India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என லோக் ஜன சக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். எஸ்சி கோட்டாவில் கிரிமீலேயரை அனுமதிக்க முடியாது என்ற அவர், எஸ்சி ஒதுக்கீட்டுக்குள் உள்ஒதுக்கீட்டை அனுமதிப்பது, சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட பிரிவினரை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றாது என்றார்.
குத்துச்சண்டை போட்டியில் மகளிர் 66 கிலோ எடைப்பிரிவில் பதக்கத்தை, அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் உறுதி செய்துள்ளார். இதன் மூலம் அந்த நாட்டுக்காக ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற முதல் குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை, அவர் பெற்றுள்ளார். ஹங்கேரியின் லூகா அன்னா ஹமோரியை வீழ்த்திய அவரது வெற்றியை அல்ஜீரிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். அண்மையில், அவரது பாலினம் சார்ந்த சர்ச்சை, உலகளவில் பேசு பொருளானது.
ஆடி மாதம் என்பதால், நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கறிக்கோழி (உயிருடன்) விலை ₹20 குறைந்து ₹95க்கு விற்கப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனையில் 1 கிலோ கோழி இறைச்சி ₹160 முதல் ₹200 வரை விற்பனையாகிறது. பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ₹4.30ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ₹5.20க்கு விற்கப்படுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் இன்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். துப்பாக்கிச்சுடுதலில் விஜய்வீர் சித்து, அனிஷ்பகல் களமிறங்குகின்றனர். மேலும், இந்தியா-இங்கிலாந்து (ஆண்கள் காலிறுதி ஆட்டம்) ஹாக்கிப்போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்மிண்டனில் லக்ஷயா சென் (இந்தியா)-விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) (ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி) நடைபெறவிருப்பது, குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் முன், அமைச்சரவையில் மாற்றம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது சீனியர்கள் சிலருக்கு கல்தா கொடுக்கப்படலாம் என்றும், ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கி பதவியை இழந்த ஆவடி நாசருக்கு அமைச்சர் பதவி தரலாம் எனவும் சொல்லப்படுகிறது.
ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 9
தங்கப்பதக்கங்களுடன் நேற்று 4வது இடத்தில் இருந்தது. இந்நிலையில், இன்று மேலும் 5 தங்கப்பதக்கங்களை வென்று, மொத்தம் 14 தங்கப்பதக்கங்களுடன் 2ஆம் இடத்துக்கு மீண்டும் முன்னேறியுள்ளது. சீனா 16
தங்கப்பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பிரான்ஸ், ஆஸ்திரேலியா (12 தங்கம்) 3 மற்றும் 4ஆவது இடத்தில் உள்ளன. இந்தியா 3 வெண்கலத்துடன் 54ஆவது இடத்தில் உள்ளது.
வயநாடு நிலச்சரிவால் ஏராளமானோர் பலியானதற்கு, பசுவதையே முக்கிய காரணம் என, ராஜஸ்தான் பாஜக மூத்தத்தலைவர் கியான்தேவ் அஹுஜா கூறியுள்ளார். பசுக்களை கொல்வதை கேரளா நிறுத்தாவிட்டால், இது மேலும் தொடரும் என பேசியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 2017இல் பசுக்களை கடத்துபவர்கள் அடித்துக்கொல்லப்படுவார்கள் என மிரட்டிய விவகாரம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, குறிப்பிடத்தக்கது.
புதிய படத்திற்கான பணிகளை துவங்கியுள்ளதாக, இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். X பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், அவருடன் நடிகர் ரிச்சர்ட் ரிஷியும் இருக்கிறார். அடுத்து மோகன் ஜி இயக்கும் படத்திலும், அவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பார் என தெரிகிறது. இதற்கு முன் மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களில் ரிஷி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றிய இளைஞர், வெள்ளத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரல்மலையை சேர்ந்த பிரஜீஷ் (32) நிலச்சரிவில் சிக்கிய பலரை மீட்டுள்ளார். நண்பர்கள் எச்சரித்தும் கேட்காமல், மலை உச்சியில் வசிப்போரை மீட்க, ஜீப்பில் சென்றபோது, அவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றிய பிரஜீஷை, ஊர்மக்கள் சூப்பர் ஹீரோ என்கின்றனர்.
திண்டுக்கல் – கோவை அணிகளுக்கு இடையிலான டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2ஆவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.