India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
என்ஜீனியர்களுக்கு இந்திய கடற்படையின் தகவல் தொழில்நுட்பப்பிரிவில் SSC EXECUTIVE பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், 18 பணியிடங்களுக்கான ஆட்தேர்வு நடைபெற இருப்பதாகவும், விண்ணப்பப்பதிவு 2ஆம் தேதி முதல் நடைபெறுவதாகவும், விண்ணப்பிக்க 16ஆம் தேதியே கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதியாக MSC, BE, B.TECH, M.TECH, MCA நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விதிகளில் 2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கொண்டு வந்த திருத்தத்தின்படி, ஒருநாள் போட்டி இருதரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி, டையில் முடியும்பட்சத்தில், யார் வெற்றியாளர் என்பது முடிவாகும் வரை தொடர்ந்து சூப்பர் ஓவர் வீசப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதி ஏன், இந்தியா-இலங்கை முதல் ஒருநாள் போட்டியில் பின்பற்றப்படவில்லை என, புது குழப்பம் எழுந்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இளங்கலை பட்டப்படிப்பு ( 1 செமஸ்டர் முதல் 5வது செமஸ்டர் வரை), முதுகலை படிப்பு மற்றும் தொழில்சார் படிப்புகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. https://egovernance.unom.ac.in/results/, https://Exam.unom.ac.in ஆகிய தளங்களில் முடிவுகளை அறியலாம். மறுமதிப்பீட்டுக்கு ஆக.6 முதல் 10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஒலிம்பிக்ஸ் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை, மனுபாக்கர் ஏந்திச்செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த மனு பாக்கர், ‘இந்திய கொடியை ஏந்தும் வாய்ப்பு கிடைத்தால், அதைவிட வாழ்நாள் கௌரவம் எதுவுமில்லை” என கூறியிருந்தார். இதனிடையே, 2 பதக்கங்கள் வென்ற மனுபாக்கர், நிறைவு விழாவில் தேசியக்கொடியை ஏந்தி, இந்திய அணியை வழிநடத்துவார் என, இந்திய ஒலிம்பிக்ஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு 30 நாள்கள் தங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா செல்ல, இம்மாதம் 22ஆம் தேதி, 26ஆம் தேதி ஆகிய 2 தினங்களில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் 26ஆம் தேதியே அமெரிக்கா செல்ல அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் தங்கியிருந்து, முதல்வர் மருத்துவ சிகிச்சை எடுக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தியா, இலங்கை இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி டையில் முடிந்தது. இதையடுத்து 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெல்ல 2 அணிகளும் தீவிரமாக முயற்சிக்கக்கூடும் என்றும், முழுத்திறனையும் வெளிப்படுத்தும் எனவும், ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சிக்கும் நிலையில், மத்திய அரசின் மீது சந்தேகம் எழுவதாக, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “கர்நாடகா காங்கிரஸ் அரசு குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசாத மூத்த அமைச்சர் துரைமுருகன், சித்தராமையாவிடம் கை நீட்டி பணம் வாங்கி விட்டாரோ? என்ற சந்தேகம் உள்ளது” என பதிலடி கொடுத்துள்ளார்.
5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோல், நீலகிரி, ஈரோடு, கோவையில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
பாரிஸில் நடக்கும் 33ஆவது ஒலிம்பிக்ஸ் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் 10ஆவது நாளாக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இதில், மெட்ரோ ரயிலுக்குள் நீல நிறப் பறவையொன்று, அதன் கைப்பிடிகளைப் பிடித்துக் கொண்டிருப்பது போன்ற குறியீடு இடம்பெற்றுள்ளது. ஆடவர்களுக்கான ரிங் ஜிம்னாஸ்டிக்ஸ் இன்று நடைபெறவுள்ளது. அதனை பிரதிபலிக்கும் வகையில் இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. <<-se>>#Olympics<<>>
இலங்கைக்கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க, முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மீன்பிடித்தொழில் என்பது பாதுகாப்பானதாக இல்லை என சாடினார். மீனவர்கள் கைது விவகாரத்தில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை தவிர, ஸ்டாலின் வேறு எந்த நிர்பந்தமும் தரவில்லை என்றும் குறை கூறினார்.
Sorry, no posts matched your criteria.