news

News August 19, 2024

கருணாநிதி நாணயத்தில் இந்தி: ஸ்டாலின் பதிலடி

image

அண்ணா, கருணாநிதி நாணயத்தில் மட்டும் தான் தமிழ் இடம்பெற்றுள்ளதாக CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். கருணாநிதி நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ வாசகம் உள்ளதாக கூறிய அவர், அனைத்து தலைவர்களுக்குமான நாணயத்தில் இந்தி, இங்கிலீஷ் மட்டுமே இருக்கும் என்றார். இதை புரிந்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித்தலைவர் தமிழகத்திற்கு வாய்த்திருப்பதாகவும், அவருக்கு அரசியலும் தெரியவில்லை; அறிவும் இல்லை எனவும் விமர்சித்தார்.

News August 19, 2024

World Photography Day: உங்களின் கனவு புகைப்படம் எது?

image

ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத தகவலை புகைப்படமானது ஒரு நொடிப்பொழுதிலே பேசிவிட்டு செல்கிறது. ஒரு சிறந்த புகைப்படவியல் என்பது, பார்வையாளரின் மனங்களில் ஊடுருவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். ஒரு காலத்தில் சிலர் மட்டுமே புகைப்பட கலைஞராக இருந்த சூழலில், நவீன யுகத்தில் ஸ்மார்ட்போன் வைத்துள்ள ஒவ்வொருவரும் புகைப்பட கலைஞர்தான். உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை கமெண்ட் பண்ணுங்க..

News August 19, 2024

வீட்டில் தனியாக உள்ள பெண்களுக்கு…

image

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு வன்கொடுமை செய்வது, கொள்ளையடிப்பது போன்ற குற்றங்கள் அரங்கேறுகின்றன. இதில் இருந்து தப்பிக்க சில யோசனைகள். *தானம் கேட்டு வருவோரை நம்பி அருகில் செல்வதைத் தவிர்க்கவும் *நகைகள் அதிகம் அணிவதை கைவிடவும் *சந்தேக நபர்கள் என கருதினால், உடனடியாக அருகில் இருப்போரை அழைக்கவும் *வீட்டில் தற்காப்பு கருவி வைத்திருப்பது அவசியம். SHARE IT

News August 19, 2024

அம்மா மருந்தகங்கள் இருக்கா? இல்லையா?

image

தமிழகம் முழுவதும் 2025 பொங்கல் அன்று ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். இதனால், ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களுக்கு மூடுவிழா நடத்தப்பட உள்ளதாக அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அம்மா மருந்தகம் என்று ஒரு திட்டமே இல்லை, ‘அம்மா கிளினிக்’ என்ற திட்டமே உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகிறார். உங்கள் ஊரில் ‘அம்மா மருந்தகம்’ இருக்கா?

News August 19, 2024

இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்

image

தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என RMC எச்சரித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், தி.மலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. தொடர்ந்து, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

News August 19, 2024

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது: செல்லூர் ராஜூ

image

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று அதிமுக EX மினிஸ்டர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எப்படி ஆட்சியை பிடிக்கும் என, அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு செல்லூர் ராஜூ, சட்டம் ஒழுங்கு பாதிப்பு, போதைப் பொருள் புழக்கத்தால், திமுக மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தலில் அதிமுக வென்று இபிஎஸ் CM ஆவார் என்றும் உறுதிபடக்கூறினார்.

News August 19, 2024

செப்.5இல் ரேஷன் கடை ஊழியர்கள் “ஸ்டிரைக்”

image

10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு முழுவதும் செப். 5ஆம் தேதி ரேஷன் கடை ஊழியர்கள் “ஸ்டிரைக்”கில் ஈடுபடவுள்ளனர். கூட்டுறவு சங்கத்தின்கீழ் செயல்படும் 35,000 ரேஷன் கடைகளை சேர்ந்த ஊழியர்கள், அன்றைய தினம் பணிக்கு வர மாட்டார்கள் என, ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. செப். 5ஆம் தேதி வியாழக்கிழமை ஆகும். இதனால் அன்று மக்களால் ரேஷன் பொருள்களை வாங்க முடியாத நிலை ஏற்படும்.

News August 19, 2024

கோர்ட்டில் ஆ.ராசா ஆஜர்

image

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரை, சட்டவிரோத பணப்பரிமாற்றம் என ED வழக்குப்பதிவு செய்துள்ளதாக, அவரது தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க EDக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்,
விசாரணையை செப்.18 ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தது.

News August 19, 2024

CM ஸ்டாலினுக்கு இணைச் செயலாளர் நியமனம்

image

CM-க்காக இணை செயலாளர் என்ற புதிய பதவி தற்காலிகமாக ஓராண்டு காலத்துக்கு தமிழக அரசு உருவாக்கியுள்ளது. 1954 IAS சட்டம் 4(2) விதியின்கீழ் முதல்வருக்காக இணைச்செயலர் பதவி உருவாக்கப்பட்டு, அதில் தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி இடமாறுதல் செய்யப்பட்டு நியமிக்கப்படுவதாக அரசு கூறியுள்ளது. இதனால் காலியாகும் அந்த இடத்திற்கு, பொது நூலக இயக்குநர் இளம்பகவத் நியமிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

News August 19, 2024

தமிழகத்தை உலுக்கும் மேலும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்

image

பொள்ளாச்சி சம்பவத்தை போல், கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் நடந்த போலி NCC முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம், தமிழ்நாட்டையே அதிர வைத்திருக்கிறது. ஏற்கெனவே, மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் அரசியல் பிரமுகர் உட்பட பலர் கைதாகி, விசாரணை நடைபெறுகிறது.

error: Content is protected !!