒரு ரூபாய்-க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் என்றும், மே, ஜூன் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது சாத்தியமா என்பதை கமெண்ட் பண்ணுங்க.
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த மனுவை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு இது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததால், உச்சநீதிமன்றத்தை மேல்முறையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘தெனாலி’, ‘பஞ்சதந்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஜெயராம். இவர் தனது மகளின் திருமணத்தை குருவாயூரில் எளிமையாக முடித்திருக்கிறார். இவரது மகள் மாளவிகாவும், பாலக்காட்டைச் சேர்ந்த நவ்னீத்தும் காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடந்தது. கோயிலில் நடந்த திருமண நிகழ்ச்சியில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.
பணிப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டை மே.வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் மறுத்துள்ளார். தன் மீது குற்றச்சாட்டு கூறி யாராவது ஆதாயம் அடைய விரும்பினால் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த பெண் ஒருவர் அவர் மீது புகார் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மம்தா கட்சியினர் ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்த உள்ளனர்.
மும்பையில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில், தாயும் சேயும் உயிரிழந்தனர். மின்வெட்டு ஏற்பட்டு 3 மணி நேரமாகியும் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயக்கப்படவில்லை என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இரண்டு உயிர்கள் பறிபோன நிலையிலும், அதனை பொருட்படுத்தாது மருத்துவர்கள் மற்றொரு பிரசவத்தை இருட்டில் மேற்கொண்டதாகக் கூறினர்.
சிலர் தங்களை ஸ்டைலாகவும், மாடர்னாகவும் காட்ட ஹேர் கலரிங் செய்ய விரும்புகின்றனர். ஆனால், இது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதில் உள்ள அமோனியா போன்ற ரசாயனப் பொருட்கள், முடியில் வறட்சி, உதிர்தல், உடைதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள். சிலருக்கு தலையில் எரிச்சல், ஒவ்வாமை மற்றும் புற்றுநோய் ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு எனக் கூறப்படுகிறது.
1999ஆம் ஆண்டுக்குப் பின் ‘காந்தி’ குடும்பத்தினர் அமேதி தொகுதியில் போட்டியிடாமல் தவிர்ப்பது இதுவே முதல் முறை. 1999ஆம் ஆண்டு அத்தொகுதியில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். பின்னர், தொடர்ந்து 3 முறை ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.2019ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியைத் தழுவியதால் இந்த முறை அங்கு போட்டியிடவில்லை. இதனால், அமேதி காந்தி குடும்பத்தின் கையை விட்டுப் போகிறது
பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணியை எதிர்த்து, அவரது தந்தை பெயர் கொண்ட வேறொருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். லாலு மகள் ரோகிணி சரண் தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜன்சம்பவனா கட்சியின் சார்பாக லாலு பிரசாத் யாதவ் என்பவர் போட்டியிடுகிறார். இவர், குடியரசுத் தலைவர் தேர்தல் உள்பட பல தேர்தல்களில் போட்டியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமாக தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் பயிர்க் காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், விவசாயிகளுக்குக் காப்பீட்டுத் தொகை உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகளை திட்டமிட்டப்படி 6ஆம் தேதி வெளியிடத் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. ஒப்புதல் கிடைத்தால் 6ஆம் தேதியே முடிவுகள் வெளியாகும். அனுமதி கிடைக்க தாமதமானால், தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.