news

News August 21, 2024

திமுகவும், புது அரசியல் கட்சிகளும் (1/3)

image

தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஏதோ ஒரு வகையில் திமுகவோடு தொடர்பு கொண்டவையாக இருக்கும். அதுகுறித்து ஒரு பார்வை. கருணாநிதி தலைமையில் திமுக அரசு 1972இல் ஆட்சியில் இருந்தபோது, அதிலிருந்து பிரிந்து அதிமுக எனும் புதுக்கட்சியை எம்ஜிஆர் ஆரம்பித்தார். பின்னர் 3 முறை எம்ஜிஆர் தமிழக முதல்வராகவும் பதவி வகித்தார். அவர் மறையும் வரை திமுக எதிர்க்கட்சியாகவே இருந்தது.

News August 21, 2024

திமுகவும், புது அரசியல் கட்சிகளும் (2/3)

image

1994இல் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக எனும் புது கட்சியை வைகோ ஆரம்பித்தார். அவருடன் பல திமுக மாவட்டச் செயலாளர்களும் மதிமுகவில் சேர்ந்தனர். இதையடுத்து, 1996இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஜிகே மூப்பனார் தொடங்கினார். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, தமாகா கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்றன. தமாகா புது சக்தியாக உருவெடுத்தது.

News August 21, 2024

திமுகவும், புது அரசியல் கட்சிகளும் (3/3)

image

2005இல் விஜயகாந்த், கல்யாண மண்டபம் இடிப்பு பிரச்னையால் திமுக மீது குற்றம்சாட்டி, தேமுதிகவை ஆரம்பித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் திமுக செயல்பாட்டை விமர்சித்து, 2010இல் நாதகவை சீமான் ஆரம்பித்தார். இதைத்தொடர்ந்து, தவெக கட்சியை விஜய் தற்போது ஆரம்பித்துள்ளார். நாளை தனது கட்சிக் கொடியை அவர் அறிமுகம் செய்யவுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

News August 21, 2024

12 மாவட்டங்களில் கனமழை

image

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல், மத்தியமேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

News August 21, 2024

தமிழக அரசுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: கோர்ட் அதிரடி

image

மதுரை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து பலியான சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கும் உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிபதி, “கள்ளச்சாராய மரணத்துக்கு ரூ.10 லட்சம் கொடுக்கும் உங்களால், சிறுமியின் குடும்பத்திற்கு கொடுக்க பணம் இல்லையா?” எனக் கேள்வியெழுப்பினார். மேலும், அரசுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

News August 21, 2024

சூரியை நேரில் அழைத்து பாராட்டிய கமல்

image

‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த கமல்ஹாசன், நடிகர் சூரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அத்துடன், அப்படத்தின் இயக்குநர் பி. எஸ். வினோத்ராஜ், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரை வாழ்த்தி, மடலொன்றையும் வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்ற அப்படத்தைக் காண, தமிழ் சினிமா ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

News August 21, 2024

விஜய் கட்சி கொடியில் இடம்பெறும் லோகோ

image

நாளை கட்சிக்கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு, தவெக தலைவர் விஜய் சார்பில், காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தவெக அறிக்கைகளில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வாசகம் இடம்பெறும். அதை மையமாக வைத்து புதிய லோகோ தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக, வெற்றியை குறிக்கும் வகையில் வாகை மலர் இடம்பெற உள்ளதாகவும் கூறப்பட்டது.

News August 21, 2024

வாழை: மாரி செல்வராஜை பாராட்டிய விக்னேஷ் சிவன்

image

வாழை திரைப்படத்தின் சிறப்புக்காட்சியை கண்ட திரையுலக பிரபலங்கள், அப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜை மனந்திறந்து பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனும் இணைந்துள்ளார். வாழையை திரையில் பார்த்து மெய் சிலிர்த்ததாகக் கூறிய அவர், மாரி செல்வராஜ் & அவரது படைப்புகள் மீதான மரியாதை 1,000 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

News August 21, 2024

டிஜிட்டல் வடிவ செய்திகளை அதிகம் விரும்பும் மக்கள்!

image

செய்திகளை ஆப்ஸ், வெப் போன்ற டிஜிட்டல் வடிவ வெளியீடுகளில் படிக்கவே மக்கள் அதிகம் விரும்புவதாக, Humanify ஆய்வில் தெரியவந்துள்ளது. வாசகர்களில் 84% பேர் டிஜிட்டல் பிளாட்பார்ம்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உள்ளங்கைக்குள் அடங்கும் ஃபோனில், தகவலைப் பெற முடிவதே இதற்கு காரணமென எனவும் அவர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில், நம்பகத்தன்மைக்கு பாரம்பரிய ஊடகங்களையே அவர்கள் நாடுவதாக தெரியவந்துள்ளது.

News August 21, 2024

மின் கணக்கீட்டில் புதிய மாற்றம்

image

வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதனை ஒரே மின் இணைப்பாக மாற்றி, ஒரே கட்டணமாக கணக்கீடு செய்யும் புதிய நடைமுறையை மின்வாரியம் அமல்படுத்தியுள்ளது. வீட்டு இணைப்பு ஒவ்வொரு பில் கணக்கீட்டிலும், 100 யூனிட் இலவசமாக கிடைக்கிறது. இந்நிலையில், வருவாயை பெருக்கும் நோக்கில், இரு மின் இணைப்புகளை ஒன்றாக இணைத்து, 100 யூனிட் கழித்து, மற்ற யூனிட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

error: Content is protected !!