India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இடஒதுக்கீட்டு எதிரான போராட்டம் காரணமாக வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அவசர உதவி ஏதேனும் தேவைப்பட்டால், 8801958383679/80, 8801937400591 ஆகிய தொலைபேசி உதவி எண்கள் மூலம் தலைநகர் தாக்காவிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
சிம்பு – தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாகவுள்ள ‘STR 48’ படம் குறித்து கலை இயக்குநரான மூர்த்தி அப்டேட் கொடுத்துள்ளார். ஃபேண்டஸி டிராமாவாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் செட் மினியேச்சர் வடிவமைப்புப் பணிகள் 70% நிறைவடைந்துள்ளதாகக் கூறிய அவர், இப்படம் இந்திய சினிமாவின் ஒரு மைல் கல்லாக அமையும் என கூறியுள்ளார். அத்துடன், படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶குறள் எண்: 13
▶குறள்: விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. ▶பொருள்: உரிய காலத்தே மழை பெய்யாமல் பொய்க்குமானால், கடல்நீரால் சூழ்ந்த அகன்ற இப்பேருலகத்தில் வாழும் அனைத்து உயிர்களையும் பசி கொடுமை வாட்டி வதைக்கும்.
2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட தங்கப் பத்திரங்களுக்கு இறுதி விலையாக, யூனிட் ஒன்றுக்கு ₹6,938 வழங்கப்படும் என்று RBI அறிவித்துள்ளது. இது வெளியிடப்பட்ட அன்று இருந்த (₹3,119) விலையைவிட, சுமார் 122% அதிகமாகும். இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு கிராம் ஒன்றுக்கு ₹3,819 லாபம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. முதலீட்டை திரும்பப் பெற இன்றே (ஆக.,5) கடைசி நாள் என்றும் RBI தெரிவித்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது ODI போட்டியில், 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வாண்டர்சேவின் அபாரமான பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. 10 ஓவர்களில் 33 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை அவர் சாய்த்தார். இதன் மூலம் ODIஇல், முதல் 6 விக்கெட்களை வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த 3 மணி நேரமாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் மாதவரம், பெரம்பூர், கொளத்தூர், அண்ணா நகர், எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் மழை பொழிந்து வருகிறது. தாழ்வான பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 10ஆவது நாளின் இறுதியில் பதக்கப் பட்டியலில் இந்தியா 57ஆவது இடத்தை பிடித்துள்ளது. 33ஆவது ஒலிம்பிக்ஸ், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. இதில் சீனா, அமெரிக்கா உள்பட 206 நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா 3 வெண்கல பதக்கங்களுடன் 57ஆவது இடத்தில் உள்ள நிலையில், சீனா (19), USA (18), பிரான்ஸ் (12) தங்கப் பதக்கங்களுடன் முதல் 3 இடங்களில் உள்ளன.
தேர்தல் அரசியலில் கால் பதிக்கும் முன் நடிகர் விஜய் கடைசி திரைப்படமாக ‘தளபதி 69’ படத்தில் நடிக்கவுள்ளார். KVN நிறுவனத்தின் தயாரிப்பில் எச். வினோத் இயக்கவுள்ள அதிரடி அரசியல் கதைக்களத்திலான இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில், ‘பிரேமலு’ பட கதாநாயகி மமிதா பைஜூ நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், அவரிடம் படத்திற்கான லுக் டெஸ்ட் நடத்தப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க இயலாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளதாக அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து, நாள்தோறும் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறிக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், ‘திராவிட மாடல்’ திமுக அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க பாஜகவினர் மீது போலீசார் அடக்குமுறைகளை ஏவிவருவதாகத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.