India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
10ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவா்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தொடா்ந்து கற்போம் எனும் திட்டத்தின் கீழ், மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் மூலம் இந்த சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் மாணவா்கள் துணைத் தோ்வில் தேர்ச்சி பெற்று தங்கள் கல்வியைத் தொடர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (மே 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
▶உத்திர பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி
▶மே, ஜூனில் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்
▶இந்தாண்டு 7030 புதிய பேருந்துகள் வாங்க தமிழக போக்குவரத்து கழகம் திட்டம்
▶நாம் தமிழர் கட்சி அறிவித்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
▶மின் பயன்பாட்டில் புதிய உச்சத்தை எட்டியது தமிழ்நாடு
▶விஜயகாந்தின் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது
கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் ஒற்றை ஆளாக போராடியுள்ளார். மும்பை வீரர்கள் இஷான் கிஷன், ரோஹித் சர்மா, நமன் திர், திலக் வர்மா, நெஹல் வதேரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் விளையாடி வந்தார். 6 Four, 2 Six என விளாசி அரைசதம் கடந்தார். பின்னர், ஆண்ரே ரஸல் வீசிய ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கொரோனா தடுப்பூசி விஷயத்தில் நாட்டு மக்களின் வாழ்க்கையை பாஜக அபாயத்தில் தள்ளிவிட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். கொரோன தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும் இலவசமாக இதய பரிசோதனை செய்ய வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைத்தார். மேலும், நாட்டில் எந்த மருத்துவமனையிலும், எப்போது வேண்டுமானாலும் மக்கள் பரிசோதனை செய்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.
RPFல் 4,660 காவலர் பணியிடங்களுக்கு (SI-452, கான்ஸ்டபிள்-4,208) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. SI பணிக்கு, 20-28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், கான்ஸ்டபிள் பணிக்கு 18-28 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தேர்வு நடைபெறும். <
கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 24 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வி அடைந்துள்ளது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, தொடக்கம் முதலே அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இதனால், 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மும்பை இந்தியன்ஸ் தோல்வியை தழுவியுள்ளது. அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க், 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், மும்பை வீரர் ரோஹித் ஷர்மா மீண்டும் ஏமாற்றம் அளித்துள்ளார். இன்று முதல்முறையாக இம்பேக்ட் வீரராக களமிறங்கிய இவர், சுனில் நரைன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் களமிறங்கிய அவர், ஒரேயொரு போட்டியில் மட்டும் சதம் அடித்தாரே தவிர, பெரும்பாலான போட்டிகளில் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேஷம் – அமைதி கிடைக்கும். ரிஷபம் – கவனம் தேவை. மிதுனம் – முயற்சிக்கு ஏற்ற பலன். கடகம் – வாய்ப்புகள் கிடைக்கும். சிம்மம் – பணிபுரியும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். கன்னி – பணத்தை கவனமாக கையாளவும். துலாம் – பண வரவு. விருச்சிகம் – கருத்து வேறுபாடு அகலும். தனுசு – தடைகள் விலகும். மகரம் – பிரச்னைகள் நீங்கும். கும்பம் – நினைத்த காரியம் கைகூடும். மீனம் – குடும்பத்தில் மகிழ்ச்சி
காஸாவில் 7 மாதத்திற்கும் மேலாக போர் நீடித்துவரும் நிலையில், அங்கு கடும் உணவுப் பஞ்சம் நிலவுவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. சமீப காலமாக காஸாவிற்கு அதிக அளவில் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டாலும், அங்கு பஞ்ச நிலை இன்னும் அகலவில்லை எனத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 10 – 14 கிலோ வரை இருக்கக் கூடிய 2 வயது குழந்தைகள், வெறும் 4 கிலோ எடையில் மட்டுமே இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.