India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கதேசத்தில் மீண்டும் பயங்கர கலவரம் ஏற்பட்டதில் 72 பேர் பலியாகியுள்ளனர். அரசுப் பணியில், தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இந்நிலையில், போராட்ட குழுவுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் கலவரம் வெடித்தது. இதனால் அங்கிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய வீரர் லக்ஷயா சென்னுடன் விளையாடிய இன்றைய போட்டி மிகவும் கடினமாக இருந்ததாக, டென்மார்க் வீரர் விக்டர் தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் அரையிறுதியில் இருவரும் இன்று மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் விக்டர் வெற்றிபெற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், லக்ஷ்யா சென் மிகவும் திறமையானவர் எனவும், அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளதாகவும் புகழாரம் சூட்டினார்.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ரன் குவிப்பில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இலங்கைக்கு எதிரான 2ஆவது ODI போட்டியில் அரை சதம் விளாசியுள்ள அவர், அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 4ஆம் இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் டிராவிட்டை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார். சச்சின் (18426), கோலி (13872*), கங்குலி (11221), ரோஹித் (10794*), டிராவிட் (10768) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.
வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்காக, கோழிக்கோடு மாநகராட்சி ₹3 கோடி வழங்கியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 29இல் நிகழ்ந்த நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கல் உள்பட 3 கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கோழிக்கோடு மாநகராட்சி சார்பில் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ₹3 கோடி வழங்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் தியாகிகளின் வாரிசுகளுக்கு, அரசு பணிகளில் ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில், மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. அரசின் 30% இடஒதுக்கீடு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததில், மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வங்கதேசம் வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு 2024-25க்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விளையாட்டில் கபடி, சிலம்பம் உள்பட 53 வகையான போட்டிகள் நடத்தப்படும். நடப்பாண்டுக்கான போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ள சூழலில், போட்டியில் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும் விவரங்களை <
பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான பீச் வாலிபால் போட்டியில் எகிப்து வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்து விளையாடியது விவாதத்திற்கு உள்ளாகியது. எகிப்து – ஸ்பெயின் போட்டியில், எகிப்து வீராங்கனைகள் ஹிஜாப்பிலும், ஸ்பெயின் வீராங்கனைகள் பிகினியிலும் இருந்தனர். சிலர் ஹிஜாப் அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒரே இடத்தில் இருவேறு கலாச்சாரங்கள் இருப்பது பேசுபொருளாகியுள்ளது.
ம.பி.யின் சாகரில் கோயில் சுவர் இடிந்து, 9 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் கூறியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், குழந்தைகளின் இழப்பை தாங்கும் சக்தியை அவர்களது குடும்பத்தினருக்கு, கடவுள் வழங்கட்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘சித்தா’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற 67வது ‘பிலிம் ஃபேர்’ விருதுகள் வழங்கும் விழாவில் இப்படம் 7 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகர், நடிகை, சிறந்த இசை, இயக்குநர் உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதுகள் வென்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.