news

News May 3, 2024

அயோத்திக்கு வரும் பாகிஸ்தான் பக்தர்கள்

image

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து 200 பேர் கொண்ட சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புனிதப் பயணமாக அயோத்தி ராமர் கோயிலுக்கு இன்று தரிசனம் செய்ய வரவுள்ளனர். பிரயாக்ராஜில் இருந்து அயோத்திக்கு சாலை மார்க்கமாக வரும் அவர்களுக்காக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News May 3, 2024

7030 புதிய பேருந்துகள் வாங்க அரசு முடிவு

image

இந்த ஆண்டு 7030 புதிய பேருந்துகள் வாங்கப்பட இருப்பதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தாண்டில் மட்டும் 15 ஆண்டுகள் நிறைவடைந்த 652 பேருந்துகள் கழிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக பேருந்தின் கதவு, படிக்கட்டுகள் கழன்று விபத்து நேர்ந்ததை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள், போக்குவரத்து கழகத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

News May 3, 2024

6 மாவட்டங்களில் கனமழை

image

நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 7ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என்றும் மழையின் போது மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது.

News May 3, 2024

அமேதியில் போட்டியிடும் கே.எல்.சர்மா யார்?

image

அமேதியில் காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எல் சர்மா நேரு குடும்பத்தின் நம்பிக்கைக்குரியவராக கடந்த 40 ஆண்டுகளாக இருந்து வருகிறார். 1983இல் கட்சியில் இணைந்த அவர் ராஜிவ் காந்தியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார். 1991இல் ராஜிவ் மரணத்துக்கு பிறகு, அமேதி தொகுதி பொறுப்பாளரான அவர், 1999இல் அங்கு சோனியா வெற்றி பெற காரணமாக இருந்தார். இத்தனை வருட விசுவாசத்துக்கு அவருக்கு அமேதியை காங்., வழங்கியுள்ளது.

News May 3, 2024

2 தொகுதிகளிலும் ராகுல் வெற்றி பெறுவார்

image

மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில், 2 தொகுதிகளில் அவர் வெற்றி பெற்றால் எந்த தொகுதி எம்.பியாக தொடர்வார்? என அக்கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தேர்தல் முடிந்த பின் அதுபற்றி கட்சித் தலைமை முடிவெடுக்கும் என்றும் 2 தொகுதிகளில் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் எனவும் சூளுரைத்தார்.

News May 3, 2024

ஹீரோவை பின்னுக்கு தள்ளிய ஹோண்டா

image

இந்தியாவில் அதிக இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து, தொடர்ந்து முதலிடத்தில் இருந்த ஹீரோ நிறுவனத்தை, ஹோண்டா பின்னுக்கு தள்ளியுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில் ஹீரோ ஒட்டுமொத்தமாக 5,33,585 இருசக்கர வாகனங்களை விற்றுள்ளது. ஆனால், ஹோண்டா நிறுவனம் 5,41,946 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து முதன்முறையாக முதலிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 45% அதிகமாகும்.

News May 3, 2024

மாவட்ட கல்வி அலுவலர்களின் நியமனம் ரத்து

image

இடஒதுக்கீட்டில் குளறுபடி செய்ததாகக் கூறி, அதிமுக ஆட்சியில் TNPSC மூலம் தேர்வான 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து, 4 வாரங்களில் இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் கனவு என்பது படித்து அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான். ஆனால், TNPSC பணி நியமனத்தில் கூட இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில்லை என்றால் என்ன செய்வது.

News May 3, 2024

பிரஜ்வாலை பிடிக்க ஜெர்மனி விரைகிறது சிறப்புப் படை

image

ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு விசாரணைக் குழு முன்பு ஆஜராகி புகார் அளிக்கலாம் என கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பிரஜ்வால் ஜெர்மனி சென்றதாகத் தெரியவந்ததை அடுத்து, அவரை பிடிக்க சிறப்புக் குழுவை அந்நாட்டிற்கு அனுப்ப காவல்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

News May 3, 2024

தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலியில் போட்டி

image

தோல்வி பயத்தால் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடவில்லை என மோடி விமர்சித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் பிரசாரம் செய்த அவர், வயநாடு தொகுதியில் தோற்று விடுவார் என்பதால் ராகுல் ரேபரேலியில் போட்டியிடுவதாகவும், சோனியா காந்தியும் தேர்தலில் போட்டியிடாமல் ராஜஸ்தானில் இருந்து எம்பி ஆனதாகவும் தெரிவித்தார். காங்கிரசின் மூத்த தலைவர்களே தோல்வி பயத்தில் ஓடி ஒளிவதாகவும் தெரிவித்தார்.

News May 3, 2024

பொதுநல வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

image

தேர்தலில் ஒரு தொகுதியில் ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் (எடுத்துகாட்டு: ஓபிஎஸ் பெயரில் 5 பேர் போட்டி) போட்டியிடுவதை தடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, யாரோ ஒருவருக்கு ராகுல் காந்தி என பெயர் இருக்கிறது என்பதற்காக, அவரைத் தேர்தலில் போட்டியிடாமல் தடுத்துவிட முடியுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர்.

error: Content is protected !!