India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் முதல்முறையாக தங்கப்பதக்கத்தை வென்றார். 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச், 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வயதான (37) டென்னிஸ் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. அந்த வகையில், நாளை திருவிழா நடைபெற உள்ளதால், அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் முக்கியத் துறைகளை தவிர்த்து பிற அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுகட்ட ஆக.10ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகும்.
தமிழகத்தில் இரவு 1 மணி வரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தன. நாஸ்டாக் சுமார் 2.5% மதிப்பினை இழந்தது. இதன் தாக்கம் நாளை இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் வட்டி விகிதம் குறையாததால் இவ்வாறு பங்குச்சந்தைகள் சரிவதாக நிபுணர்கள் சொல்கின்றனர். இதிலிருந்து சந்தை மீளுமா? அல்லது கரடிச்சந்தை தொடங்குமா என்று நிபுணர்கள் உற்று நோக்குகின்றனர்.
இலங்கைக்கு எதிரான 2ஆவது ODI போட்டியில், இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியுள்ளது. SL நிர்ணயித்த 241 ரன்கள் இலக்கை துரத்திய IND வீரர்கள் ரோஹித் (64), அக்ஷர் (44), கில் (35) தவிர பிறர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால், 42.2 ஓவர்களில் 208 ரன்களுக்கு IND அணி ஆல்அவுட்டானது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ODI தொடரில் 1-0 என்ற கணக்கில் SL முன்னிலையில் உள்ளது. 3ஆவது போட்டி, ஆக.7இல் நடைபெறுகிறது.
சாதி ரீதியான உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்குள் விஷம் இருப்பதாக விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சித்திருக்கிறார். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை வரவேற்கும் அவர், உள் ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்குத் தருவது எஸ்சி மக்களுக்குப் பேராபத்தாக முடியும் என்றும் கூறியிருக்கிறார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன என்று கமென்ட்டில் சொல்லுங்க
TNPL லீக் தொடரின் இறுதிப் போட்டியில், திண்டுக்கல் அணிக்கு 130 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை அணி. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் விளையாடிய கோவை 129/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராம் அரவிந்த் 27, அதீக் 25, சுஜய் 22 ரன்கள் எடுத்தனர். திண்டுக்கல் தரப்பில் சந்தீப் வாரியர், வருண் சக்ரவர்த்தி, விக்னேஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். எந்த அணி TNPL கோப்பையை வெல்லும்?
திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இருந்ததை போல அவ்வளது மகிழ்ச்சியானதாக இல்லாமல், சலிப்பாக மாறுகிறதா? அப்படியானால், நீங்கள் ரூம்மேட் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். எந்த ஒரு உறவிலும் ‘ஹனிமூன் பீரியட்’ உள்ளது. அதற்குப் பிறகு, அவர்களுடன் நேரத்தை செலவிடுவது வழக்கமானதாக அல்லது சலிப்பானதாக மாறும். இந்த சூழலில் துணையுடன் நேரத்தை செலவிட்டு உரையாட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து, ஹர்திக் பாண்டியா நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் அணி கேப்டனாக இருந்த ஹர்திக்கை வாங்கிய MI அணி நிர்வாகம், அவரை கேப்டனாக்கியது. ஆனால், 2024 ஐபிஎல் சீசனில் லீக் சுற்றுடன் MI வெளியேறியது. இதனால் அவரை நீக்க முடிவு செய்துள்ள அணி நிர்வாகம், சூர்யகுமாரை புதிய கேப்டனாக நியமிப்பது பற்றி ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளையாட்டு வகுப்பை (PET Period) கடன் வாங்கி வேறு வகுப்புகளை நடத்த வேண்டாம் என, அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு முக்கிய எனக் குறிப்பிட்டுள்ள அவர், அறிவியல், கணக்கு ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்பை கடன் வாங்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.