India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி காலிறுதி போட்டியில் பல கோல்களை தடுத்து இந்திய அணி அரையிறுதிக்குச் செல்ல முக்கியப் பங்காற்றிய கோல் கீப்பர் ஸ்ரீஜேஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. பிரிட்டனுக்கு எதிரான போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணியை பெனால்டி ஷூட் அவுட்க்கு கொண்டு சென்று, அதிலும் 2 கோல்களை தடுத்து வெற்றி பெற செய்தார். நடப்பு ஒலிம்பிக் உடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், திருமணம் குறித்த பட்டப்படிப்பை சீன அரசு கொண்டு வந்துள்ளது. ‘திருமண சேவைகள் மற்றும் மேலாண்மை’ என பெயரிட்டுள்ள இந்த படிப்பு, அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 12 மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும், இதை படிப்பவர்களுக்கு திருமணம் சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இரவு 7 மணி வரை திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, க.குறிச்சி, கடலூர், விருதுநகர், கோவை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், காஞ்சி, சென்னை, செ.பட்டு, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, சேலம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.
தற்காலிக கணினிப் பயிற்றுநர்களுக்கு, டிசம்பர் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2006 முதல் 1,880 கணினிப் பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது பணிக்காலம் ஜூலையுடன் முடிவடைந்த நிலையில், அதனை டிசம்பர் வரை நீட்டித்தும், அதுவரை சம்பள பட்டியல் தாக்கல் செய்யும்போது அவர்களுக்கு ஊதியம் வழங்கவும் கொடுப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் தோல்வியை தழுவினார். அரையிறுதி போட்டியில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்-ஐ எதிர்கொண்ட அவர், 0-2 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த அவர், வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடவுள்ளார்.
தொடர் வளர்ச்சியை கண்டு வந்த இந்திய பங்குச்சந்தை, வர்த்தக வார இறுதியில் கடும் சரிவை எதிர்கொண்டது. இதன் எதிரொலியாக, டாப் 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே வாரத்தில் ₹1,28,913.5 கோடி சரிந்தது. அதிகபட்சமாக TCS-இன் மதிப்பு ₹37,971.83 கோடி குறைந்து, ₹15,49,626.88 கோடியாக சரிந்தது. அதேபோல இன்ஃபோசிஸ், ஐடிசி, எஸ்பிஐ, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பும் அதிகளவில் சரிந்தன.
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார். அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் வைகோ தலைமையில் நடைபெற்றது. அப்போது, நீட் தேர்வு மோசடி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது, பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு ஆகியவற்றை கண்டித்து வரும் 14ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
நடனக் கலைஞர், டாக்டர் யாமினி கிருஷ்ணமூர்த்தியின் மறைவு வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து Xஇல் பதிவிட்டுள்ள அவர், பாரம்பரிய நடனத்தில் யாமினி கிருஷ்ணமூர்த்தியின் அர்ப்பணிப்பு, நமது கலாச்சாரத்தில் அழியாத முத்திரை பதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பத்ம விபூஷன் விருது பெற்ற யாமினி, உடல்நலக்குறைவால் டெல்லியில் நேற்று காலமானது குறிப்பிடத்தக்கது.
புதிதாக அதிக விலை கொடுத்து ஸ்மார்ட்போன் வாங்க முடியாத காரணத்தால் சிலர், ஆன்லைனில் பழைய போனை குறைந்த விலைக்கு வாங்குவதுண்டு. அவர்களுக்கான ஆலோசனைதான் இது. ஆன்லைனில் சில நேரம் திருட்டுப் போனை மர்ம நபர்கள் தங்களது போன் என பொய் சொல்லி விற்று மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. அந்தப் போனை வாங்கினால், அதை பறிகொடுத்தோர் கொடுத்த புகாரின்பேரில் காவல்துறை கண்காணித்து கொண்டிருக்கும்.
போனில் சிம்கார்டு போட்டதும் விரைந்து வந்து போலீஸ் போனை பறிமுதல் செய்வதோடு, உங்களையும் விசாரணைக்கு அழைத்துச்செல்லும். போலீசிடம் உண்மையை தெரிவித்து நிரபராதி என நிரூபித்து மீள்வதற்குள், போதும் போதும் என்றாகிவிடும். ஆதலால் பழைய போனை வாங்கும்போது, அவர் உண்மையான உரிமையாளரா? என்பதை உறுதிசெய்வது அவசியம். இல்லையெனில், குறைந்த விலைக்கு ஆசைப்பட்டு சிக்கலில் சிக்குவீர்கள்.
Sorry, no posts matched your criteria.