news

News August 20, 2024

அண்ணாமலை படத்துடன் ஆட்டை வெட்டியவர்கள் மீது FIR

image

கிருஷ்ணகிரியில் ஆட்டை நடுரோட்டில் வெட்டிய சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு, திமுகவை சேர்ந்த சிலர் ஆட்டுக்கு அண்ணாமலை படத்தை அணிவித்து நடுரோட்டில் வெட்டினர். இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

News August 20, 2024

தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை: ஷனம் ஷெட்டி

image

தமிழ் சினிமா துறையிலும் பாலியல் தொல்லை தரப்படுவதாக, நடிகை ஷனம் ஷெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார். மலையாள சினிமாவில் நடக்கும் அவலங்கள் குறித்து, நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கைக்கு நன்றி கூறிய அவர், பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் என்ற நிலை தமிழ் சினிமாவிலும் உள்ளதாகச் சாடினார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியால் ஃபேமஷான ஷனமின் இந்த கருத்து, தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News August 20, 2024

கலைத் திருவிழா.. நாளையுடன் அவகாசம் நிறைவு

image

‘சூழல்‌ பாதுகாப்பு அனைவரின்‌ பொறுப்பு’ என்ற தலைப்பில், அரசு, அரசு உதவிப் பள்ளிகளில் நாளை மறுநாள் கலைத் திருவிழா தொடங்குகிறது. 1 முதல் +2 வரை, மாணவர்கள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஓவியம், நடனம், பேச்சு, கட்டுரை என பல வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆக.30 வரை நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்க, பதிவு செய்வதற்கான அவகாசம் நாளை முடிவடைகிறது. மாணவர்களே நீங்கள் எந்த போட்டியில் பங்கேற்கிறீர்கள்?

News August 20, 2024

கோப்பைக்காக 5,924 நாட்களாக காத்திருக்கும் RR

image

ஐபிஎல்லில் ஒருமுறை கோப்பையை வென்ற பின் அடுத்த கோப்பைக்காக அதிக நாள்கள் காத்திருக்கும் அணி என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படைத்துள்ளது. 2008ல் நடைபெற்ற முதல் IPL தொடரை கைப்பற்றிய RR தற்போது வரை 5,924 நாள்களாக அடுத்த கோப்பைக்கு காத்திருக்கின்றனர். SRH 3,005 நாள்கள், MI 1,379 நாள்கள், GT 814 நாள்கள், CSK 451, KKR 86 நாள்களாக அடுத்த கோப்பைக்காக காத்திருக்கின்றனர்.

News August 20, 2024

விரைவில் மாமன், மச்சான் கூட்டணி : அண்ணாமலை

image

பாஜக தலைமையில் மாமன், மச்சான் கூட்டணி அமைக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அரசியலில் பங்காளிகளாக செயல்படும் திமுக, அதிமுகவுடன் பாஜக ஒருபோதும் இணையாது என்றும் அவர் உறுதிபட கூறினார். விஜய் உடன் எதிர்காலத்தில் பாஜக கூட்டணி அமைக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய்யும் எங்களுக்கு மாமன், மச்சான் உறவுதான் என்றார்.

News August 20, 2024

போராட்டத்தில் குதித்தார் கங்குலி

image

கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாளை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கங்குலி தெரிவித்துள்ளார். மாணவி வன்கொடுமைக்கு எதிராக நாடும் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் தனது மனைவி நடத்தும் நடனப் பள்ளியில் நடக்கும் போராட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளார். முன்னதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தின் DP-ஐ கருப்பாக மாற்றியிருந்தார்.

News August 20, 2024

பாஜகவுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்? கனிமொழி

image

தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யாத பாஜகவுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும் என கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவுடனான திமுகவின் உறவில் எந்த மாற்றமும் இல்லை என்ற கூறிய அவர், மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய பாஜக அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். அனைவரிடம் அன்பாக பழகும் முதல்வர் ஸ்டாலின், உரிமைக்காக கலைஞர் போல் போராடக் கூடியவர் என்றும் தெரிவித்தார்.

News August 20, 2024

கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம்: ஐகோர்ட்

image

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபடலாம். இதை யாரும் தடுக்க கூடாது. இதை மீறினால், உரிய தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, ஆனி திருமஞ்சன விழாவில் கனகசபையில் பக்தர்கள் தரிக்க அனுமதி கோரி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது.

News August 20, 2024

விஜய்க்கு அனுமதி மறுப்பு?

image

கட்சி கொடியேற்ற அனுமதி கேட்டு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி இருந்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக. 22ஆம் தேதி பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் 5,000 தொண்டர்கள் மத்தியில், கட்சி கொடியை ஏற்றி, முதல் அரசியல் உரையாற்ற விஜய் திட்டமிட்டிருந்தார். இவ்விழாவிற்கு பாதுகாப்பு கோரி அவர் கடிதம் அளித்திருந்த நிலையில், போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

News August 20, 2024

சோ மனைவியின் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

image

துக்ளக் நிறுவனரும், மூத்த பத்திரிகையாளருமான சோ ராமசாமியின் மனைவி செளந்தரா ராமசாமி மறைவுக்கு, CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், செளந்தரா ராமசாமியின் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!