India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜார்கண்ட்டில் லாரி டிரைவர் ஒருவர் youtubeல் மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 20 ஆண்டுகளாக லாரி டிரைவராக இருக்கும் ராஜேஷ் ரவானி, பயணத்தின்போது தான் சமைப்பதை youtubeல் பதிவிட்டு வந்துள்ளார். இதன் மூலம் புகழ் பெற்ற அவரது சேனலை (R Rajesh Vlogs) 1.86M பேர் பின்தொடர்கின்றனர். டிரைவராக மாதம் ₹25K சம்பாதித்த அவர், தற்போது யூடியூபில் ₹5L வரை சம்பாதிக்கிறார்.
மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில் நாமக்கல்லைச் சேர்ந்த ரஜினீஷ் 720/720 மதிப்பெண் பெற்று, முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அதேபோல், 2ஆவது இடத்தை சென்னை மாணவர் சையது யூசுப், 3ஆவது இடத்தை சென்னை மாணவி ஷைலஜா பிடித்துள்ளனர். மேலும், 7.5% அரசு இட ஒதுக்கீட்டில் சென்னை சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் படித்த மாணவி ரூபா முதலிடம் பிடித்ததாக, அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார்.
கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவிற்கு ராகுல் காந்தியை அழைக்காதது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. குறிப்பாக, BJP உடன் DMK ரகசிய உறவு வைத்துள்ளதாகவும், ராகுலை அழைக்கவில்லை என்றும் எதிர்கட்சியான ADMK கடுமையாக விமர்சித்தது. இதுகுறித்து CM ஸ்டாலின், நாணய வெளியிட்டு விழா திமுக நிகழ்ச்சி அல்ல என்றும், மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் ராகுலை அழைக்கவில்லை எனவும் விளக்கமளித்தார்.
பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என, திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். EPS போல் ஊர்ந்துசென்று பதவி வாங்கும் அவசியம் DMKக்கு இல்லை என கூறிய அவர், DMK எதிர்த்தாலும், ஆதரித்தாலும் கொள்கையோடு இருக்கும் என, இந்திரா காந்தி கூறியதையும் நினைவுகூர்ந்தார். நமது உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என அண்ணா மீது ஆணையிட்டு அவர் உணர்ச்சி வசப்பட்டார்.
மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 6,630 MBBS இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டை விட கூடுதலாக 150 மாணவர்கள் இந்தாண்டில் சேர்க்கப்படுவார்கள் என அமைச்சர் கூறினார். மேலும், ஆகஸ்ட்.21 ஆம் தேதி மருத்துவக் தேர்வுக்குழு மூலமாக கலந்தாய்வு தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி (RBI) எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், வங்கியில் கணக்கு வைத்துள்ள நபர்கள், தங்கள் கணக்கை வேறு நபர்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. பணத்துக்கு ஆசைப்பட்டு பிறருக்காக பணம் பெறவோ, பணத்தை அனுப்பவோ செய்தால் சிறை செல்ல நேரிடும் என்று RBI கூறியுள்ளது. வங்கிக் கணக்கு விவரங்களை பிறருக்கு அளிக்க வேண்டாமென்றும் RBI கேட்டுக் கொண்டுள்ளது.
ரஜினியின் ‘வேட்டையன்’, சூர்யாவின் ‘கங்குவா’ அக்.10ஆம் தேதி நேருக்கு நேர் மோதுகின்றன. மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இருவரின் படமும் ஒரே நாளில் திரைக்கு வருவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து, இருவரின் ரசிகர்களும், வேட்டையன் – கங்குவா போஸ்டர்களை பதிவிட்டு, சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதம் செய்கின்றனர். இந்த ரேஸில் வெல்லப்போவது யார் என கமெண்ட் பண்ணுங்க.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் KKR அணியால் ரிங்கு சிங் தக்கவைக்கப்பட வாய்ப்பில்லை என தகவல் வெளியானது. அந்த அணியில் இடம்பெறவில்லை எனில், வேறெந்த அணிக்கு செல்வார் என, அவரது ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், “என் தேர்வு RCB தான். விராட் கோலி இடம்பெற்றுள்ள RCB அணிக்காக விளையாட விரும்புகிறேன்” என அளித்த பதில், எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியை, ஆந்திராவில் தமிழக சிறப்புப்படை போலீஸ் கைது செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட 22 பேரை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் திடீர் திருப்பமாக, சுரேஷின் மனைவி பொற்கொடியை ஆந்திராவில் கைது செய்து, விசாரணைக்காக சென்னைக்கு போலீஸ் அழைத்து வருகிறது.
ரக்ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வங்கிகளுக்கு விடுமுறை என பொதுவாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு, இந்த விடுமுறை தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்றும், வட மாநிலங்களான திரிபுரா, குஜராத், ஒடிசா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றனர்.
Sorry, no posts matched your criteria.