India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விளக்கில் மகாலட்சுமி வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. தினமும் மாலை 6 மணி அளவில் (சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு) வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலமிட வேண்டும். அதன் பின்னர், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் ஆகிய மூன்றையும் கலந்து தீபம் ஏற்றி, திருவிளக்கு மந்திரம் பாடி, பால் நிவேதனம் செய்து வழிபட திருமணத்தடை, சுபகாரியத்தடை, கல்வித்தடை நீங்குவதோடு சர்வ மங்கலமும் உண்டாகும் என்பது ஐதீகம்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் சூட்டிங் விரைவில் முடிவடைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் புதிய படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். வேட்டையன் படத்துக்கு முன்பு நானியை சந்தித்து அவர் கதை கூறியதாகவும், அது நானிக்கு மிகவும் பிடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஞானவேல்-நானி கூட்டணியில் புதிய படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது.
மேக்ஸி ஸ்கூட்டர்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற மாடல் ஏரோக்ஸ். இப்போது, அதன் எஸ் மாடலை யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சில்வர் & ரேசிங் நீல நிறத்தில் அறிமுகமாகியுள்ள இந்த இரண்டாம் தலைமுறை மாடலின் விலை ரூ.1.51 லட்சமாகும். ஓ.பி.டி. சிஸ்டம் 2, டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற நவீன வசதிகளை கொண்ட இதனை, சென்சார் நுட்பத்தால் உரிமையாளர் சாவியின்றி, வெறுமனே பட்டனை அழுத்தி ஸ்டார்ட் செய்ய முடியும்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருவதாக அந்த அணி வீரர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதல் ராஜஸ்தான் அணி சிறப்பான வழியில் பயணிப்பதாக தெரிவித்த அவர், ஐபிஎல் தொடரின் இறுதி வரை அது தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2024 ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 2 தோல்விகளுடன் 16 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது.
முதல்வரின் கொடைக்கானல் பயணத்தை ஈபிஎஸ் விமர்சித்துள்ளார். கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் அவதிப்படுவதாக தெரிவித்த அவர், இந்த நேரத்தில் முதல்வர் ஓய்வெடுக்க செல்வது கண்டனத்துக்குரியது என்றார். அதிமுக ஆட்சியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டிய ஊடகங்கள், திமுக ஆட்சியில் வாய்மூடி மெளனமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். 5 நாள் கொடைக்கானல் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் நேற்று சென்னை திரும்பினார்.
4ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 360 வேட்பாளர்களில் 21% பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 40 பாஜக வேட்பாளர்கள், 35 காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும், அவர்களில் 11 பேர் மீது கொலை, கொலை முயற்சி, 5 பேர் மீது கற்பழிப்பு வழக்குகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சூர்யா தான் விரும்பும் விஷயத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் குணம் கொண்டவர்; அதன் குணத்திற்காகத்தான் அவரைத் திருமணம் செய்துகொண்டேன் என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார். யூட்யூப் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “எனக்காக, குழந்தைகளுக்காக, நடிப்பிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர் சூர்யா. இப்போது, அவர் ‘கங்குவா’ படத்திற்காக 200% தீவிரமாக உழைத்து வருகிறார்” எனக் கூறினார்.
மும்பை அணி வீரர்களே ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக ஏற்றுக்கொள்ளவில்லை என இர்பான் பதான் விமர்சித்துள்ளார். ஆரம்பம் முதலே எந்த திட்டமிடலும் இல்லாமல் விளையாடிய பாண்டியா, ஐபிஎல்லில் மும்பையின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா 57/5 என திணறிய போது, அந்த அணிக்கு உயிர் கொடுத்தது பாண்டியாவின் திட்டமிடாத பவுலிங் என்று சாடியுள்ளார்.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனம், சில்லரை வர்த்தகம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டுள்ளது. அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹19.43 லட்சம் கோடியாகும். நேற்று, அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு காலையில் ₹2,933ஆக இருந்தது. வர்த்தக நேர முடிவில் 2.22% குறைந்து ₹2,868ஆக சரிந்தது. இதனால் முகேஷ் அம்பானிக்கு நேற்று ஒரே நாளில் ₹43,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல ஈரோடு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருப்பூர், தி.மலையில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.