News September 13, 2024

EPS மீது ராஜேந்திர பாலாஜி அதிருப்தி?

image

EPS மீது ADMK முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ADMK-வில் விருதுநகர் மாவட்டத்தை அமைப்பு ரீதியில் பிரிப்பதை அவர் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் EPS மீது அதிருப்தியில் உள்ள அவர், அண்மையில் EPS கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சிக்கு செல்லாமல் புறக்கணித்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.

Similar News

News July 8, 2025

இந்தியாவின் ஒட்டக படை தெரியுமா?

image

ஏவுகணைகளை வைத்து தாக்கும் இக்காலத்திலும், இந்தியாவின் BSF-ல் ஒட்டக படை உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத ராஜஸ்தானின் தார் பாலைவன எல்லையில் இந்த வீர ஒட்டகங்கள் 24×7 ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. 1965-ல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரிலும் இவை பங்கேற்றுள்ளன. தற்போது 1,200 ஒட்டகங்கள் BSF-ல் உள்ளன. 1976 முதல் குடியரசு தின அணிவகுப்பில், இந்த வீர ஒட்டகங்கள் வண்ணமய ஆடைகளுடன் அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

News July 8, 2025

Non Interlocking ரயில்வே கேட் என்றால் என்ன?

image

கடலூரில் நிகழ்ந்த விபத்துக்கு ரயில்வே கேட்டில் Interlock இல்லாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. பொதுவாக ‘Non Interlocking’ ரயில்வே கேட் என்றால், அதனை மூடுவதற்கு தொலைபேசி மூலமே தகவல் அளிக்கப்படும். இவ்வாறு தகவல் கொடுக்கப்பட்டு கேட் மூடப்பட்டது உறுதியான பின்பே ரயில் செல்வதற்கு சிக்னல் அளிக்கப்படும். ஆனால், விபத்து நடந்த இடத்தில் சிக்னல் அளித்த பின்பு வேனுக்காக மட்டுமே கேட் திறக்கப்பட்டதாக தகவல்.

News July 8, 2025

கடலூர் பள்ளி வேன் விபத்து: CM ஸ்டாலின் இரங்கல்

image

<<16987125>>பள்ளி வேன் மீது ரயில்<<>> மோதியதில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நிவாஸ், சாருமதி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ₹5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், படுகாயமடைந்து ICU-வில் உள்ள 3 மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், அமைச்சர் MRK பன்னீர்செல்வத்தை நேரில் சென்று உதவி, ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!