India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*இங்கிலாந்து: சவுத்போர்ட் நகரில் நடந்த அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. *அமெரிக்கா: கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 4 லட்சம் மரங்கள் கருகின. *பாகிஸ்தான்: பஞ்சாப் மாகாணத்தில் போலியோ நோய் பரவல் அதிகரித்துள்ளது. *பெய்ரூட்: இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியதால் மத்தியக் கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காணப்படுகின்றன. இதனால், விடுமுறை அறிவிப்பு எதிர்பார்த்து பள்ளி மாணவர்கள் காத்திருகின்றனர்.
சக்தி வழிபாட்டுக்கு சிறந்த மாதமாக கருதப்படும் ஆடி பிரதமையில் (இன்று) பர்வதவர்த்தினியை வணங்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. அதிகாலையில் நீராடி, விரதமிருந்து, ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று, அம்மனுக்கு ஏலக்காய் மாலைச் சாற்றி, விளக்கேற்றி, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து, பர்வதவர்த்தினி அஷ்டகம் மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட்டால் வேண்டியவை அனைத்து நிறைவேறும் என்பது ஐதீகம்.
லவ் ஜிகாத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா அறிவித்துள்ளார். பழங்குடியின மக்களின் நலன்களைப் பாதுகாக்க வழிவகை செய்யும் சட்டத்தை அசாம் அரசு விரைவில் கொண்டு வரும் எனக் கூறிய அவர், இந்துக்கள் & முஸ்லீம்களுக்கு இடையே நிலம் விற்பனை செய்வது தொடர்பாகவும் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
‘தங்கலான்’ திரைப்படத்தின் ஒவ்வொரு பாடலிலும் பழங்குடி மக்களின் குரல் இசை மரபை மீட்டுருவாக்கம் வந்திருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் கூறியுள்ளார். இந்திய திரையுலகில் பழங்குடி இசையை பெருமளவு யாரும் பயன்படுத்தவில்லை எனக் கூறிய அவர், மண்ணின் பூர்வக்குடி மக்கள் பயன்படுத்திய வாத்திய கருவிகளை குறித்து ஆராய்ச்சி செய்து இந்தப் படத்தின் இசையை தான் அமைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
2013இல் காங்கிரஸின் மத்திய அரசில், உள்துறை இணையமைச்சராக முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் பதவி வகித்தபோது தேசிய பேரிடர் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அரசின் வழிகாட்டுதல்களில் ஓர் இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை” எனப் பதிலளித்துள்ளார். இதே நிலைதான் தற்போதுவரை தொடர்வதால் வயநாடு நிலச்சரிவு பேரிடராக அறிவிக்கப்படுவது சந்தேகமே.
*திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது – இபிஎஸ்
*2029 மக்களவைத் தேர்தலிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் – அமித் ஷா
*இந்தியாவில் சீன இறக்குமதியைவிட, முதலீட்டை அனுமதிப்பது சிறந்தது – அரவிந்த் விா்மானி
*நீண்ட தூர ஏவுகணை மூலம் ரஷ்ய நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்தது உக்ரைன்
*பாரிஸ் ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் தங்கம் வென்றார்.
✍நீயும் வாழு; பிறரையும் வாழ விடு. இதுதான் அஹிம்சை தத்துவம்தான். ✍உண்மையாக இருப்பவனுக்கு உபதேசங்கள் தேவையில்லை. ✍பகிர்ந்த துன்பம் பாதியாகிறது; பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது. ✍ஒவ்வொரு சொல்லுக்கும் ஆற்றல் உள்ளது; எனவே எதைப் பேசினாலும் சிந்தித்துப் பேசுங்கள். ✍உள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. ✍பாவச் செயல்களின் முடிவில் துன்பம் வந்தே தீரும். ✍உண்மைக்கு வரம்பு உண்டு; பொய்க்கு வரம்பு இல்லை.
ஒலிம்பிக்ஸ் தடகளத்தில் 100 மீ.,ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. மகளிருக்கான பிரிவில் செயின்ட் லூசியா வீராங்கனை ஜூலியன் அல்பிரெட் பந்தய தூரத்தை 10.72 வினாடிகளில் எட்டிப்பிடித்தார். அதேபோல, ஆடவருக்கான பிரிவில் அமெரிக்க வீரர் லைலீஸ் இலக்கை 9.78 வினாடிகளில் அடைந்து முதலிடம் பிடித்தார். இதன் மூலம் உலகின் அதிவேக வீரர் & வீராங்கனையாக இருவரும் உருவெடுத்துள்ளனர்.
திரையுலகைக் காக்க தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் உள்ளாட்சி கேளிக்கை (8%) வரியை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்துக்கும், நடிகர் சங்கத்துக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து மோதல்களால் திரைத் துறையே முடங்கும் நிலை உருவாகியுள்ளதாகக் கூறிய அவர், இருதரப்பும் பேசி இதற்கு தீர்வு காண முன்வர வேண்டுமெனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.