India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் பக்க விளைவுகளை ஏற்படுத்துவது பனாரஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டில் 635 இளைஞர்கள் மற்றும் 291 முதியோர்களிடம் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், 304 இளம் வயதினர் (47.9%) மற்றும் 124 முதியோர்களுக்கு (42.6%) சுவாசப் பிரச்னை, 4.6% பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை, 2.7% பேருக்கு கண் பிரச்னையும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை தற்போதைக்கு பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என நிபுணர்கள் கணித்துள்ளனர். சீனாவில் ரியல் எஸ்டேட் துறை பாதித்துள்ளதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். சீனா, ஸ்வீடன், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. இந்நிலையில், தங்கத்தின் இறக்குமதி தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்பதால், விலை குறைவது கடினம் என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 2018 – 2022 வரையிலான காலகட்டத்தில் வீடுகளில் 70% – 76% பேர், மருத்துவமனையில் 21.8% – 27.4% பேர் மரணிப்பதாக பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முதியவர்கள் வீடுகளில் உயிரிழப்பது 82% – 86.5%ஆக உள்ளது. ஆண்களை விட பெண்களே வீடுகளில் அதிகளவில் மரணம் அடைகின்றனர். மேலும், அதிகபட்சமாக அரியலூரில் 86.2% பேர் வீடுகளில் மரணம் அடைகின்றனர்.
மே 20ஆம் தேதி தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யவிருக்கிறது. அதோடு, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் மாம்பழங்களின் வரத்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3இல் ஒரு பங்காக குறைந்துள்ளது. தொடர்ந்து உயரும் வெப்பநிலை, கடுமையான மழை, சூறை காற்று ஆகிய பருவநிலை மாற்றங்களால் இந்தாண்டு மாம்பழத்தின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், சந்தைக்கு குறைந்த அளவிலான மாம்பழங்களே விற்பனைக்கு வருவதால், அதன் விலை கிலோ ₹300 வரை உயர்ந்துள்ளது. அதேநேரம், தமிழகத்தில் விலை குறைவாகவே உள்ளது.
தேர்தல் முடிவுக்குப் பின் INDIA கூட்டணிக்கு ஆதரவளிப்போம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்நிலையில், மம்தா பாஜக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறிய காங்., எம்பி ஆதிர் ரஞ்சன் செளத்ரி, மம்தாவை நம்ப நாங்கள் தயாராக இல்லை என்றார். மேலும், INDIA கூட்டணி 40 இடங்களில் கூட வெற்றிபெறாது எனக் கூறிய மம்தா, தற்போது ஆதரவளிப்பதாக கூறுவது INDIA கூட்டணியின் வெற்றியைக் காட்டுகிறது என்றார்.
நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி பூமியிலிருந்து 550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 3 நட்சத்திர அமைப்பை படம் பிடித்துள்ளது. இதில், HP Tau, HP Tau G2, HP Tau G3 ஆகிய நட்சத்திரங்கள் உள்ளன. HP Tau நட்சத்திரம் மிகவும் பிரகாசமானது. முக்கோண அமைப்பில் மேல் பக்கமாக அமைந்துள்ள சூரியனை போன்ற இந்த நட்சத்திரம், ஒரு கோடி வயதே ஆன குழந்தை என கூறப்படுகிறது. சூரியனின் வயது 460 கோடி ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதில், +2 தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து இதுவரை சுமார் 1 லட்சத்து 81 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதளம் மூலம் மே 20 வரை விண்ணப்பிக்கலாம். மே 28 – 30 சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், ஜூன் 10 – 15, 24 – 29 வரை பொது கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
RRக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய PBKS வீரர் ஹர்ஷல் படேல் (22) அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். இந்தப் பட்டியலில் ஹர்ஷல் படேல், பும்ரா, வருண் சக்ரவர்த்தி, சாஹல், கலீல் அஹமது என முதல் 5 இடங்களில் இந்திய வீரர்களே உள்ளனர். இதில் MI, PBKS எலிமினேட் ஆகியுள்ளதால் ஹர்ஷல், பும்ரா இருவரும் இந்தப் பட்டியலில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்காக இன்றும், மே 20ஆம் தேதியும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யவிருக்கிறது. தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யவிருக்கிறது. வடக்கு மாவட்டங்களில் மட்டும் அதிக மழையை எதிர்பார்க்க முடியாது.
Sorry, no posts matched your criteria.