news

News August 4, 2024

போஸ்டர் ஒட்டுபவர்கூட தலைவராகலாம்: நிதின் கட்கரி

image

பாஜகவில் போஸ்டர் ஒட்டுபவர்கூட தலைவராகலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நாக்பூரில் நடந்த பாஜக மாநாட்டில் பேசிய அவர், “பாஜக வாரிசு கட்சியல்ல, உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் கட்சி. தெருத்தெருவாக சென்று துண்டறிக்கைகளை விநியோகித்து, மக்களிடையே பிரசாரம் செய்த அடிமட்டத் தொண்டர்களை பதவியில் உட்கார வைத்து அழகு பார்ப்பது பாஜகவில் மட்டுமே நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

News August 4, 2024

9 ஆயிரத்தைத் தாண்டிய புத்தொழில் நிறுவனங்கள்

image

தமிழ்நாட்டில் தற்போதுவரை 9,038 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக MSME
தொழில்துறை தெரிவித்துள்ளது. 2021இல் 966ஆக இருந்த மகளிர் புத்தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை தற்போது 3 மடங்கு அதிகரித்து 4,446 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலை கட்டமைத்து செயல்படும் மாநிலங்களின் (மத்திய அரசு வெளியிட்டது) பட்டியலில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

News August 4, 2024

ஆகஸ்ட் 4 வரலாற்றில் இன்று!

image

*1578–போர்த்துகீஸ் போரில் மொரோக்கோ படை வென்றது. *1783–பஞ்சத்தால் ஜப்பானில் 20,000 மக்கள் உயிரிழந்தனர். *1948–இலங்கையில் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. *1965–குக் தீவுகள் சுயாட்சி அதிகாரம் பெற்றது. *1972–சிம்லா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. *1987–விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுதுமலை உரையை நிகழ்த்தினார் *2008–அறிஞர் அகத்தியலிங்கம் மறைந்த நாள்.

News August 4, 2024

OLYMPICS: அவுட்டிங் சென்ற வீராங்கனை வெளியேற்றம்

image

ஆண் நண்பருடன் அவுட்டிங் சென்ற பிரேசில் நீச்சல் வீராங்கனை அன்னா கரோலினாவை அந்நாட்டு ஒலிம்பிக்ஸ் கமிட்டி (BOC) அணியில் இருந்து நீக்கியுள்ளது. அன்னா கரோலினா, சக வீரர் சாண்டோஸ் உடன் உரிய அனுமதியின்றி ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் இருந்து வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஒழுங்கு நடவடிக்கையாக அவரை அணியில் இருந்து நீக்கிய BOC, உடனடியாக அவர் நாடு திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

News August 4, 2024

உற்பத்தி வளர்ச்சி சற்றே குறைந்ததற்கு காரணம் என்ன?

image

இந்தியாவின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி சற்றே குறைந்துள்ளதாக எஸ்&பி குளோபல் இந்தியா தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், கடந்த ஜூனில் 58.30 புள்ளிகளாக இருந்த அதன் பி.எம்.ஐ., குறியீடு 58.10ஆக குறைந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலோகம், ரசாயனம் உள்ளிட்ட 8 பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் புதிய ஆர்டர்கள் குறைந்ததன் காரணமாகவே இந்த சிறு சரிவு ஏற்பட்டிருக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News August 4, 2024

5 ஆண்டுகளில் 17,017 செல்ஃபோன்கள் திருட்டு

image

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 17,017 செல்ஃபோன்கள் திருடு போனதாக மாநில குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. சென்னைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சசிகுமார் RTI மூலம் கேட்ட கேள்விக்கு குற்ற ஆவண காப்பகம், 2018 முதல் 2022 வரை, சென்னையில் மட்டும் 5,365 செல்ஃபோன்கள் திருடு போயுள்ளன. 17,017இல் 7,984 செல்ஃபோன்களை மீட்க முடியவில்லை. 2023ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்கள் சரிபார்ப்பு நிலையில் உள்ளதாக பதிலளித்துள்ளது.

News August 4, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶குறள் எண்: 12
▶குறள்: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. ▶பொருள்: உண்பவர்களுக்குத் தக்க நல்ல வேளாண் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, அவர்கள் பருக இன்னுமோர் உணவாகவும் பயன்படும் மழையை போற்றுவோம்.

News August 4, 2024

கணக்கெடுப்பு நடத்த ஸ்டாலின் பயப்படுகிறார்: அன்புமணி

image

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த திமுக அரசு உத்தரவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், உள்ள அனைத்து சாதி மக்களும் அதிகாரத்தில் உரிய பங்கீடு கேட்பார்கள் என்ற பயம் முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், திமுக அரசுக்கு சமூக நீதி குறித்து அக்கறை இல்லை என விமர்சித்துள்ளார்.

News August 4, 2024

ஜஸ்பிரித் பும்ராவை பாராட்டிய ரவி சாஸ்திரி

image

வாசிம் அக்ரம், ஷேன் வார்னே போன்ற ஜாம்பவான்களை போல ஜஸ்பிரித் பும்ராவும் திறமையை கொண்டிருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். பும்ரா தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை டி20 உலகக்கோப்பையில் தொடரில் காட்டிவிட்டதாகக் கூறிய அவர், அழுத்தமான சூழ்நிலையில் யார்க்கர் பந்துகளை வீசி மார்கோ ஜான்சன் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களை வீழ்த்துகிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

News August 4, 2024

மத்திய அரசிடம் ₹1,151.65 கோடி கடன் கேட்கும் MTNL

image

கடன் உத்தரவாத பத்திரங்களுக்கான வட்டியை செலுத்த ₹1,151.65 கோடியை கடனாக வழங்குமாறு மத்திய அரசிடம் MTNL நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான MTNL ₹32,000 கோடி கடனில் தவித்து வருகிறது. இதன் காரணமாக அந்நிறுவனத்திடம் ஆக., 10ஆம் தேதியுடன் முதிர்வடையும் கடன் உத்தரவாத பத்திரங்களுக்கு வட்டியைச் செலுத்த போதிய நிதியில்லை எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!