India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வீட்டு வரைபட அனுமதி வழங்குவதை எளிதாக்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய திமுக அரசு, சென்னையில், 1,000 சதுர அடி இடத்துக்கு, அனுமதி வழங்க சுமார் ₹40,000 ஆக இருந்த கட்டணத்தை, ₹1,00,000 ஆக ஆக்கியிருப்பதுதான் எளிமையாக்குவதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சுயசான்று அடிப்படை எனக் கூறி ஊழலை அதிகாரப்பூர்வமாக்கி இருப்பதாகவும், எனவே கட்டண உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஜூலை மாதத்தில் வாகனங்களின் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டுள்ளது. மொத்த வாகன விற்பனை வளர்ச்சி 13.84% அதிகரித்துள்ள நிலையில், இருசக்கர வாகன விற்பனை வளர்ச்சி 17%, மூன்று சக்கர வாகன விற்பனை வளர்ச்சி 13%, பயணிகள் வாகன விற்பனை 10%, வணிக வாகன விற்பனை 6% வளர்ந்துள்ளன. அதேநேரம், டிராக்டர் விற்பனை 12% வீழ்ச்சியை கண்டுள்ளது. இவற்றில், இரு சக்கர வாகன விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.
சூரிய கட்சிக்கு எதிராக பேசும் கை கட்சித் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், டெல்லி தலைமையிடம் அறிவாலய தரப்பில் பேசியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தலைவர்களை டெல்லிக்கு அழைத்து விளக்கம் கேட்க, கட்சியை வளர்ப்பதற்காகவே அப்படி பேசியதாக விளக்கம் கொடுத்துள்ளனர். ஆனால், கூட்டணிக்குள் குழப்பத்தை விளைவித்து, கட்சியை வளர்க்க வேண்டிய தேவையில்லை என தலைமை எச்சரித்து அனுப்பியதாம்.
கறிவேப்பிலை ஜூஸில், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மை உள்ளதாக, மருத்துவர்கள் கூறுகின்றனர். தேங்கிய சளியைக் கரைக்கும் வல்லமையும், இரத்தத்தில் நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துவதோடு, இரத்த ஓட்டத்தை சீராக்கவும் பயன்படுகிறது. முக்கியமாக கறிவேப்பிலை சாற்றை தினமும் ஒரு டம்ளர் வீதம் 10 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால், முடி உதிர்தல் குறைந்து, அடர்த்தியாக மாறுவதை நாமே பார்க்கலாம்.
தான் நடிக்கும் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட, பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது, சக நடிகைகளுக்கு பொறாமையை ஏற்படுத்துவதாக, கெளரி கிஷன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ’96’, ‘அடியே’ ஆகிய தமிழ் படங்களிலும், சில மலையாளப்படங்களிலும் பாடல்களுக்கு நல்ல ரீச் கிடைத்தது மகிழ்ச்சி என்றார். தொடர்ந்து, இதேபோல பாடல்கள் அமைய வேண்டுமென ஆசைப்படுவதாகவும் அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பட்டியலின இளைஞரை தாக்கியதாக, பாஜக ஒன்றியச்செயலாளர் சதீஸ் குமாரை, SC/ST வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் அவர், வாகனத்திற்கான தவணைத்தொகை செலுத்தாத விவகாரத்தில், சங்கர் என்ற இளைஞரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சங்கர் அளித்த புகாரில், சதீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ச்சி காரணமாக, ஆசிய பங்குச்சந்தைகளும் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதனால், இந்திய பங்குச்சந்தையில் இன்று ₹15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பான் 20%, தென்கொரியா, தைவான் தலா 8% இழந்துள்ளன. சென்செக்ஸ் 2,200 புள்ளிகளும், நிஃப்டி 800 புள்ளிகளும் சரிவை சந்தித்துள்ளன. டாலருக்கு நிகரான ரூபாயின்
மதிப்பும் 83.78 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக முதலில் தகவல் அளித்த பெண் உயிரிழந்தார். சூரல்மலை கிராமத்தைச் சேர்ந்த நீது ஜோஜோவின் கணவர், மகன், பெற்றோர் உயிர் தப்பிய நிலையில், அவர் மட்டும் மண்ணில் புதைந்து பலியானார். கடந்த 30ஆம் தேதி நிலச்சரிவு தொடர்பாக விம்ஸ் நிறுவனத்திற்கு அவர் தகவல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில்தான் மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறப்படுகிறது.
நடப்பாண்டில் உலகம் முழுவதும் 1.24 லட்சம் ஊழியர்களை தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 34 நிறுவனங்களில் இருந்து 8,000 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இண்டெல் 15,000, மைக்ரோ சாஃப்ட் 1,000, யூகேஜி 2,200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. சமூக வலைதளமான எக்ஸ்-ன் (முன்னதாக ட்விட்டர்) மாற்று என அறியப்பட்ட KOO, அனைத்து ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்கியுள்ளது.
பெண்கள் உயர்பதவியை அடைவது சவாலாக கருதப்படும் அமெரிக்காவில், கமலா ஹாரிஸ் அதிபராக தேர்வாவது கடினம் என்ற கருத்து நிலவுகிறது. முக்கிய அரசியல் பதவிகளில் 4இல் ஒரு பங்கு மட்டுமே, பெண்களிடம் உள்ள சூழலில், அமெரிக்காவில் இதுவரை ஒரு பெண் கூட அதிபராக தேர்வானது இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு பெண்ணாக இருப்பது, கமலா ஹாரிஸ்-க்கு பின்னடைவை உண்டாக்கலாம் என்று, அவரது ஆதரவாளர்களும் கவலையடைகின்றனர்.
Sorry, no posts matched your criteria.