India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ, அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை என்றும், மின் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். மேலும், இது மக்களை ஏமாற்றம் ஆட்சியாகவே தான் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
1814 – ஸ்பெயின் முழுமையான முடியாட்சிக்கு மாறியது.
1912 – ‘ரோட்சு’ என்ற கிரேக்கத் தீவை இத்தாலி கைப்பற்றியது.
1926 – பிரிட்டனில் பொது வேலை நிறுத்தம் தொடங்கியது.
1930 – மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: வடக்கு ஜெர்மனி பிரிட்டனிடம் சரணடைந்தது.
1959 – முதலாவது ‘கிராமி விருது’ வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்றது.
சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்து கொடுத்த விவகாரத்தில், தாத்தாவைத் தொடர்ந்து தாயும் பலியானார். நாமக்கல்லைச் சேர்ந்த பகவதி(20) என்பவருக்கும், பெண் ஒருவருக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்து வந்தது. அதற்கு தாய் நதியா, தாத்தா சண்முகம் இடையூறாக இருந்ததாகவும், அவரை திட்டிக் கொண்டே இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பகவதி உணவில் பூச்சி மருந்தை கலந்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
மும்பைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போது, வெங்கடேஷ் ஐயர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 6 Four, 3 Six என விளாசிய அவர், தனது 9ஆவது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார். இவரது அதிரடியான ஆட்டத்தால், கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை
▶குறள் எண்: 138
▶குறள்: நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
▶பொருள்: நல்ல ஒழுக்கம் என்பது இன்பமான வாழ்க்கைக்குக் முக்கிய காரணமாக இருக்கும். ஆனால், தீய ஒழுக்கமோ எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
வறட்சியால் கருகும் தென்னை மரங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருவதால், கோவை மற்றும் திருப்பூரில் 2.5 கோடி தென்னை மரங்கள் கருகி வருகின்றன என்றும், விவசாயிகளின் துயரத்தை தீர்க்க ஒரு மரத்திற்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாளை (மே 5) தொடங்குகிறது. நாடு முழுவதும் 557 நகரங்களில் நடைபெறும் இத்தேர்வை, சுமார் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறும் இந்தத் தேர்வு, தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது.
இன்று (மே 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
KKR-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், MI வீரர் பும்ரா அபாரமாக பந்துவீசியுள்ளார். நேற்றைய போட்டியில், 4 ஓவர்கள் வீசிய அவர் 18 ரன்கள் மட்டும் கொடுத்து வெங்கடேஷ் ஐயர், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார். KKR அணி 10 விக்கெட்களை இழந்து 169 ரன்களுக்கு சுருண்டது. இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை (16 விக்கெட்டுகள்) வீழ்த்தியதற்கான பர்பிள் கேப்பை பெற்றார்.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று வேட்புமனு தாக்கல் செய்த அவர், தனது சொத்து விவரங்களையும் வழங்கியுள்ளார். அதில், தனக்கு ரூ.20 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ரூ.55,000 கையிருப்பாகவும், ரூ.26 லட்சத்து 25,157 வங்கியிலும், ரூ.49 லட்சத்து 79,184 கடன் இருப்பதாகவும் தனது மனுவில் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.