India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியில் 1.5 லட்சம் வார்த்தைகள் இருந்தாலும், பிரதமருக்கு சில வார்த்தைகளே பிடிப்பதாக RJD தலைவர் லாலு பிரசாத் கிண்டலடித்துள்ளார். மோடிக்கு பாகிஸ்தான், சுடுகாடு, முஸ்லிம், தாலி போன்ற வார்த்தைகளை பிடிப்பதாக தெரிவித்த அவர், ஏழைகள், வேலைவாய்ப்பு, முதலீடு போன்ற வார்த்தைகளை மறந்துவிட்டதாக விமர்சித்தார். மேலும் சில வார்த்தைகளை அடுத்தடுத்த பரப்புரைகளில் மோடி சேர்த்துக்கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் கஸ்தூரியின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது. வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்ற கஸ்தூரி, வாந்தி எடுக்கும்போது தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடலினை போஸ்ட்-மார்டம் செய்த மருத்துவர்கள், குழந்தை ஆண் என்பதையும், அது இறந்துவிட்டது என்பதையும் உறுதி செய்தனர். பின்னர், கஸ்தூரியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுமென்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடைபெறுவதை கவனத்தில் கொண்டு, இடைக்கால ஜாமின் அளிப்பது குறித்து, வரும் செவ்வாய்க்கிழமை பரிசீலிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதை எதிர்க்கும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்த கேவியட் மனுவில், சசிகலா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தங்களது வாதங்களைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாதென கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், இன்று மாலை 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தோல்வி பயத்தால் அவதூறுகளை அள்ளி வீசுவதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். உளவுத்துறையின் தகவலால்
தோல்வி பயத்தில் மோடி இருப்பதாக கூறிய அவர், பொறுப்பற்ற அரசியல்வாதியை 10 ஆண்டுகள் பிரதமராக பெற்றதற்காக தலைகுனிவதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்ற மோடி, தினமும் காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமேதியில் காங்கிரஸ் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளதாக ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். வெற்றிக்கான வாய்ப்பிருந்தால் ராகுல் அமேதியில் போட்டியிட்டிருப்பார் என்ற அவர், தோல்வி அடைவோம் என்று தெரிந்ததால், ராகுல் தொகுதி மாறியதாக விமர்சித்துள்ளார். 2019 தேர்தலில் ராகுலை எதிர்த்து அமேதி தொகுதியில் போட்டியிட்ட அவர், 55 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். ராகுல் இந்த முறை ரேபரேலியில் போட்டியிடுகிறார்.
இந்தியாவில் கடந்த 4 மாதத்தில் 2,23,10,000 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களிடம் இருந்து பயனர்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, மார்ச் மாதத்தில் 79 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 1,20,00,000 வாட்ஸ்அப் கணக்குகள் மட்டுமே நீக்கப்பட்டன.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,712 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 12 – 27 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியினைப் பொறுத்து ஊதியம் ₹20,000 – ₹80,000 வரை வழங்கப்படும். இதற்கு <
டயர் தயாரிப்பு நிறுவனமான எம்ஆர்எஃப், கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தின் நிகர லாபம் 7.6% சரிந்து ₹379.6 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் ₹410.7 கோடியாக இருந்தது. கடந்தாண்டு ₹5,725.4 கோடியாக இருந்த வருவாய், 8.6% உயர்ந்து, ₹6,215.1 கோடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்நிறுவனம் பங்கு ஒன்றுக்கு ₹194 ஈவுத்தொகை (Divident) வழங்க முடிவெடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.