India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எல்லைப்பிரச்னையை வைத்து எதிர்காலத்தில் போர் மூண்டால், இந்த 8 நாடுகளில் இருந்தும் இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதையடுத்து பதிலுக்கு சீனாவுக்கு எதிராக, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான், தென்கொரியா, மங்கோலியாவுடன் நட்புறவை இந்தியா அதிகரிக்கத்துவங்கியுள்ளது. சீனாவுடன் ஏற்கெனவே போரிட்டுள்ள வியட்நாமுக்கு பிரமோஸ் ஏவுகணையை இந்தியா அளித்துள்ளது.
ரஷ்ய நீர்மூழ்கிக்கப்பலை தாக்கி மூழ்கடித்து விட்டதாக, உக்ரைன் அறிவித்துள்ளது. செவஸ்டபோலில் தாக்குதல் நடத்தி, அக்கப்பலை மூழ்கடித்ததாகவும், இத்தாக்குதலில் S-400 வான்பாதுகாப்பு சாதனங்கள் 4 சேதப்படுத்தப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்ய விமானத்தளம், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் உக்ரைன் கூறியுள்ளது. ஆனால், இதுகுறித்து ரஷ்யா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
தபால் நிலைய 44,228 வேலைகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்து கொள்வோம். இந்திய தபால் துறையின் இணையதளமான <
இதையடுத்து, மொபைல் எண், மின்னஞ்சலுக்கு ஓடிபி வரும். அதை பதிவிட்டு உறுதிப்படுத்தி, ஆதார் எண், புகைப்படம், சுய கையொப்பத்தை பதிவேற்றி SUBMIT கொடுக்க வேண்டும். இதை செய்ததும், சுய விவர பக்கம் வரும். அதை உறுதி செய்ததும், REGISTRATION NUMBER வரும். அதை குறிப்பெடுத்து கொண்டு, CONTINUE APPLY என்பதில் பதிவிட்டு, மாநிலத்தை தேர்வு செய்ததும், மொபைலுக்கு வரும் ஓடிபியை பதிவிட வேண்டும்.
பின்னர், வீட்டு முகவரி, கல்வித் தகுதியை பதிவேற்ற வேண்டும். இதை செய்தபிறகு, SELECTION DIVISION என்பதில் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் பகுதியை தேர்வு செய்ய வேண்டும். இதன்பிறகு DECLARATION என்பதில் ஓகே கொடுத்து SAVE- PROCEED கொடுத்து, ரூ.100 கட்டணத்தை செலுத்த வேண்டும். இதை முடித்ததும், நீங்கள் வேலைக்கு விண்ணப்பித்த APPLICATION FORM வரும். இதை பதிவிறக்கி தேர்வில் பயன்படுத்தலாம்.
ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா இன்னும் 7 ரன்கள் அடித்தால், அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் தோனி சாதனையை (11ஆவது இடம்) முந்துவார். ஒருநாள் போட்டிகளில் தோனி 10,773 ரன்கள் எடுத்துள்ள நிலையில், ரோஹித் ஷர்மா 10,767 ரன்கள் எடுத்துள்ளார். இன்று இலங்கைக்கு எதிரான போட்டியில் ரோஹித் இந்த சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ODI-ல் சச்சின் 18,426 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
ஷாருக்கானை வைத்து இந்தியில் ‘ஜவான்’ படத்தை இயக்கிய அட்லீ, அடுத்ததாக ஒரு தெலுங்கு படத்தை இயக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதை மல்ட்டி ஸ்டார் படமாக எடுக்க உள்ளதாகவும், இதற்கான கதை தேர்வில் அட்லீ ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. முன்னதாக அவர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது.
நிலச்சரிவு நேரிட்டால் எப்படி தப்பிப்பது, உயிரைக் காப்பது என்பது குறித்து மீட்புப்படையினர் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அதனை தெரிந்து கொள்ளலாம். நிலச்சரிவு குறித்து முன்னெச்சரிக்கை எதுவும் வந்தால், அதை அலட்சியமாகக்கருதி புறக்கணிக்கக்கூடாது. உடனடியாக அங்கிருந்து
தப்பிச்செல்ல தயாராக இருக்க வேண்டும். அருகில் மணல் சரிவது, மரங்கள் முறியும் சத்தம் கேட்டால் அலட்சியப்படுத்தக்கூடாது.
நிலச்சரிவின்போது வீட்டுக்குள் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் கனமான மேஜை, சுவர் அடுக்கு ஆகியவற்றின்கீழ் சென்று பதுங்கிக்கொள்ள வேண்டும். நிலச்சரிவு முடியும் வரை வெளியேறக்கூடாது. நிலச்சரிவின்போது வீட்டுக்கு வெளியே இருந்தால், உடனே நிலச்சரிவு பாதையில் இருந்து வேகமாக விலகி செல்ல முயற்சிக்க வேண்டும். இதுபோன்ற முன்னெச்சரிக்கையுடன் இருந்தால், உயிர் தப்பலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், திமுக வேட்பாளராக ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. புதிய மேயர் தொடர்பாக, அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, K.N நேரு ஆலோசனை மேற்கொண்டு இம்முடிவை எடுத்தனர். முன்னதாக, நெல்லை மேயராக இருந்த சரவணனுக்கு எதிராக 55 கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கியதால், அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு நாளை மறைமுக தேர்தல் நடக்கிறது.
Sorry, no posts matched your criteria.