India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நம் உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்காவிட்டால், பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடல் உறுப்புகள் முக்கிய செயல்பாடுகளை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வதோடு, தோல் வறட்சி, குமட்டல், வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே நிலை, நாள் கணக்கில் நீடித்தால், சிறுநீரகக்கற்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகளவில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹51,760க்கும், கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹6,470க்கும் விற்பனையாகிறது. இறக்குமதி வரி குறைவு காரணமாக தங்கத்தின் விலை மேலும் குறைந்தால், அதில் முதலீடு செய்யலாம் என நடுத்தர மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ச்சியின் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தை சரிவை கண்டுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 484 புள்ளிகள் சரிந்து, 24,236 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,556 புள்ளிகள் சரிந்து, 79,422 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. வங்கி, ஆட்டோ, ஐடி உள்ளிட்ட அனைத்துத் துறை பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
கேரளாவில் நிஃபா வைரஸ் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், வவ்வால்களில் இருந்து அந்த வைரஸ் பரவியது உறுதியாகியுள்ளது. கடையில் பழம் வாங்கி சாப்பிட்ட சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள வவ்வால்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 6 வவ்வால்களில் நிஃபா வைரஸ் இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, வைரஸ் அறிகுறிகளுடன் 261 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே இலங்கையுடனான தோல்விக்கு காரணம் என, இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.
இத்தோல்வி வலியையும், ஏமாற்றத்தையும் தந்ததாகவும், நடுத்தர ஓவர்களில் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும் எனவும் கூறினார். பவர்பிளேயில் அதிகபட்ச ரன்களை சேர்த்திருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், 6 விக்கெட்டுகள் எடுத்த இலங்கை வீரர் ஜெஃப்ரிக்கு, ரோஹித் பாராட்டு தெரிவித்தார்.
2030ஆம்ஆண்டு அதானி குழுமத்தலைவர் பதவியிலிருந்து கெளதம் அதானி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 62 வயதான அவர், பொறுப்புகளை, குடும்பத்தினரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார். அதானிகுழும வணிகங்கள் தனித்தனியே பிரிய வேண்டுமா? அல்லது ஒன்றாக இருக்க வேண்டுமா? என்ற கேள்வியை 2 மகன்கள், 2 மருமகன்களிடம் முன்வைத்திருந்தார். அதில், ஒன்றாக இருக்க விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.
‘புஷ்பா 2’ படத்தின் ‘SOOSEKI’ பாடலில் வரும் நடன அசைவுகள் சவாலானதாக இருந்ததாக, நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். கை அசைவு காட்சிக்காக மட்டும் பல மணி நேரம் எடுத்துக் கொண்டதாகவும், பல டேக்குகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பாடல் தமிழில் ‘சூடான’ என தொடங்குகிறது. விவேகா பாடல் வரிகளை எழுதியுள்ளார். ராஷ்மிகாவின் அந்த ஸ்டெப்தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.
பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. மாவட்ட சுகாதார இயக்குநர்கள், பள்ளி மாணவர்களின் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பெயர் விடுபட்டிருந்தால் மாணவர்கள் வாயிலாக பெற்றோருக்கு தகவலளித்து பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற இடத்தைப் பிடிப்பதற்காக, ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை என்று, நடிகை டாப்ஸி கூறியுள்ளார். இப்போது சம்பாதிப்பதை வைத்து தனது குடும்பத்தை திருப்தியாக நடத்த முடியும் எனக் கூறிய அவர், அதே நேரத்தில் சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்க ஆசைப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். வெற்றிக்காக தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் பெய்த கனமழையால், தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளதால், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, அச்சாலை மூடியிருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், பனிலிங்க தரிசனம் செய்யமுடியாமல், பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இமாச்சலில் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட சிம்லா, குலு மாவட்டங்களில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.