India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா 49ஆவது இடத்தை பிடித்துள்ளது. 33ஆவது ஒலிம்பிக்ஸ், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களுடன் 49ஆவது இடத்தில் உள்ள நிலையில் சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா முதல் 3 இடங்களில் உள்ளன.
*மேஷம் – போட்டியை தவிர்க்கவும்
*ரிஷபம் – நன்மை தேடி வரும்
*மிதுனம் – மேன்மை உண்டாகும்
*கடகம் – மகிழ்ச்சி அதிகரிக்கும்
*சிம்மம் – களைப்பு ஏற்படும்
*கன்னி – வெற்றி கிடைக்கும்
*துலாம் – ஆர்வம் அதிகரிக்கும்
*விருச்சிகம் – பரிவு உண்டாகும்
*தனுசு – நிதியுதவி செய்யும் நாள்
*மகரம் – அனுகூலம் உண்டாகும் *கும்பம் – புகழ் அதிகரிக்கும் *மீனம் – உயர்வான நாள்
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், தங்களுக்கு கவலை இல்லை என பாக்., முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார். ஐசிசி நடத்தும் தொடரில் இந்தியா விளையாடவில்லை என்றால் அதற்கு ஐசிசி-தான் கவலைப்பட வேண்டுமே தவிர பாகிஸ்தான் அல்ல என்றார். மேலும், ஐசிசி-தான் இது குறித்து பேச வேண்டும் எனக் கூறியுள்ளார்.
*மாற்றுத்திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட தாழ்தளப் பேருந்து சேவை, சென்னையில் நாளை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.
*சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஓவியக் கண்காட்சி
*சாலை பணிக்காக 4 மாதமாக மூடியிருந்த, உதகை பைக்கார படகு இல்லம் நாளை முதல் திறக்கப்படுகிறது.
*தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை எனக் கூறி சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் நாளை போராட்டம்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நள்ளிரவு 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக் வாய்ப்புள்ளது.
வயநாட்டில் ராணுவ வீரர்களின் மீட்பு பணிகளால் ஈர்க்கப்பட்ட 3ஆம் வகுப்பு மாணவன் ரேயன், அவர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “அன்புள்ள இந்திய ராணுவமே, எனது அன்புக்குரிய வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி, மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை நீங்கள் மீட்பதை கண்டு பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். Big சல்யூட்” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலை மாறும் வரை, அதிமுகவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், எந்த சூழலில் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்தோமோ, அதில் மாற்றம் நிகழாத வரை அதிமுகவுடன் இணையப்போவது இல்லை என திட்டவட்டமாக கூறினார். மேலும், அதிமுகவின் தோல்விக்கு இபிஎஸ் தான் காரணம், தொண்டர்கள் அவரை விரட்டும் காலம் விரைவில் வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் முன், அந்த பங்கின் சில அளவுகோல்களை கட்டாயம் ஆராய வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர். *PE விகிதம் 20க்கு கீழ் இருக்க வேண்டும். *வங்கி சார்ந்த பங்குகளுக்கு PB விகிதம் 2க்கு கீழ் இருக்க வேண்டும். *ROCE, ROE 15க்கு மேல் இருக்க வேண்டும். *குறைந்த கடன் அல்லது கடன் இல்லாத நிறுவனமாக இருக்க வேண்டும். *அந்நிறுவனம் செய்யும் தொழில் முதலீட்டாளர்களுக்கு புரிய வேண்டும்.
சில வாரங்கள் முன்பு, காதல் முறிந்து பிரிந்த செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் இணை கேத்தரினா மற்றும் தாமஸ் மச்சாக், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். Breakup செய்திருந்தாலும், நாட்டுக்காக கலப்பு இரட்டையர் பிரிவில் சேர்ந்து விளையாடிய அவர்கள், சீன இணையை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர். தொடர்ந்து, ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர்.
SBI வாடிக்கையாளர்களிடம் ரிவார்ட் பாயிண்ட் என்ற பெயரில் சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடி செய்து வருகின்றனர். அக்கவுண்ட்டில் ரிவார்டு பாயிண்டுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றைப் பெற SBI Rewards ஆஃபை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் பயனர்களுக்கு ஒரு APK ஃபைல் அனுப்பப்படுகிறது. ஆனால், இது பொய் செய்தி என்றும், அந்த ஆஃபை பதிவிறக்கம் செய்து பணத்தை இழக்க வேண்டாம் என்றும் PIB Fact Check எச்சரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.